Jump to content

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!


Recommended Posts

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!

 

 

by : Benitlas

ZvpsvChR.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் பங்கேற்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறாத நிலையில், ஐந்து வருடங்களின் பின்பு இன்று இந்தப் போட்டி இடம்பெறுகின்றது.

http://athavannews.com/முதலில்-துடுப்பெடுத்தா-8/

Link to comment
Share on other sites

அவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் சதம் மற்றும் வலுவான இணைப்பாட்டம் காரணமாக இக்கட்டான நிலையிலிருந்து மீண்டெழுந்த இலங்கை அணி 345 ஓட்டங்களை குவித்துள்ளது.

ERsyWblWsAgsA_H.jpg

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அடணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழஙக்கியது. அதன் காரணமாக இலங்கை  அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடன் ஷெல்டன் கோட்ரிலின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய குசல் பெரேராவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளரான ஷெய் ஹோப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை  அணி 2.3 ஓவர்களுக்கு 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றது.

எனினும் 3 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் இணைப்பாட்டமானது அணியை சிறந்த நிலைக்கு கொண்டு சென்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியினரின் பந்து வீச்சுகளை இவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு அனைத்து திசைகளிலும் அடித்தாட இலங்கை அணியானது 2 விக்கெட்டுகளுடன் 15 ஓவர்கள் முடிவில் 76 ஓட்டங்களையும், 26.2 ஓவர்கள் முடிவில் 150 ஓட்டங்களையும் பெற்றது.

36.3 ஆவது ஓவரில் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்களில் தனது இணடாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுணையில் அவருக்கு தோள் கொடுத்து ஆடி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 38 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார்.

ERsesxmXYAMKmA5.jpg

 

ERsgL-iWkAE8SlO.jpg

தொடர்ந்தும் இவர்கள் ஆடுகளத்தில் நிலைத்து நின்றாட இலங்கை அணியானது 40 ஓவர்கள் நிறைவில் 246 ஓட்டங்களை பெற்றது.

எனினும் இதன் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கிய குசல் மெண்டீஸ் 40.2 ஆவது ஓவரில் மொத்தமாக 119 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மெத்தியூஸ் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவிஷ்க பெர்னாண்டோவும் மொத்தமாக 123 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் அல்சாரி ஜோசபின் பந்து வீச்சில் கீமோ போலிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்ப மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனர்.

இதனால் இலங்கை அணி 43 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றது.

இந்த 345 ஓட்டங்கள் பெறுவதற்கு 33 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.  அதன்படி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் பெறப்பட்ட அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை இதுதான்.

இதனால் இது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கு முன் இங்கிலாந்து பெற்ற 333 ஓட்டங்கள்தான் சிக்ஸர் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கோர்ட்ரல் 4 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/76568

Link to comment
Share on other sites

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 161 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற  மேற்கிந்திய தீவுகளின் அணியின் தலைவர் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்ணவும் குசால் பெரேராவும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்ததால் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டது.

எனினும் குசல் மென்டிஸ் அவிஸ்க பெர்ணான்டோ இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக விளையாடிதுடன் இருவரும் சதங்களை பெற்றதுடன் மூன்றாவது விக்கெட்டிற்காக 239 ஓட்டங்களை பெற்றனர்.

srilanka_win_1.jpg

அவிஸ்க பெர்ணான்டோ 127 ஓட்டங்களை பெற்ற அதேவேளை மென்டிஸ் 119 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 345 ஓட்டங்களை பெற்றது.

பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது விக்கெட்டிற்காக 64 ஓட்டங்களை பெற்றபோதிலும்  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 39 ஓவர்களில் 184 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியயை சந்தித்தது.

 

srilanka_win_2.jpg

மேற்கிந்திய அணியின் சார்பில் மீண்டும் ஹோப் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களை பெற்ற அதேவேளை கை அணியின் வனிந்து ஹசரங்கவும் சந்தகனும் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் இரண்டில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

https://www.virakesari.lk/article/76583

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.