Jump to content

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Journalist-P.Saththiyamoorthy-Remembrance-Day.jpg

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்!

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தியின் நினைகூரல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரையாற்றப்பட்டது.

இறுதி யுத்த காலத்தில் ஊடகப் பணியில் அர்ப்பணிப்புடன் பங்கெடுத்திருந்த ந.சத்தியமூர்த்தி இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். அவரது உன்னதமான ஊடகப் பணியினை கௌரவித்து விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Journalist-P.Saththiyamoorthy-Remembrance-Day-2.jpg

http://athavannews.com/ஊடகவியலாளரும்-நாட்டுப்ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.