Jump to content

நிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.! விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.?


Recommended Posts

நாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை உபகரணங்கள் இல்லாமல் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வாகும். பூமி 7 tectonic plates-களால் உருவாகியுள்ளது. இந்த ஏழில் பசிபிக் tectonic plate தான் மிகப் பெரியது. இது தொடர்ந்து சீராக நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பூமிக்கு அடியில் இந்த plate நகருவதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவை மிக மெதுவாக நகர்கிறது.

பலமான அதிர்வு..
இந்த tectonic plate-கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதாலோ அல்லது உரசி கொள்வதாலோ நிலநடுக்கம் ஏற்படுகிறது. tectonic plate-களின் மேற்பரப்பு ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதை fault plane என்கின்றனர். tectonic plate-கள் மெதுவாக உரசி கொண்டால் ஏற்படும் நில அதிர்வை நம்மால் உணர முடியாது. ஆனால் பலமாக உரசி கொண்டால் சுமார் 1,000 மைல் வரை நில அதிர்வை உணர முடியும்.

மலைகளை உண்டாக்கும்..
பூமியில் நிலநடுக்கம் உண்டாகும் இடத்தை Hypo center என்கிறோம். தரை பகுதியில் நில அதிர்வு ஏற்படும் இடத்தை Epicenter என்கிறோம். இரண்டு நிலதட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மிக வலிமையாக மோதுவதால் உருவாகும் நிலநடுக்கம் convergent boundary எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது தான், விண்ணை முட்டும் அளவிலான பிரமாண்ட மலைகள் தோன்றுகின்றன.

Divergent boundary எனப்படுவது நிலத்தட்டுகள் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்கி செல்வதால் நிகழ்கிறது. நிலத்தட்டுகள் இவ்வாறு விலகுவதால் கடல் பகுதிகள் தோன்றுகின்றன. இரு நிலத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் நிகழ்வது transform fault.


துல்லிய அளவு எப்படி.?
சர்வதேச அளவில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை கண்டறிய seismograph என்ற கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல நிலநடுக்கம் எங்கே நிகழ்ந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய Triangulation என்ற முறையை பயன்படுத்துகின்றனர். இதனை செயல்படுத்த 3 seismograph கணக்கிடும் நிலையங்கள் தேவை.

3 seismograph நிலையங்களில் இருந்து P மற்றும் S Waves பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட வேண்டும். இதில் P Wave எனப்படும் Primary Wave என்பது நிலநடுக்கம் நிகழ்ந்த உடனே நேராக பயணிக்கும் அதிர்வாகும். secondary wave எனப்படும் S Wave அலை போல பயணிக்கும். ஆனால் இது நிலத்தில் பெரிய அளவில் பயணிக்காது.
surface wave என்ற அலை நிலத்தின் ஒவ்வொரு பரப்பாக பயணிக்கும். இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய அலைகள் ஆகும். மேற்கண்ட அலைகள் பற்றிய தகவல்களை மூன்று seismograph நிலையங்களில் இருந்து பெற்று ஆராய்வதன் மூலம், நிலநடுக்கம் எங்கே தோன்றியது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

நிலநடுக்கத்தின் போது வெளியாகும் சக்தி ரிக்டர் என்ற அளவு கோலில் அளவிடப்படுகிறது. ரிக்டர் seismograph கருவியால் அளவிடப்படுகிறது. இதில் ரிக்டர் அளவில் 1 எனப்படும் அளவு 54 கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்து வெடிக்கும் போது உண்டாகும் ஆற்றலுக்கு ஈடானது. அதுவே 5 ரிக்டர் என்பது 18 லட்சம் கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்தை வெடிக்க செய்வதால் உண்டாகும் ஆற்றலுக்கு ஈடாகும்.

https://www.polimernews.com/dnews/101754/நிலநடுக்கம்-சரியாக-எங்குஏற்பட்டது.!-விஞ்ஞானிகள்துல்லியமாக-கூறுவது-எப்படி.?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.