Jump to content

நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்


Recommended Posts

நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்

 

 

 

by : Dhackshala

Mahara-1-720x450.jpg

மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகம, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டடத்தில், சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் நன்கொடை செய்யப்பட்ட காணியிலேயே இப்பள்ளிவாசல் இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளது.

ராகம பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காகப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பள்ளிவாசலுக்கு மக்கள் தொழுகைக்காக வருவதைத் தடை செய்திருந்தனர்.

இதேவேளை, இப்பள்ளிவாசலைச் சுத்தம் செய்யவோ அல்லது அங்கிருந்து பொருட்களை எடுக்கவோ, எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த பள்ளிவாசல் கட்டடம், அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் புனரமைக்கப்பட்டு, ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளதுடன், உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mahara-2.jpg

Mahara-3-360x480.jpg

 

Rishat-1-561x480.jpg

http://athavannews.com/மஹர-சிறைச்சாலையில்-100-வருட/

 

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

ராகம பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காகப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பள்ளிவாசலுக்கு மக்கள் தொழுகைக்காக வருவதைத் தடை செய்திருந்தனர்.

ஏப்ரல் 21, 2019 - இதை வைத்தே சிங்களம் முஸ்லீம்களை நசுக்கி வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையான கண்டனங்கள் .!

tenor.gif

பாரபட்சம் பார்க்காமல் அதையே செய்கிறான்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.