Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

625.500.560.350.160.300.053.800.900.160.

 

இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற்பது வயதில் கூட திருமணமாகாது பெற்றோருடன் அல்லது தனியாக வாழ்கின்றனர்.

இக்காலத்தில் பெண்ணுக்கு அறிவு விருத்தியாவதற்கு முன்னர்  21,24 வயதினுள் காதலித்தவனையோ அல்லது பசியோ திருமணம் செய்து  கொடுத்தால் ஓரளவு சம்மதித்துத் திருமணம் செய்கின்றனர். அதற்கும் நூற்றெட்டுப் பிரச்சனைகள். ஆனால்வயது 25 தாண்டியதும் நல்ல தம் சொந்தக் காலில் நிற்கும் பெண்கள் பலர் திருமணம் செய்ய ஆசை கொள்வதில்லை. குழந்தை பெறுவதற்குத் தானே திருமணம் செய்வது, உங்கள் நாட்டில் தான் கட் டாயம் திருமணம் செய்யவேண்டும், இத்தனை வயதுக்குள் திருமணம் செய்யவேண்டும், எமக்குத் தேவையானபோது செய்துகொள்கிறோம், எமக்குப்பிடித்தவரை நாமே தேடிக்கொள்கிறோம், எங்கள் ஆண்களில் எம்மை வைத்து வாழும் திறன் இல்லாதவர்கள் தான் பலர், பெருந்தமை கொண்டவராக இருக்கவேண்டும், அழகாய்க் கம்பீரமாய் இருக்கவேண்டும், தம்மிலும் படித்தவனாய் இருக்கவேண்டும், கறுப்பு மணமகனாக இருக்கவேண்டும், சொந்த வீடு உள்ளவனாய் இருக்கவேண்டும்  என்பது மட்டுமன்றி இன்னும்பல எதிர்பார்ப்புகளும் விருப்புவெறுப்புக்களும் பெண் பிள்ளைகளுக்கு இருக்கின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை அழகான கொடியிடையுடன் இருக்கும் பெண், நன்றாய் படித்த பெண் -( தான் படிக்காது ரோட்டில் திரிந்தாலும் ), நல்ல சீதனம் தரக்கூடிய பெண், தனக்கு வயது முப்பதோ நாற்பதோ அதுபற்றிப் பிரச்சனையில்லை. பெண் பத்து வயது குறைந்தவராகக்க்கூட இருக்கலாம், ஆடையின் அளவு 12 ஆக இருக்கவேண்டும், நன்றாகப் படித்த பெண்ணென்றாலும் தன்னிலும் அதிகம் சம்பளம் எடுக்கக் கூடாது இப்படிப் பல.

ஆணும் பெண்ணும் நன்றாகப் படித்த இருவருக்குத் திருமணம் பேசும்போதும் ஆணின் பெற்றோர் சீதனம் கேட்பதனால், இருவரும் பேசிப்பழகிப் பின்தான் திருமணம் என்று பல திருமணங்கள் குளம்பியுள்ளன. இந்தச் சாதியில், இந்த ஊரவர் வேண்டாம் அல்லது வேண்டும்,  பெண் அணிந்திருந்த ஆடை சரியில்லை, அடக்க ஒடுக்கமாக இல்லை, ஒரே ஒரு பிள்ளை என்றால் பாருங்கோ, ஆணுக்குப் பெண் சகோதரிகள் இருக்கக் கூடாது,  ஆண்கள் நாகரீகமாக அணியவில்லை, பெண் clubbing  போவதனால், ஆண் நண்பர்களுக்கு கன்னதத்தில் முத்தம் கொடுப்பதனால் இப்படிச் சொல்லிக்கொண்டேபோகலாம்.

பெண்கள் மனதில் ஆணை நம்பி வாழத்தேவையின்றி தன்காலில் நிற்கும் குணமும், புலம்பெயர் நாடுகளில் ஆண்  இன்றித் தனியாக வாழக்கூடிய பாதுகாப்பு உள்ளமை, தானே தனியாகச் சொத்துக்களை வாங்கவும் பிரச்சனைகளைக் கையாளவும் முடியும் என்னும் நம்பிக்கை, ஆண்கள் பெரும்பாலும் பெற்றோரை நம்பி அதாவது ஆடைகள் துவைப்பது முதல் உணவு சமைப்பது வரை தாயை நம்பி இருப்பதனால் பல விடயங்களில் முதிர்வு இன்மை, கலாச்சார மாற்றம், குழந்தைகள் பெறத் தேவை இல்லை என்னும் எண்ணம் இப்படிப்பை பலவும் காரணிகளாக இருந்து பழமுதிர் கண்ணிகளை உருவாக்கியுள்ளன. பாவம் பெற்றோர்கள் கோவில்கோவிலாக ஏறி இறங்கி, தரகர்மார்களுக்கும் திருமண சேவைகளுக்கும் பணம் இறைத்து, பொருத்தம் பார்த்துப் பார்த்து சாதகங்கள் கிழிந்தநிலையில் மாப்பிளை வீட்டார் கூறும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி முக்கியமாய் இன்னும் மக்களுக்கு ஒண்டும் பாக்கேல்லையோ?? ஏதும் தோஷம் இருக்கோ ?? ஆரையெண்டாலும் கட்டிக்க குடுங்கோ என்னும் அறிவுரை கேட்டு, பிள்ளை எப்பிடியும் கட்டினால் போதும் என்று எல்லாத்தையும் சகிச்சு, யாரையும் உங்களுக்குத் பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ என்று ஏலாக் கட்டத்தில் சொல்லி பிள்ளைகள் வேற்று நாட்டவரை முடிக்கப்போறன் என்றாலும் வேறுவழியின்றி தம் துக்கத்தையெல்லாம் உள்ளே வைத்துப் பூட்டி திருமணமும் செய்து வைக்கின்றனர்.

இப்படி நடக்கும் திருமணங்கள் மகிழ்வாகத் தொடர்கின்றனவா ?? என்ற கேள்விக்கான விடை அடுத்த பகுதியில்............

தொடரும் .........

 

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆணும் பெண்ணும் நன்றாகப் படித்த இருவருக்குத் திருமணம் பேசும்போதும் ஆணின் பெற்றோர் சீதனம் கேட்பதனால்,

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

உங்களுக்கு அந்தப் பிரச்சனை வரவில்லை என்பதற்காக இல்லை என்று ஆகிவிடுமா ?? உங்கள் பிள்ளைகள் ஆணா பெண்ணா ?? பேசிக் செய்த திருமணமா ?? காதல்த் திருமணமா ??? என்பதை முதலில் சொல்லுங்கள் அண்ணா.

பச்சைக்கள்  தந்த ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் விளங்க நினைப்பவனுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடருங்கள்...நானும் காத்திருக்கிறேன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளைகளுக்கு திருமணம் பேசி நான் பட்ட பாடு இருக்கே. அதைகே சொல்லி முடியாது. என் அனுபவங்கள் சிலதை இதில் பதிகிறேன்.

திருமணப் பேச்சு 1

தொலைபேசி அழைப்பு வருகிறது.

நான் : வணக்கம்

அவ : கலோ நான் தர்மினி.

நான் : சொல்லுங்கோ

அவ: நீங்க உங்கட பிள்ளைக்கு மாப்பிள பாக்கிறியளோ ?

நான்: ஓம் .... உங்கள் மகனுக்கோ

அவ : என்ன செய்யிறா உங்கட மகள்.

நான் : வேலை செய்யிறா

அவ: என்ன வேலை செய்யிறா ?? என்ன படிச்சவ ??

நான் : முதல்ல இரண்டு பேருக்கும் பொருத்தம் பாப்பம்.
             உங்கட மகன்ர சாதகத்தை தரமுடியுமா ?

அவ : நீங்களும் ஹஸ்பண்டும் என்ன செய்யிறியள் ?

நான் : நாங்கள் சொந்தக் கடை ஒண்டு நடத்திறம்
             நீங்கள் என்ன செய்யிறியள் ? உங்கள் மகன் என்ன படிச்சவர்?

அவ : நீங்கள் முதல்ல பொருத்தத்தைப் பாருங்கோவன்.
            பொருத்தம் எண்டா எடுங்கோ மிச்சத்தைக் கதைப்பம்.
            நான் வற்சப்பில சாதகத்தை அனுப்பி விடுறன். பாய்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடையின் அளவு 12 ஆக இருக்கவேண்டும்,

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

அவரின் கண் கொண்டு பார்த்தால் அது கொடியிடையாகத்தான் இருக்கும்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

8 அளவு போடுறது 12 ... 18   வயதுப் பிள்ளையள் தான் போடுறது. அந்த அளவு ஆடை அணியும் பிள்ளைகளை இளம் பிள்ளைகள் என்பர். அவர்கள் அந்த வயதுடைய ஆண்களை அல்லது ஒரு 4,5 அதிக வயதுடைய இளைஞர்களை காதலிக்கவோ திருமணம் செய்யவோ தான் விரும்புவார்களேயன்றி 28 கடந்த ஆணை அல்ல. ஆனால் ஆண்கள்  தம் வயதை பற்றிக் கவலை கொள்ளாது தம் பெண் வயதை ஒத்தவர்களை திருமணம் செய்ய ஆசை கொள்வது.  இதுதான் ஆண்புத்தி. 😃

58 minutes ago, suvy said:

அவரின் கண் கொண்டு பார்த்தால் அது கொடியிடையாகத்தான் இருக்கும்.......!   😁

குணம் நல்லதோ, திறமை இருக்கோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே கொள்வதில்லை. பாக்க வடிவாக இருந்தால் சரி. கோவைக்கு பச்சை மட்டை சரி 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2020 at 4:46 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் பெரும்பாலும் பெற்றோரை நம்பி அதாவது ஆடைகள் துவைப்பது முதல் உணவு சமைப்பது வரை தாயை நம்பி இருப்பதனால் பல விடயங்களில் முதிர்வு இன்மை

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில அவதானிப்புகள்….


1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்..
2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது.
3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட.
4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

நான் சொன்னது கலியாண வயதில இருக்கிற ஆண்கள் பற்றி. கலியாண வயது கடந்த ஆண்கள் பற்றி அல்ல.😂😂

5 hours ago, சாமானியன் said:

சில அவதானிப்புகள்….


1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்..
2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது.
3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட.
4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...

 

ஐரோப்பாவிலும் சீதனம் என்று பலர் வாங்குவதில்லைத்தான். ஆனால் எளிமையான திருமணம் என்றால் தப்பும் பெண்ணின் பெற்றோர் ஆடம்பரத் திருமணங்களில் எல்லாச் செலவுகளும் தம் தலையில் கட்டப்படுவதையும் சில அடக்குமுறையான செயல்களையும் கண்டுகொள்வதில்லை. அல்லது வெட்கத்தில் வெளியே சொல்வதில். மணமகனுக்குத் தெரியாமலே சகுனி வேலை பார்க்கும் எத்தனையோ பெற்றோர் இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள்,

Social skills என்று ஒரு விடயம் இருக்கு பாருங்கோ. நாம் வாழும் சூழலில் எப்படி இசைவாக்கம் அடைவது, எம் தனிமனித தனித்துவத்தை எப்படி பேணுவது. இப்படி பல சமூக தகமைகள் இதில் அடங்கும்.

இதை பள்ளிகூடத்தில் சொல்லித்தராயினம். பெற்றோர்தான் இதை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

இவற்றில் ஒன்றுதான் - உரிய வயதில், தனக்கான துணையை அமைத்துக்கொள்ளும் இயலுமையும். நாயும், நரியும் கூட இதை செய்யும் போது, 30 வயதுதாண்டி விட்ட மகனோ, மகளோ வாழ்கை துணையின்றி நிற்கிறார்கள் என்றால், ஒன்றில் தனித்து வாழுவது அவர்கள் இஸ்டமாக இருக்க வேண்டும் அல்லது, பெற்றோர்கள் மிகவும் அடிப்படையான ஒரு சோசல் ஸ்கில்லை இந்த பிள்ளைக்கு அறிமுகப் படுத்தவில்லை என்றே அர்த்தம்.

 இதில் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2020 at 6:00 PM, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

அண்மையில் கனடாவில் இருக்கும் எனது நண்பனின் மைத்துனரின் திருமணம் சீர்தனப் பிரச்சனையால் தடைப்பட்டது.

நண்பர் சீர்தனம் ஏதுமின்றி இலங்கையில் திருமணம் முடித்து பின்னர் மணமகளின் குடும்பத்தை கனடாவிற்கு எடுத்திருந்தார். 

நண்பரின் வீட்டில் முழுக் குடும்பமும்  எதுவித செலவுகளுமின்றி இருந்து, படித்து முடித்த பின்னர் பெற்றோர் பேசிய பெண்ணை பதிவுத் திருமணம் செய்தபின்னர் சீர்தனமாக வீடு தரவில்லையென்று சமயாசாரத் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இறுதியாக வீடு கொடுத்தபின்னரே திருமணம் ணடைபெற்றது.

இத்தனைக்கும் இருவீட்டாரும் முற்போக்கு பேசும் (?) கிறீத்துவ குழுமத்தைச் சேர்ந்தவர்கள். 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

தமிழனை கட்டு, அதுவும் இலங்கை தமிழன், சாதி மாறி கட்டாதே, மாவட்டம் தாண்டி போகாதே, அந்த குறிச்சிக்கும் எமக்கும் சரிவராது, அவர்கள் பட்டிக்காடு, இவர்கள் தீவுப்பகுதி, தேப்பன் குடிகாரனாம், ஒன்றை விட்ட குஞ்சம்மா வேற சாதில கட்டினவாம், இப்படி பிள்ளைகளின் எல்லா வழிகளையும் அடைத்து விட்டால்- பாவம் அதுகளும் என்ன செய்யும்.

30 வயசுவரை இவர்கள் எனக்கு ஒரு வழியை காட்டுவார்கள் என நம்பி, ஏமாந்து கடைசியாக படபஸ்சில் ஏறுவது போல “மிச்ச சொச்சம், சொச்ச மிச்சத்தை” கட்டும் போது?

இப்படியான வாழ்கை கசப்பதில் எந்த வியப்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாதவூரான் said:

கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது

🤣 ஓம் தீராக்காதல்🤣
 

ஆனால் நீங்களும் வேறுபட்ட ஒரு சூழலுக்குள் வளர்திருந்தால் - உங்களுக்கான துணையை தேடும் நிர்பந்தம் உங்களையும் களத்தில் இறக்கி இருக்கும். என்ன இந்த கட்டமைப்பில் இருப்பதால் - எப்படியும் அம்மா ஆக்கள் கட்டி வைப்பினம்தானே என்று விட்டுவிட்டீர்கள்.

உங்களை போல வெள்ளை/ ஆபிரிக்க இனத்தில் ஏன் ஆட்கள் இல்லை? அங்கே மிக சொற்பமானவ ஆக்களே துணையை தேடும் இயலுமை இன்றி இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

8 அளவு போடுறது 12 ... 18   வயதுப் பிள்ளையள் தான் போடுறது. அந்த அளவு ஆடை அணியும் பிள்ளைகளை இளம் பிள்ளைகள் என்பர். அவர்கள் அந்த வயதுடைய ஆண்களை அல்லது ஒரு 4,5 அதிக வயதுடைய இளைஞர்களை காதலிக்கவோ திருமணம் செய்யவோ தான் விரும்புவார்களேயன்றி 28 கடந்த ஆணை அல்ல. ஆனால் ஆண்கள்  தம் வயதை பற்றிக் கவலை கொள்ளாது தம் பெண் வயதை ஒத்தவர்களை திருமணம் செய்ய ஆசை கொள்வது.  இதுதான் ஆண்புத்தி. 😃

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬


asos.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬


asos.jpg

ஜி,

சைஸ் 8 எல்லாம் வெறும் எலும்பு ஜி. சூப் வைக்க ஓகே 😀. அல்லது புளூமியா மாரி வருத்த கேஸ் அல்லது மேலே காட்டப்படும் மாடல் அழகிகள்தான் 25 வயசுக்கு மேல் சைஸ் 8 இல் இருப்பார்கள்.

சைஸ் 8-10 க்கு பெண்கள் இருக்க வேண்டும் என்பது, நுகர்வோர் கலாச்சாரத்தால் மேற்குலகில் பரப்பட்ட ஒரு மாயை. இதை unrealistic expectations on women என இப்போ மேற்குலகே கைவிட தயாராகி வருகிறது.

லலிதா, பத்மினி, நதியா, குஸ்பு, மீனா, நயந்தாரா என்று நம்ம காதல் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் 12-14 தானே ஜி.

சிம்ரன் ஸ்ரேயா விதி விலக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மக்காள்,

Social skills என்று ஒரு விடயம் இருக்கு பாருங்கோ. நாம் வாழும் சூழலில் எப்படி இசைவாக்கம் அடைவது, எம் தனிமனித தனித்துவத்தை எப்படி பேணுவது. இப்படி பல சமூக தகமைகள் இதில் அடங்கும்.

இதை பள்ளிகூடத்தில் சொல்லித்தராயினம். பெற்றோர்தான் இதை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

இவற்றில் ஒன்றுதான் - உரிய வயதில், தனக்கான துணையை அமைத்துக்கொள்ளும் இயலுமையும். நாயும், நரியும் கூட இதை செய்யும் போது, 30 வயதுதாண்டி விட்ட மகனோ, மகளோ வாழ்கை துணையின்றி நிற்கிறார்கள் என்றால், ஒன்றில் தனித்து வாழுவது அவர்கள் இஸ்டமாக இருக்க வேண்டும் அல்லது, பெற்றோர்கள் மிகவும் அடிப்படையான ஒரு சோசல் ஸ்கில்லை இந்த பிள்ளைக்கு அறிமுகப் படுத்தவில்லை என்றே அர்த்தம்.

 இதில் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த கூட்டம் மடிந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறும்.
ஆணாக இருந்துகொண்டு நீங்கள் இதனை இலகுவாகச் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை என்னதான் பல விடயங்களில் மாற்றமடைந்துவிட்டாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனப் பதைப்புடன்தான் வாழவேண்டிய நிலை. அதற்கான காரணம் பிள்ளைமேல் நம்பிக்கை இல்லை என்பதல்ல. ஆபத்தான புறக்காரணிகளைக் கொண்டு அச்சுறுத்தியபடிதான் வெளிநாட்டு வாழ்வு.  ஒரு ஆண் தனித்து வாழ்வதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் பெண் பிள்ளை தனியாகத் திருமணமாகாது வாழ முடியுமென்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொன்னது கலியாண வயதில இருக்கிற ஆண்கள் பற்றி. கலியாண வயது கடந்த ஆண்கள் பற்றி அல்ல.

அக்கோய் .. கலியாண வயதிற்கு முன்னும் இதே கதைதான் ..சரி ஒருபேச்சுக்கு கலியாணத்திற்கு முன் வராத முதிர்ச்சி எப்புடி கலியாணத்திற்கு பிறகு வந்தது...பெற்றோரில் தங்கியிருந்தவன் எப்புடி தனியே இயங்கக்கூடியவனாக மாறினான் ஆக உங்கள் முதிர்ச்சி அளவு கோலில் எங்கேயோ கோளாறு இருக்கு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

தமிழனை கட்டு, அதுவும் இலங்கை தமிழன், சாதி மாறி கட்டாதே, மாவட்டம் தாண்டி போகாதே, அந்த குறிச்சிக்கும் எமக்கும் சரிவராது, அவர்கள் பட்டிக்காடு, இவர்கள் தீவுப்பகுதி, தேப்பன் குடிகாரனாம், ஒன்றை விட்ட குஞ்சம்மா வேற சாதில கட்டினவாம், இப்படி பிள்ளைகளின் எல்லா வழிகளையும் அடைத்து விட்டால்- பாவம் அதுகளும் என்ன செய்யும்.

30 வயசுவரை இவர்கள் எனக்கு ஒரு வழியை காட்டுவார்கள் என நம்பி, ஏமாந்து கடைசியாக படபஸ்சில் ஏறுவது போல “மிச்ச சொச்சம், சொச்ச மிச்சத்தை” கட்டும் போது?

இப்படியான வாழ்கை கசப்பதில் எந்த வியப்பும் இல்லை.

 

என்ர  பொடி  எனக்குச்சொன்னது

தமிழாக்கள் சொல்வதை கடைப்பிடித்து திருமணம்  செய்வதென்றால்

99வீதம்  சாத்தியமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்து பிள்ளைகள் பேசி செய்யும் கல்யாணமாக இருந்தாலும், ஒருவரோடு ,ஒருவர் கதைத்து,பழகிய பின்னர் திருமணம் செய்ய விரும்புகின்றனர்...அதில் பிழை ஒன்றும் இல்லை 

 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

கொஞ்ச காலத்தில் கடை சாப்பாட்டை சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த பிறகு தெரியும் அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த கூட்டம் மடிந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறும்.
ஆணாக இருந்துகொண்டு நீங்கள் இதனை இலகுவாகச் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை என்னதான் பல விடயங்களில் மாற்றமடைந்துவிட்டாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனப் பதைப்புடன்தான் வாழவேண்டிய நிலை. அதற்கான காரணம் பிள்ளைமேல் நம்பிக்கை இல்லை என்பதல்ல. ஆபத்தான புறக்காரணிகளைக் கொண்டு அச்சுறுத்தியபடிதான் வெளிநாட்டு வாழ்வு.  ஒரு ஆண் தனித்து வாழ்வதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் பெண் பிள்ளை தனியாகத் திருமணமாகாது வாழ முடியுமென்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது.

உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ இருக்கும் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர் பலர் தாம் 2020 இருக்கிறோம் என்பதை உணர்ந்து, காலத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும் எனும் பயம்தானே?

ஊராவது மண்ணாவது, துணை நல்லவனா? உனக்கு (மனப்) பொருத்தமா? பிடித்திருக்கிறதா? அப்போ கல்யாணம் செய்யுங்கள் என சொல்லும் தைரியம் இருந்தால் - எந்த பதைபதைபுக்கும் காரணமில்லை.

ஊருக்கு பயந்து, தமிழ், வெள்ளாள, படித்த, உயரமான, பசையுள்ள, நல்ல தொழில் பார்க்கும், கெத்தான மாப்பிள்ளைதான் வேணும், என்று நினைத்தால் மட்டுமே பதை பதைப்பு ஏற்படும்.

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

 

யோவ் கோசான்,

அடி மடியில கை வைக்காதீர்கள்! நானும் பேசித்தான் கலியாணம் கட்டியது. அஞ்சு ஆறு காதல் சரிவராமல் போக (அதில் ஒன்று சிங்களப் பெண், இன்னொன்று ஏற்கனவே எங்கேஜ்மண்ட் முடிஞ்ச பெண்) கடைசியில எனக்கும் காதலுக்கும் சரிப்பட்டு  வராது என்று அம்மாவின் கால்களில் விழுந்து கடைசியில் அவர் தயவால் ஒன்று கிடைத்து வாழ்க்கையும் சந்தோசமாக போகுது,,,

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

 

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும்

ஏற்கனவே ஒரு முறை எழுதியிருந்தனான். எனக்கு தெரிந்த ஒரு பெண் 100 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தான் இன்னும் வாழ்கின்றார். தன் ஆண் பிள்ளைகளில் காதலித்த பெண்களை  சாதி சொல்லி, மதம் சொல்லி பிரித்து வைக்க, ஈற்றில் அவர் இன்னொரு ஆணைக் கூட்டிக் கொண்டு திரிகின்றார். லிவிங் டு கெதர் (living together) முறைப்படி அவனும் அவனும் வாழ்கின்றனர்.

என் பிள்ளைகளுக்கு இப்பவே கூறி வளர்க்கின்றேன். "உங்களுக்கு என்னால் படிப்பிக்க மட்டுமே முடியும்... அந்த அறிவை வைச்சுக் கொண்டு நீங்களே உங்கள் துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதில ஒரு முஸ்லிமை கட்டினால் நான் கொஞ்சம் கவலைப்படுவன், மற்றப்படி யார் என்றாலும் எமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது". இதைக் கேட்கும் என் மகன், "அப்பா நீங்கள் ஒரு ரேசிஸ்ட் (Racist)" என்று சொல்லி விட்டு நகர்வான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.