Jump to content

நீதிமன்றினால் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர் பதவிகளை வழங்கியுள்ளார் - ஜே.வி.பி.


Recommended Posts


(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும். நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர்  பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.


vijitha.jpg

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது. தேர்தல் காலத்தில் தேசதுரோக ஒப்பந்தமாக விமர்சிக்கப்பட்ட எம்.சி.சி. ஒப்பந்தத்தை பொதுத்தேர்தலுக்கு பிறகு இரகசியமான முறையில் கைச்சாத்திடும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கம் தரமான  நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை. ஆனால் தமக்கு தேவையானவர்களை நாட்டுக்கு கொண்டு வந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் நடடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் ஒன்றும் புதிதான விடயமல்ல, சர்வதேசத்தின் மத்தியில் நாடு பல நெருக்கடியை எதிர் கொள்ள 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் நாயகத்துடன் செய்துக் கொண்ட கூட்டு அறிக்கையே பிரதான காரணம்.

https://www.virakesari.lk/article/76573

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:


(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும். நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர்  பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.


vijitha.jpg

 

இங்கு பொதுவாக ராணுவ அதிகாரிகளே உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்। இவர்களுக்கு எதிராக குற்றசாட்டுகள் இருக்கும்போது பதவி உயர்வுகள் வழங்கப்படுமாக இருந்தால் அது தமிழ் மக்களை பழி வாங்க, அல்லது ஒரு எச்சரிப்புக்காக இருக்கலாம்। அனல் இவர்களுக்கு எதிராக நீதி மன்றில் குற்றம் சடடபட்டுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை।

Link to comment
Share on other sites

On 2/26/2020 at 8:26 PM, ampanai said:

. நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர்  பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

ஒரு குற்றவாளியிடமிருந்து வேறு என்னத்தை தான் எதிரிபார்க்க முடியும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.