Jump to content

விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?


Recommended Posts

விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

  •  
அபிநந்தன்

முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.

 

``நிலைமை பதற்றமாக இருந்தது. காலையில் இருந்து சில விமானங்கள் மேலே பறந்து செல்லும் சப்தம் கேட்டது'' என்று அவர் நினைவுகூர்ந்தார். ஒரு நாளுக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ஜெட் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்து பாலக்கோட் பகுதியில் குண்டுகள் வீசியது. இந்த இடம் காஷ்மீர் பகுதியின் சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ளது.

``எனவே அந்த நடவடிக்கை எதிர்பாராதது அல்ல. ஆனால் சுமார் 10 மணிக்கு நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அடுத்தடுத்து, இரண்டு பெரிய வெடி சப்தம் கேட்டது'' என்றார் ரசாக்.

செளத்ரி முகமது ரசாக்

``பேசுவதை நிறுத்திவிட்டு என்ன நடந்தது என்று பார்த்தேன். ஆனால் பிறகு உள்ளே வந்து மறுபடியும் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து, வானில் பெரிய புகை மூட்டம் தோன்றியதைப் பார்த்ததாக ரசாக் கூறினார். அது வேகமாக தரையை நோக்கி வந்தது, நெருக்கத்தில் வந்தபோது, ஆரஞ்சு நிற நெருப்பு பந்து ஒன்று தெரிந்தது. அது இன்னும் நெருக்கத்தில் வந்தபோது, சுடப்பட்டதில், தீ பிடித்த ஒரு விமானத்தின் சிதைந்த பாகம் என்று தெரிந்தது.

எரிந்து கொண்டிருந்த விமானம், ரசாக்கின் வீட்டில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் விழுந்தது. இருந்தபோதிலும், அது பாகிஸ்தான் விமானமா அல்லது இந்திய விமானமா என்று உறுதியாக தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

தாம் கண்ட காட்சியில் இருந்து மீள்வதற்கு அவர் முயன்றார். ஆனால் சில நொடிகளில் வேறொரு புறம் திரும்பியபோது, அந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள மற்றொரு மலைக் குன்றின் மீது ஒரு பாராசூட் இறங்கியதைப் பார்த்துள்ளார்.

அருகில் வசிக்கும் அப்துல் ரகுமான் என்பவரை அழைத்து, அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?

விமானத்தின் உடைந்த துண்டுகள்
Image caption விமானத்தின் உடைந்த துண்டுகள்

பாராசூட்டை ஏற்கெனவே பார்த்துவிட்ட நிலையில், அது பாகிஸ்தானிய வீரராக இருக்கலாம் என்று கருதியதாக அப்துல் ரகுமான் கூறியுள்ளார். ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி அவர் ஓடியுள்ளார்.

``முதலில் பாராசூட் அங்கே விழும் என்று தான் நான் நினைத்தேன்'' என்று தன் வீட்டுக்கு எதிரே மலையில் இருந்த ஒரு மரத்தை அவர் காட்டினார்.

``ஆனால் பாராசூட்டை இயக்கியவர் திறமையாக அதன் போக்கை மாற்றி, மலையில் சமவெளிப் பகுதியில் தரையில் இறங்கினார்'' என்று அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

பாராசூட் இறங்கியபோது அதில் இந்தியக் கொடி இருந்ததைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார். சீக்கிரம் அங்கே சென்றதாகவும் கூறினார்.

அபினந்தன் என்னைப் பார்த்தார். இன்னும் அவருடைய உடலில் பாராசூட் இருந்தது. ஆனால் ஒரு பாக்கெட்டில் கை விட்டு ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தார்.

``துப்பாக்கி என்னை நோக்கி இருந்தது. இது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்று அந்த பைலட் கேட்டார்.''

``பாகிஸ்தான் என்று நான் சொன்னேன். எந்த இடம் என்று அவர் கேட்டார். குவில்லா என்று தெரிவித்தேன்'' என்று கூறிய அப்துல் ரகுமான் புன்னகைத்தார்.

அப்துல் ரகுமான்படத்தின் காப்புரிமை BBC Sport
Image caption அப்துல் ரகுமான்

``அவர் இதுபோல அமர்ந்தார்'' என்று அபினந்தன் அமர்ந்திருந்ததை அப்துல் ரகுமான் நடித்துக் காட்டினார்.

``பிறகு அவர் துப்பாக்கியை வயிற்றுப் பகுதியில் வைத்து விட்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு, ஜெய் ஹிந்த் என்று முழங்கினார். மறுபடியும் கைகளைத் தூக்கி காளி மாதாவுக்கு ஜெய் என்று முழங்கினார்'' என்று அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

``கொஞ்சம் தண்ணீர் தருமாறு என்னிடம் அவர் கேட்டார். தன்னுடைய பின்பகுதி ரொம்பவும் அடிபட்டிருப்பதாகக் கூறினார்'' என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கிராமத்தினர் அந்த இடத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். அவர்கள் "Pakistan ka matlab kia - lailha illallah" & "Pak Fouj Zindabad" என்று கோஷங்கள் எழுப்பினர்.

உஷாராகிவிட்ட அபினந்தன் தாம் அமர்ந்திருந்த நிலையை மாற்றிக் கொண்டார். ஒரு கையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு, கால் பகுதியில் ஒரு பாக்கெட்டை திறந்தார். ஒரு காகிதத்தை எடுத்து, கசக்கி, மாத்திரையை போல வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வேறொரு காகிதத்தை அவர் எடுத்தார். அது பெரியதாக இருந்தது. அதை அவரால் விழுங்க முடியவில்லை. அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்தார். பிறகு கீழ்ப் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினார் என்று அப்துல் ரகுமான் நினைவுகூர்ந்தார்.

``அவரைப் பிடிக்க நான் முயற்சி செய்தேன். ஆனால் அவரிடம் ஆயுதம் இருந்தது. எனவே அவரை விரட்டிக் கொண்டு நான் ஓடினேன். கிராமத்தினர் வேறு சிலரும் சேர்ந்து விரட்டினர்.''

முடிந்து போன ஓட்டம்

முதலில் புழுதியாக இருந்த பாதையில் அவர் ஓடியதாகவும், பிறகு திசையை மாற்றிக் கொண்டு புகை வந்த திசையை நோக்கி ஓடியதாகவும் அப்துல் ரகுமான் கூறினார். எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகத்தில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. கிராமத்தினர் சிலர் அவரை நோக்கி கற்களை வீசினர். ஆனால் அவர் ஓடிக் கொண்டே இருந்தார். ஓர் ஓடையின் அருகில் சென்றதும் அதில் குதித்தார். அதில் தண்ணீர் அளவு குறைவாக இருந்தது. சிறிது நின்று, தண்ணீர் குடித்தார்.''

ஓடை

அருகில் வசிக்கும் முகமது ரபீக்கிடம் சொல்லி துப்பாக்கி எடுத்து வரும்படி கூறினேன்.

அருகில் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக ரபீக் கூறினார்; அவர் வீட்டுக்கு விரைந்து சென்று துப்பாக்கி எடுத்துக் கொண்டு, ஓடையை நோக்கி ஓடி வந்தார்.

``நான் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர் ஒருவர் என்னிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு, அபினந்தனை சுட வேண்டாம் என்று கூறினார். அவரை காயப்படுத்தாமல், உயிருடன் பிடிக்க விரும்புகிறோம் என்று கூறினார். எனவே வானை நோக்கி இரண்டு முறை அவர் துப்பாக்கியால் சுட்டார்.''

நாங்கள் அந்த இடத்துக்குச் செல்வதற்குள், ராணுவத்தினர் வந்துவிட்டனர். ``ராணுவ வீரர் ஒருவரும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தண்ணீரில் குதித்து "Naara-e-Haidri, Ya Ali" என்று கூறிக் கொண்டு அவரைப் பிடித்தார்.''

``அபினந்தன் துப்பாக்கியை போட்டுவிட்டு, கைகளைத் தூக்கினார். ராணுவ வீரரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.'' ராணுவத்தினர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்'' என்று ரபீக் நினைவுகூர்ந்தார்.

விமானம் விழுந்த இடம்

விமானம் விழுந்த இடம்:
Image caption விமானம் விழுந்த இடம்:

அபினந்தன் பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே கோட்லா பகுதியில் முகமது இஸ்மாயில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு தான் அபினந்தனின் சிதைந்த விமானத்தின் பாகங்கள் விழுந்தன.

நடு வானில் விமானம் வட்டமடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது, பள்ளிக்கூடத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

``வீடுகள் இருந்த பகுதியை நோக்கி அது சென்றது. நல்லவேளையாக திறந்தவெளி பகுதியில் கடைசியாக விழுந்தது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை'' என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.

குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை முதலில் உறுதி செய்து கொண்டு, விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்துக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

நொருங்கிய விமானம்

``நான் அங்கே சென்றபோது, விமானம் அப்போதும் எரிந்து கொண்டிருந்தது. சிறிய வெடிப்புகளும் நிகழ்ந்தன. அதன் மீது இந்தியக் கொடி வரையப்பட்டிருந்ததை நான் பார்த்தேன்; சில மணி நேரங்களுக்கு விமானம் எரிந்து கொண்டிருந்தது.''

சிதைந்த பாகங்கள் அங்கே இரண்டு வாரங்கள் கிடந்தன. பிறகு அவற்றை ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த இடத்தில் இப்போதும் பெரிய பள்ளம் இருக்கிறது. சிதைந்த சில பொருட்களையும் அங்கே காண முடிந்தது.

பல வாரங்களாக அருகில் உள்ள மக்கள் அந்த இடத்தை வந்து பார்த்துச் சென்றதாக முகமது இஸ்மாயில் தெரிவித்தார்.

Presentational grey line

அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்த தருணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.