Jump to content

VPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?


Recommended Posts

VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன.

 

இப்படி, காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முடக்கப்பட்ட இணையம் இந்த ஜனவரி மாதம்தான் மீண்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் 2G வேகத்தில்தான் தரப்பட்டது. அதிலும் பல கட்டுப்பாடுகள். மக்களுக்கு சில முக்கிய இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் பட்டியல் (Whitelisted Websites), இணையதள சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு அதை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது அரசு.

 

இந்தப் பட்டியலில் எந்தச் சமூக வலைதளங்களும் இடம்பெறவில்லை. கடந்த வாரம், இந்தத் தடையை மீறி VPN பயன்படுத்தியதற்காகப் பலர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை. இந்த VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

இது போன்ற VPN சேவைகளை இன்று எளிதாக பிரவுசர்களிலும் பிரத்யேக ஆப்கள் மூலமும் பெற முடியும். இதைப் பயன்படுத்தியதற்குத்தான் காஷ்மீரில் சிலர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், சட்டப்படி VPN பயன்படுத்தியதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் எந்தெந்தச் சட்டங்களின்கீழ், ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது என்பதைப் பார்த்தோம். சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) 13-வது பிரிவிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழும், இபிகோ 188 மற்றும் 505-ம் பிரிவுகளின் கீழும் சுமார் 200-க்கும் அதிகமான பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில் கேள்வி என்னவென்றால், சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்கே FIR போடப்பட்டதா அல்லது தவறாக அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டதா என்பதுதான். UAPA சட்டம், இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களையே சட்டவிரோதச் செயல்பாடுகள் எனக் குறிப்பிடுகிறது. இது கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும் இருக்கலாம் என்பதால் இந்தப் பதிவுகளில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யமுடியும். பொதுமக்கள் இடையே பயத்தையும் இரு பிரிவினர் இடையே மோதலையும் வன்முறையையும் தூண்டும் செயல்களையே இபிகோ 505-ம் கீழ் தண்டிக்கமுடியும்.

 
 

இதனால் VPN மூலம் சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்காக மட்டும் இந்த UAPA மற்றும் இபிகோ 505-ம் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்துவிட முடியாது. இபிகோ 188-ம் பிரிவின்கீழ் வேண்டுமானால் வழக்கு பதிவுசெய்யலாம். இது அரசு அதிகாரி பிறப்பித்த ஆணை ஒன்றை மீறும் விதமாக நடந்துகொண்டதற்காகப் பதிவுசெய்யமுடியும்.

எப்படிப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின்கீழ் காஷ்மீரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்குகள் செல்லாது. ஏனென்றால் அப்படி ஒரு சட்டமே கிடையாது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், எளிதாகத் துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்பதாலும் இந்தச் சட்டம் 2015-ல் நீக்கப்பட்டது. ஆனால், இன்னும் இந்தப் பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் கர்நாடகாவில் இப்படி நடந்த சம்பவம் ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. "இப்படியாக FIR பதிவு செய்யப்பட்டது சட்டத்தை மீறியதாகவும் தேவையில்லாமல் குடிமகன்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவுமே எடுத்துக்கொள்ளப்படும்" எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.

இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கோவையைச் சேர்ந்த சைபர் வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் பேசினோம். "தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு, தொலைத்தொடர்பு சேவைகள் வழி அவதூறு பரப்புவதைத் தடுப்பதற்கான சட்டப்பிரிவு. ஆனால், இந்தச் சட்டம் 2015-ல் ஸ்ரேயா சிங்கால் மற்றும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட இந்தச் சட்டத்தை வைத்து ஒருவரைக் கைது செய்யமுடியாது. இது காலாவதியான சட்டம். காஷ்மீரில் நடந்திருப்பது தெளிவான சட்ட துஷ்பிரயோகம்" என்றார்.

பொதுவாக VPN பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தோம். இதற்கு ``VPN பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் ஒன்றுமில்லை. ஆனால், தடைசெய்யப்பட்ட தளங்களுக்குச் செல்வது குற்றம்தான். அதனால் VPN மூலம் அந்த இணையதளங்களுக்குச் செல்வதும் சட்டவிரோதச் செயலாகிவிடும். ஆனால், பொதுவாக VPN பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகாது" என்று பதிலளித்தார் அவர்.

 

இதனால் VPN பயன்படுத்துவதில் சிக்கலில்லை, எதற்காக அதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பது தெளிவாகிறது

 

.

மேலும் பேசுகையில், "இந்தியாவில் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைகளில் இதுபோன்ற தேவையில்லாத, தவறான அணுகுமுறைகள் கொண்ட பல FIR-கள் பதியப்படுகின்றன. இதனால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலமும் முன்னேற்றமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்குகள் எதிர்கொண்டு நடத்தித் தீர்வு காண அவர்களுக்கு நீண்டகாலம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்ற FIR நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்" என அழுத்தமாகக் கூறினார் வழக்கறிஞர் சத்திய நாராயணன்.

https://www.vikatan.com/technology/tech-news/fir-registered-on-kashmir-people-using-vpn-is-it-even-legal

Link to comment
Share on other sites

சிறிலங்காவிலும் சில தளங்களை பார்க்கமுடியாது. மீறி பார்த்தால் சட்டம் பாயுமா தெரியவில்லை. 

மேற்குலக தளங்கள் தம் VPN பாவனையாளர்கள் செல்லும் இடங்களை விற்கிறார்கள், அரசின் புலனாய்வு உட்பட.  

ஆதலால் நான் பாவிப்பது உருசிய VPN நாட்டின் சேவையை  🙂 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.