Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் .. கலியாண வயதிற்கு முன்னும் இதே கதைதான் ..சரி ஒருபேச்சுக்கு கலியாணத்திற்கு முன் வராத முதிர்ச்சி எப்புடி கலியாணத்திற்கு பிறகு வந்தது...பெற்றோரில் தங்கியிருந்தவன் எப்புடி தனியே இயங்கக்கூடியவனாக மாறினான் ஆக உங்கள் முதிர்ச்சி அளவு கோலில் எங்கேயோ கோளாறு இருக்கு  

நான் கூறியது பெற்றோருடன் திருமணம் ஆகும்வரையும் இருக்கும் ஆண்கள் பற்றி. தம்பியா நீங்கள் கலியாணம் கட்டி முதிர்ச்சி வந்திருக்கலாம். அல்லது வேற வழியில்லாமல் தனியாய் போய் இருந்தாலும் முதிர்ச்சி வரும். கலியாணம் கட்டி முதிர்ச்சியின்றி மனைவியுடன் சண்டைபோட்டுத்தனியா வந்தாலும் முதிர்ச்சிதான். எல்லாத்துக்கும் மேலாக எல்லா ஆண்களும் என்று நான் சொல்லவே இல்லையே. விதிவிலக்கான பிறர் சாராது தன் காலில் நிற்கும் ,திட்டமிடத்தெரிந்த நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 😂

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬


 

சரி 8 சைசில் எதிர்பார்ப்பவர்கள் தாங்களும் அந்தப் பெண்ணுக்கு ஏற்றாற்போல் இருக்கவெல்லா வேணும். அதைவிட்டு தங்கள் மைனசை எல்லாம் மறந்து பெண்ணிடம் அளவுக்கு அதிகமாய் எதிர்பார்ப்பது. 😃

பெண் என்றால் கொஞ்சம் தசையும் இருக்கவேண்டும். மிக மெல்லிசாக இருக்கும் பெண்களைப்பார்த்தால் பட்டினியால் வாடியவர்கள்போல் முகத்தில் ஒரு பொலிவும் இன்றி ....ஆக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

லலிதா, பத்மினி, நதியா, குஸ்பு, மீனா, நயந்தாரா என்று நம்ம காதல் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் 12-14 தானே ஜி.

சிம்ரன் ஸ்ரேயா விதி விலக்கு.


சிம்ரன் 25 யதில் சைஸ் 8 இல் இருந்ததால்தான் 20 வருஷம் கடந்தபின்னரும் சைஸ் 12 இல்தான் இருக்கின்றார். 😍 25 வயதில் சைஸ் 12 - 14 இல் இருந்தால் 20 வருஷம் கடந்த பின்னர் சைஸ் 24 இல் திரும்புகிற பக்கம் எல்லாம் ஒரே மாதிரி தெரியும் உரலாகவல்லவா உடல் இருக்கும்!😂🤣

simran-03.jpg

50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண் என்றால் கொஞ்சம் தசையும் இருக்கவேண்டும். மிக மெல்லிசாக இருக்கும் பெண்களைப்பார்த்தால் பட்டினியால் வாடியவர்கள்போல் முகத்தில் ஒரு பொலிவும் இன்றி ....ஆக்

அழகு ததும்பும் சிம்ரனை வடிவாகப் பாருங்கள்!!! ஆக் என்றா இருக்கு😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த காலத்து பிள்ளைகள் பேசி செய்யும் கல்யாணமாக இருந்தாலும், ஒருவரோடு ,ஒருவர் கதைத்து,பழகிய பின்னர் திருமணம் செய்ய விரும்புகின்றனர்...அதில் பிழை ஒன்றும் இல்லை 

 

கதைத்துப் பேசி மூன்று மாதத்தில் ஆறு மாதங்களில் ஒரு ஆண்டின்பின் கூடக் குழம்பியும் இருக்கு.

 

7 hours ago, வாதவூரான் said:

கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது

சிலருக்கு இல்லை பலருக்கு 😃

3 hours ago, goshan_che said:

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது.

உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ இருக்கும் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர் பலர் தாம் 2020 இருக்கிறோம் என்பதை உணர்ந்து, காலத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும் எனும் பயம்தானே?

ஊராவது மண்ணாவது, துணை நல்லவனா? உனக்கு (மனப்) பொருத்தமா? பிடித்திருக்கிறதா? அப்போ கல்யாணம் செய்யுங்கள் என சொல்லும் தைரியம் இருந்தால் - எந்த பதைபதைபுக்கும் காரணமில்லை.

ஊருக்கு பயந்து, தமிழ், வெள்ளாள, படித்த, உயரமான, பசையுள்ள, நல்ல தொழில் பார்க்கும், கெத்தான மாப்பிள்ளைதான் வேணும், என்று நினைத்தால் மட்டுமே பதை பதைப்பு ஏற்படும்.

உங்களுக்குத் பெற்ரோரின் பதைப்பு என்ன என்று விளங்க உங்கள் மக்கள் திருமண வயதுக்கு வந்து காதலிக்கவும் தெரியாமல் இருந்தால்த்தான் புரியும். எல்லோராலும் காதலித்துவிட முடியாது. 

மற்றது வேலை வெட்டி இல்லாது மனைவியின் தொழிலில் சீவிக்கலாம் என்று  எண்ணும் ஒரு குருடனையா பேசிக் செய்ய முடியும். அதைவிட உயரமான அழகான எத்தனை மாப்பிள்ளைகள் சைக்கோக்களாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:


சிம்ரன் 25 யதில் சைஸ் 8 இல் இருந்ததால்தான் 20 வருஷம் கடந்தபின்னரும் சைஸ் 12 இல்தான் இருக்கின்றார். 😍 25 வயதில் சைஸ் 12 - 14 இல் இருந்தால் 20 வருஷம் கடந்த பின்னர் சைஸ் 24 இல் திரும்புகிற பக்கம் எல்லாம் ஒரே மாதிரி தெரியும் உரலாகவல்லவா உடல் இருக்கும்!😂🤣

simran-03.jpg😎🤣

அழகு ததும்பும் சிம்ரனை வடிவாகப் பாருங்கள்!!! ஆக் என்றா இருக்கு😬

Image result for simran

Image result for simran

Image result for simran

 

இதுதான் தற்போதைய சிம்ரன்.மேக்கப் இல்லாட்டி சிம்ரனாவது. ஆட்டுக்குட்டியாவது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für angry gif

சில்(ம்)ரனை... திட்டினால், நமக்கு... கெட்ட  கோவம் வந்திடும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதுதான் தற்போதைய சிம்ரன்.மேக்கப் இல்லாட்டி சிம்ரனாவது. ஆட்டுக்குட்டியாவது

சைஸ் 8 இல் 20 வருஷத்துக்கு முன்னால் இருந்ததால்தான் இப்பவும் “பார்க்கிற” மாதிரி இருக்கிறார். அப்பவே சைஸ் 14 இல் இருந்திருந்தால் இப்ப பிந்துகோஷ் மாதிரியல்லா இருப்பா!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சைஸ் 8 இல் 20 வருஷத்துக்கு முன்னால் இருந்ததால்தான் இப்பவும் “பார்க்கிற” மாதிரி இருக்கிறார். அப்பவே சைஸ் 14 இல் இருந்திருந்தால் இப்ப பிந்துகோஷ் மாதிரியல்லா இருப்பா!😜

எல்லோருக்கும் திருமணத்துக்குப் பின் உடம்பு வைப்பதுதான். ஆனால் எல்லோரும் பிந்துகோஷ் போல் வருவதில்லை. முன்னர் இடைபெருத்த பெண்ணையே குழந்தை பெறத் தகுதியானவராககே கருதி திருமணம் செய்தனர். ஏனெனில் பிரசவம் அவர்களுக்குத்தான் இலகுவாக இருந்ததாம்.

மெல்லிய பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்குத் தீபதூபம் எடுத்து சமைத்தும் குடுத்து அடிமைபோல் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா ?????😊😂

11 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für angry gif

சில்(ம்)ரனை... திட்டினால், நமக்கு... கெட்ட  கோவம் வந்திடும்.  🤣

உதுக்கெல்லாம் நாங்கள் பயப்பிட்டிடுவமா ????😎

Image result for simran

 

அசிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

யோவ் கோசான்,

அடி மடியில கை வைக்காதீர்கள்! நானும் பேசித்தான் கலியாணம் கட்டியது. அஞ்சு ஆறு காதல் சரிவராமல் போக (அதில் ஒன்று சிங்களப் பெண், இன்னொன்று ஏற்கனவே எங்கேஜ்மண்ட் முடிஞ்ச பெண்) கடைசியில எனக்கும் காதலுக்கும் சரிப்பட்டு  வராது என்று அம்மாவின் கால்களில் விழுந்து கடைசியில் அவர் தயவால் ஒன்று கிடைத்து வாழ்க்கையும் சந்தோசமாக போகுது,,,

பாஸ்,

நீங்கள் மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசீடீங்க 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஏற்கனவே ஒரு முறை எழுதியிருந்தனான். எனக்கு தெரிந்த ஒரு பெண் 100 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தான் இன்னும் வாழ்கின்றார். தன் ஆண் பிள்ளைகளில் காதலித்த பெண்களை  சாதி சொல்லி, மதம் சொல்லி பிரித்து வைக்க, ஈற்றில் அவர் இன்னொரு ஆணைக் கூட்டிக் கொண்டு திரிகின்றார். லிவிங் டு கெதர் (living together) முறைப்படி அவனும் அவனும் வாழ்கின்றனர்.

என் பிள்ளைகளுக்கு இப்பவே கூறி வளர்க்கின்றேன். "உங்களுக்கு என்னால் படிப்பிக்க மட்டுமே முடியும்... அந்த அறிவை வைச்சுக் கொண்டு நீங்களே உங்கள் துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதில ஒரு முஸ்லிமை கட்டினால் நான் கொஞ்சம் கவலைப்படுவன், மற்றப்படி யார் என்றாலும் எமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது". இதைக் கேட்கும் என் மகன், "அப்பா நீங்கள் ஒரு ரேசிஸ்ட் (Racist)" என்று சொல்லி விட்டு நகர்வான்.

இதை சொல்லும் பருவம் இன்னும் என்ர ஆளுக்கு இல்லை.

ஆனால் நாளைக்கு இன்னொரு ஆணை காட்டி- இவன் தான் என் வாழ்க்கைத்துணை என்று காட்டினாலும் - விதியே என்று ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு நான் இப்பவே வந்து விட்டேன்.

என்ன எமது ஆக்களிடம் இருந்து விலகி போ, நானும் உன்னுடன் வாறேன், நம்மை யாரும் அதிகம் அறியாத ஒரு ஊரில் போய் நீ விரும்பியபடி வாழலாம் ( இது என்னால் எனது சமூகத்தில் இதை முகம் கொடுக்க முடியாதமையால் மட்டுமே) என்றுதான் சொல்வேனோ ஒழிய அவரின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை.

அப்படி நிற்பதால் ஒரு சில மனமுறிவுகள், தற்கொலைகளை தவிர வேறு எதையும் நான் சாதிக்க போவதில்லை என்ற தெளிவு எனக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கூறியது பெற்றோருடன் திருமணம் ஆகும்வரையும் இருக்கும் ஆண்கள் பற்றி. தம்பியா நீங்கள் கலியாணம் கட்டி முதிர்ச்சி வந்திருக்கலாம். அல்லது வேற வழியில்லாமல் தனியாய் போய் இருந்தாலும் முதிர்ச்சி வரும். கலியாணம் கட்டி முதிர்ச்சியின்றி மனைவியுடன் சண்டைபோட்டுத்தனியா வந்தாலும் முதிர்ச்சிதான். எல்லாத்துக்கும் மேலாக எல்லா ஆண்களும் என்று நான் சொல்லவே இல்லையே. விதிவிலக்கான பிறர் சாராது தன் காலில் நிற்கும் ,திட்டமிடத்தெரிந்த நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 😂

ஆர் நாங்களோ திட்டமிட தெரியாத ஆக்கள்.

வெளிநாட்டில் வாழும் 90% எங்கள் ஆண்கள், 100 டாலருடன் வந்து, 3 வேலையில் தும்படித்து, படித்து, பட்டம் பெற்று, அல்லது வியாபாரத்தளத்தை வாங்கி, ஊரில் பல குமர்களை கரைசேர்த்து, வீட்டுக்கு மோர்ட்கேஜ் எடுத்து, கலியாணச் செலவும், வீசா கட்டணமும் கட்டி பொம்பிளையை எடுக்கிற ஆக்கள் காண்டியளே.

இவ்வளவு வேலையையும் பக்காவாக பிசகில்லாமல் செய்து முடிக்கிற இந்த சிங்கங்களையா இப்படிச் சொல்கிறீர்கள்?

இலங்கையில் பிறந்து இன்று வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்க்கு பின்னாலும், அவரிற்கு முன் வெளிநாடு வந்த தந்தையோ, சகோதரனோ, கணவனோ ஏதோ ஒரு ஆணின் அபரிமித உழைப்பும், திட்டமிடலும், சுயசம்பாதியமும், அக்கறையும், பாசமும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஆர் நாங்களோ திட்டமிட தெரியாத ஆக்கள்.

வெளிநாட்டில் வாழும் 90% எங்கள் ஆண்கள், 100 டாலருடன் வந்து, 3 வேலையில் தும்படித்து, படித்து, பட்டம் பெற்று, அல்லது வியாபாரத்தளத்தை வாங்கி, ஊரில் பல குமர்களை கரைசேர்த்து, வீட்டுக்கு மோர்ட்கேஜ் எடுத்து, கலியாணச் செலவும், வீசா கட்டணமும் கட்டி பொம்பிளையை எடுக்கிற ஆக்கள் காண்டியளே.

இவ்வளவு வேலையையும் பக்காவாக பிசகில்லாமல் செய்து முடிக்கிற இந்த சிங்கங்களையா இப்படிச் சொல்கிறீர்கள்?

இலங்கையில் பிறந்து இன்று வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்க்கு பின்னாலும், அவரிற்கு முன் வெளிநாடு வந்த தந்தையோ, சகோதரனோ, கணவனோ ஏதோ ஒரு ஆணின் அபரிமித உழைப்பும், திட்டமிடலும், சுயசம்பாதியமும், அக்கறையும், பாசமும் இருக்கும்.

அய்யய்யய்யய்யோ நான் இத்திரியில் கதைக்க வந்தது புலம்பெயர்ந்து வந்தவர்களின் புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகளின் திருமணம் பற்றி ☺️🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் கல்யாணப் பேச்சு என்று பலரின் மனங்களை நோகடிப்பதை தான் அதிகம் செய்கின்றனர்.

ஒருமுறை ஒரு ஆன்ரி போன் எடுத்து..

தன்ர மகள் அது படிச்சிருக்குது.. இது படிச்சிருக்குது... பி எச் டி எடுத்திருக்கிறா.. அதுஇதென்று ஒரே படிப்பு கதை தான்.

இதில.... தம்பி நீர் ஸ்ருடன்டே.. என்று ஒரு நக்கல் வேற. 

உடனே நாங்க சொன்னம்... உங்கட மகளுக்கு பார்த்து ஒரு புத்தகத்தை கட்டி வையுங்கோ என்று.

எம்மவர்கள்.. இந்தக் காலத்தில் அல்ல எந்தக் காலத்திலும் கல்யாணத்தை ஒரு முதலீடாகத் தான் பாவிக்க முனைகின்றனர்.

அது மனிதர்களை மனங்களை இணைப்பதைச் செய்ய பல இடங்களில்.. தவறிவிடுகிறது என்பதே நம்மவர் கல்யாணங்களின் யதார்த்தம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைத்துப் பேசி மூன்று மாதத்தில் ஆறு மாதங்களில் ஒரு ஆண்டின்பின் கூடக் குழம்பியும் இருக்கு.

 

சிலருக்கு இல்லை பலருக்கு 😃

உங்களுக்குத் பெற்ரோரின் பதைப்பு என்ன என்று விளங்க உங்கள் மக்கள் திருமண வயதுக்கு வந்து காதலிக்கவும் தெரியாமல் இருந்தால்த்தான் புரியும். எல்லோராலும் காதலித்துவிட முடியாது. 

மற்றது வேலை வெட்டி இல்லாது மனைவியின் தொழிலில் சீவிக்கலாம் என்று  எண்ணும் ஒரு குருடனையா பேசிக் செய்ய முடியும். அதைவிட உயரமான அழகான எத்தனை மாப்பிள்ளைகள் சைக்கோக்களாக இருக்கிறார்கள்.

1. நான் முன்னமே சொன்னது போல “பொத்தி பொத்தி வளர்கிறோம் பேர்வழி” என்று பிள்ளையளுக்கு எல்லா பக்கத்தாலும் பேரியர் போடாமல், துணைதேடலும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் ஆனால், மிகவும் பொறுப்பாக, நிதானமாக எடுக்க வேண்டிய முடிவு என்பதை உணர்தி வளர்தால் இந்த சிக்கல் வராது.

2. காதலிக்க தெரியாதவர்கள் என்று இருப்பவர்கள் மிக சொற்பமே. மிக மோசமான low self esteem பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமே இப்படி. அவர்கள் கூட tinder போன்றவற்றில் அல்லது நண்பர்கள் ஏற்பாடு செய்யும் blind date இல் துணையை தேர்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் எவ்வளவோ சாதிச்ச, கெட்டிக்கார, துணிச்சலான பிள்ளையைள் “காதலிக்க தெரியாமல்” நிற்பது எண்டால் - என் பிள்ளை எண்டால் - ஒரு நிபந்தனையும் இல்லை, நல்லவன் என்பது மட்டுமே போதும் - உனக்கு பிடித்திருந்தால் கூட்டி வா, யாரையும் பிடிக்கவில்லையா - அதுவும் ஒன்றும் கேடில்லை - தனியாக இருப்பதும் ஒன்றும் மோசமில்லை. என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவேன்.

 

1 hour ago, கிருபன் said:


சிம்ரன் 25 யதில் சைஸ் 8 இல் இருந்ததால்தான் 20 வருஷம் கடந்தபின்னரும் சைஸ் 12 இல்தான் இருக்கின்றார். 😍 25 வயதில் சைஸ் 12 - 14 இல் இருந்தால் 20 வருஷம் கடந்த பின்னர் சைஸ் 24 இல் திரும்புகிற பக்கம் எல்லாம் ஒரே மாதிரி தெரியும் உரலாகவல்லவா உடல் இருக்கும்!😂🤣

simran-03.jpg

அழகு ததும்பும் சிம்ரனை வடிவாகப் பாருங்கள்!!! ஆக் என்றா இருக்கு😬

1ம் கருத்துக்கு அகில உலக நமிதா சங்கம் சார்பாக, அதன் ஆயுட்கால தலைவர் என்ற முறையில் வன்மையான கண்டனங்கள்.

2ம் கருத்து - ஆக் என்றில்லை. ஆவ் என்றிருக்கு.

55 minutes ago, கிருபன் said:

சைஸ் 8 இல் 20 வருஷத்துக்கு முன்னால் இருந்ததால்தான் இப்பவும் “பார்க்கிற” மாதிரி இருக்கிறார். அப்பவே சைஸ் 14 இல் இருந்திருந்தால் இப்ப பிந்துகோஷ் மாதிரியல்லா இருப்பா!😜

ஜி,

உங்கள மாரி எல்லாரும் வயது கூட கூட, வெயிட்டையும் கூட்ட மாட்டங்க ஜி.

அப்படியே வாழ்நாள் பூரா 12-14 மெயிண்டேன் பண்ற ஆக்களும் உண்டு, தாலி ஏறி 3 வருடத்தில் 8-16 போற ஆக்களும் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அதுவும் ஒன்றும் கேடில்லை - தனியாக இருப்பதும் ஒன்றும் மோசமில்லை. என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவேன்.

இந்த நேரம் சொல்லலாம்.

அந்த நேரம் அமைதியடைய மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த நேரம் சொல்லலாம்.

அந்த நேரம் அமைதியடைய மாட்டீர்கள்.

வாஸ்தவமான பேச்சுத்தான். காலம்தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

இடம் லண்டன்:  பெண், லண்டனுக்கு 3 வயதில் வந்தவர். ஒரு இளைய சகோதரன். இள வயதில் தாயை இழந்து விட்டார்.  படிப்பு,  அழகு ,பணம் என அனைத்தும் சராசரிக்கு மேல்.  சகல சுதந்திரமும் அவருக்கு இருந்தது.  யாரையும் பிடிக்கவில்லை என  கூறி  விட்டு தனியாக இருக்கிறார். தந்தையும் அண்மையில் இறந்து விட்டார். சகோதரன் வெள்ளை இன பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டார்.

இடம் கனடா: அதே மாதிரி படிப்பு, அழகு என அனைத்தும் உண்டு.  இவர் குடும்பத்தில் மூத்தவர். இளைய சகோதரன்  தமிழ் பெண் நண்பியுடன் சுத்தி திரிகிறார். இப் பெண் சரியான ஆண் கிடைக்கும் வரை  பெற்றோருடன் இருக்க போவதாக சொல்கிறார். பெற்றோர் திருமணம் பற்றி பேசினால் நீங்கள் என்னை வீட்டை விட்டு கலைக்க நினைக்கிறீர்கள் என மிகுந்த கோபப்படுகிறார். கனடாவில் பிறந்தவர். இற்றை வரை ஒரு ஆண் நண்பர் இருக்கவில்லை. பெற்றோர்  ஏனைய  பெற்றோரை போல எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

ஏன் இந்த தலைமுறை  இப்படி இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

இடம் லண்டன்:  பெண், லண்டனுக்கு 3 வயதில் வந்தவர். ஒரு இளைய சகோதரன். இள வயதில் தாயை இழந்து விட்டார்.  படிப்பு,  அழகு ,பணம் என அனைத்தும் சராசரிக்கு மேல்.  சகல சுதந்திரமும் அவருக்கு இருந்தது.  யாரையும் பிடிக்கவில்லை என  கூறி  விட்டு தனியாக இருக்கிறார். தந்தையும் அண்மையில் இறந்து விட்டார். சகோதரன் வெள்ளை இன பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டார்.

இடம் கனடா: அதே மாதிரி படிப்பு, அழகு என அனைத்தும் உண்டு.  இவர் குடும்பத்தில் மூத்தவர். இளைய சகோதரன்  தமிழ் பெண் நண்பியுடன் சுத்தி திரிகிறார். இப் பெண் சரியான ஆண் கிடைக்கும் வரை  பெற்றோருடன் இருக்க போவதாக சொல்கிறார். பெற்றோர் திருமணம் பற்றி பேசினால் நீங்கள் என்னை வீட்டை விட்டு கலைக்க நினைக்கிறீர்கள் என மிகுந்த கோபப்படுகிறார். கனடாவில் பிறந்தவர். இற்றை வரை ஒரு ஆண் நண்பர் இருக்கவில்லை. பெற்றோர்  ஏனைய  பெற்றோரை போல எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

ஏன் இந்த தலைமுறை  இப்படி இருக்கிறது?

மனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். 

1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே?

2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது   VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+.

எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர்.

பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள்.

தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது.

எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

நம்மவர்கள் கல்யாணப் பேச்சு என்று பலரின் மனங்களை நோகடிப்பதை தான் அதிகம் செய்கின்றனர்.

ஒருமுறை ஒரு ஆன்ரி போன் எடுத்து..

தன்ர மகள் அது படிச்சிருக்குது.. இது படிச்சிருக்குது... பி எச் டி எடுத்திருக்கிறா.. அதுஇதென்று ஒரே படிப்பு கதை தான்.

இதில.... தம்பி நீர் ஸ்ருடன்டே.. என்று ஒரு நக்கல் வேற. 

உடனே நாங்க சொன்னம்... உங்கட மகளுக்கு பார்த்து ஒரு புத்தகத்தை கட்டி வையுங்கோ என்று.

எம்மவர்கள்.. இந்தக் காலத்தில் அல்ல எந்தக் காலத்திலும் கல்யாணத்தை ஒரு முதலீடாகத் தான் பாவிக்க முனைகின்றனர்.

அது மனிதர்களை மனங்களை இணைப்பதைச் செய்ய பல இடங்களில்.. தவறிவிடுகிறது என்பதே நம்மவர் கல்யாணங்களின் யதார்த்தம். 

 

அடடா உங்களுக்கும் பேசித்தான் கலியாணம் செய்ததா ?? நம்ப முடியாமல் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, நிழலி said:

ஏற்கனவே ஒரு முறை எழுதியிருந்தனான். எனக்கு தெரிந்த ஒரு பெண் 100 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தான் இன்னும் வாழ்கின்றார். தன் ஆண் பிள்ளைகளில் காதலித்த பெண்களை  சாதி சொல்லி, மதம் சொல்லி பிரித்து வைக்க, ஈற்றில் அவர் இன்னொரு ஆணைக் கூட்டிக் கொண்டு திரிகின்றார். லிவிங் டு கெதர் (living together) முறைப்படி அவனும் அவனும் வாழ்கின்றனர்.

என் பிள்ளைகளுக்கு இப்பவே கூறி வளர்க்கின்றேன். "உங்களுக்கு என்னால் படிப்பிக்க மட்டுமே முடியும்... அந்த அறிவை வைச்சுக் கொண்டு நீங்களே உங்கள் துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதில ஒரு முஸ்லிமை கட்டினால் நான் கொஞ்சம் கவலைப்படுவன், மற்றப்படி யார் என்றாலும் எமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது". இதைக் கேட்கும் என் மகன், "அப்பா நீங்கள் ஒரு ரேசிஸ்ட் (Racist)" என்று சொல்லி விட்டு நகர்வான்.

இங்கயும் அதே நிலைதான்

நாங்க ஒரு  சிலரை மட்டும் பார்த்து எல்லோரும்  அப்படி என்று  முடிவு செய்கின்றோமாம்

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

மெல்லிய பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்குத் தீபதூபம் எடுத்து சமைத்தும் குடுத்து அடிமைபோல் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா ?????😊😂

 

சரி விடுங்க  சுமே

உங்களுக்கு  பொறாமை  என்று நினைக்கப்போகினம்🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

, துணை நல்லவனா? உனக்கு (மனப்) பொருத்தமா? பிடித்திருக்கிறதா? அப்போ கல்யாணம் செய்யுங்கள் என சொல்லும் தைரியம் இருந்தால் - எந்த பதைபதைபுக்கும் காரணமில்லை.

ஊருக்கு பயந்து, தமிழ், வெள்ளாள, படித்த, உயரமான, பசையுள்ள, நல்ல தொழில் பார்க்கும், கெத்தான மாப்பிள்ளைதான் வேணும், என்று நினைத்தால் மட்டுமே பதை பதைப்பு ஏற்படும்.

இதையெல்லாம்  உடைத்து வெளியில்  வந்தவர்கள் நான்  உட்பட பலருண்டு

ஆனால்  எம்மைத்தேடி வருபவர்களின் நோக்கம்  முழுவதும்

அதை கட்டி  எழுப்புவதாக  அல்லது அதை வைத்து  தாமும் அந்த  வட்டத்துக்குள்  வருவதாக மட்டுமே உள்ளதே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதையெல்லாம்  உடைத்து வெளியில்  வந்தவர்கள் நான்  உட்பட பலருண்டு

ஆனால்  எம்மைத்தேடி வருபவர்களின் நோக்கம்  முழுவதும்

அதை கட்டி  எழுப்புவதாக  அல்லது அதை வைத்து  தாமும் அந்த  வட்டத்துக்குள்  வருவதாக மட்டுமே உள்ளதே???

அப்படியென்றால் நீங்கள் தற்போதும் அந்த வட்டத்திற்குள்ளேயா நிற்கிறீர்கள் ? 

வட்டம் இன்னும் உடையவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லோருக்கும் திருமணத்துக்குப் பின் உடம்பு வைப்பதுதான். ஆனால் எல்லோரும் பிந்துகோஷ் போல் வருவதில்லை. முன்னர் இடைபெருத்த பெண்ணையே குழந்தை பெறத் தகுதியானவராககே கருதி திருமணம் செய்தனர். ஏனெனில் பிரசவம் அவர்களுக்குத்தான் இலகுவாக இருந்ததாம்.

மெல்லிய பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்குத் தீபதூபம் எடுத்து சமைத்தும் குடுத்து அடிமைபோல் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா ?????😊😂

உதுக்கெல்லாம் நாங்கள் பயப்பிட்டிடுவமா ????😎

Image result for simran

 

அசிங்கம்

வாழ்க்கை ஒரு வட்டம்.
நீங்கள் சொல்லும் அசிங்கங்களை தாங்கி வாழ்கையை நேர்த்தியாக கொண்டு செல்பவர்கள் தான் ஆண்கள்.
அதாவது ஆண்சிங்கங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

அப்படியென்றால் நீங்கள் தற்போதும் அந்த வட்டத்திற்குள்ளேயா நிற்கிறீர்கள் ? 

வட்டம் இன்னும் உடையவில்லையா ?

மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன்

இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன்

ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும்

எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன்.

இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன்

அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ?????

ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது

செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன்

இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன்

ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும்

எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன்.

இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன்

அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ?????

ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது

செய்யும்.

எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை.

இதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.