Jump to content

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்


Recommended Posts

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
qq.jpg

அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ் மக்களின் எதிர் பார்ப்பு இந்த விடயத்தில் கூட ஐ.நா சபை உறுப்படியாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே இனி எதிர்வரும் காலங்களிலாவது  இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 30.140.1 தீர்மாணங்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது  சரியான ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா முயற்சிக்க வேண்டும்.

மேலும் உள்ளுர் விசாரணை என்பது எப்படி அமையும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக அமையும். குற்றவாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசிடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதலுக்கானசூத்திரதாரிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது.

மன்னார் மனிதப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒழுங்காக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்த காலத்துக்கு உரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசு தயங்குகிறது.

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா? இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும்

அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உரிதிப்படுத்தப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76581

Link to comment
Share on other sites

தேர்த்தல் நெருங்க நெருங்க தானே இப்படியான அறிக்கைகள் வருகின்றன.  உலக நாடுகளை வளைத்துபோட்டு சிறிலங்கா இனவாத அரசுக்கு ஒரு பாடம் கற்பிப்பதை விட்டு விட்டு இப்போ குய்யோ முறையோ என நடிப்பது சுயநலம் அன்றி வேறொன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்ல இவைக்கு 100 நாள் தேவைப்பட்டுள்ளது.

இவர்களும் சோதனை சாவடிகள் பெருகட்டும் என்று காத்திருந்த கணக்கா.. சரியா தேர்தல் வர மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 

மக்களோ வாள் வெட்டு.. கஞ்சா.. உள்ளூர் காடைத்தனம்.. குறையும்.. என்று சோதனை சாவடிகளை இட்டு தமக்குத் தாமே தேற்றிக் கனகாலமாகி விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா?

ஈழத்து எம் ஜி ஆர் போவாராம், இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்தை விட்டு பின்தள்ளிப்போவார்களாம், அதை ஒரு சிலர் படம் பிடித்து போடுவார்களாம்.  எங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் ஒரே அரசியற் தலைவர் இவரே, என்று மக்கள் இவருக்கு வாக்களிப்பார்களாம்.  இல்லை.... தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர் சும்மா இருக்கமாட்டார், எங்களோடு பேசி தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார் என்று மத்தியிலிருந்து ஒரு கதை அடிபட்டுது. நானும் ஐயா தூங்காமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். அவர் இன்னும் தூங்கி எழும்பவில்லைபோல் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

பல வாரங்களாக 2 அல்லது 3 இடங்களில் இறக்கப்பட்டு தமிழ் மக்கள் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள்.

டக்கி தன்ர காமாலைக் கண்ணுக்கு எந்த சோதனைச் சாவடியும் தென்படேலை என்டும் அப்பிடி இருந்திருந்தா தான் ஒருகாலை தூக்காமல் வந்திருக்க முடியாது என்டும் தன்ர விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கு.

அடிக்கடி தாங்களே தமிழர்ற்ற ஏக பிரதிநிதிகள் கூறும் சம்பந்தன் சுமந்திரன் கோஷ்டி இதைப்பற்றி மூச்சு கூட வெளிவிடேல்லை. அவை குகதாசன் குடுத்த கனடா பணத்தை எண்ணி முடியேல்லை போல இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா? இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும்

உதுக்குத்தான் முன்னாடியே கத்தினோம் , கூத்தமைப்பிற்கு குத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை 
கோத்தா அல்லது அவன் ஆதரவு கட்சிக்கு  குத்தி நிம்மதியாகவேனும் சீவியுங்கள் என்று .
உங்கள் தமிழ் தேசிய கொள்கைகளை பார்த்து கண்ணீர் விட்ட புலம்பெயர்ஸ் ஒருவரும் உங்களுடன் வந்து உங்களுடன் சேர்ந்து சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறப்போவதில்லை . இதுவும் ஒருவகையில் நல்லதுதான் 
சோதனைச்சாவடிகளில் வைத்து காய்ச்சி எடுத்தால் சிலவேளைகளில்  உங்கள் மர மண்டைகளில் இருந்து கூத்தமைப்பு மாய்மாலம்  வெளியேறி தெளிவு பிறக்கலாம்.  அவனே ஐ நாவுக்கு செருப்பால் அடித்தது போல் இணை அனுசரணையில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்லிப்போட்டு கெத்தாக வர்ரான் 
இங்கே சிவ் மோகன் மாமா ஐநா கடை திறந்து யாவாரம் பார்க்கப் போறாராம்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.