Jump to content

என்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Harry.jpg

என்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி

சசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார்.

நேற்றிரவு லண்டன், கிங்ஸ் குரொஸ் ரெயில் நிலையத்திலிருந்து எல்என்இஆர் (LNER) ரெயிலில் எடின்பேர்க்கிற்குப் பயணித்தபோது ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர்.

எடின்பேர்க்கிற்குச் சென்ற அவர் தனது அரச பட்டத்தைக் கைவிட்டதுடன் தன்னை ஹரி என்று மாத்திரமே அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை எடின்பேர்க்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கிவைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எடின்பேர்க் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஹரி; ஸ்கொட்லாந்தில் உள்ள இந்தப் பயண நிறுவனம் சுற்றுச்சூழலைப் பசுமையாக்குவதில் முன்னணியில் இருப்பதாகக் கூறியதுடன் பிரித்தானியா உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

ஜனவரி நடுப்பகுதியில் பக்கிங்கம் அரண்மனையில் நடந்த ரக்பி உலகக்கிண்ண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளவரசர் ஹரி அதன் பின்னர் அவர் கலந்து கொண்ட உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.

ஹரியுடன் மேகனும் மகன் ஆர்ச்சியும் பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார்களா என்பது குறித்து, தெளிவாகத் தெரியவில்லை.

ஹரி மற்றும் மேகன் மார்ச் 31 முதல் தமது அரச கடமைகளில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கைக்குச் செல்லவுள்ளனர்.

அவர்களது விருப்பத்திற்கு ராணி சம்மதம் தெரிவித்ததையடுத்து அவர்கள் தமது மகன் ஆர்ச்சியுடன் கனடாவில் குடியேறியுள்ளனர்.

http://athavannews.com/என்னை-ஹரி-என்று-அழைக்கவு/

Link to comment
Share on other sites

ஆள் கொஞ்சம் 'வித்தியாசம்' தான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச காலத்தில்  அரச பதவியும் இல்லாமல்  ,மனுசியும் இல்லாமல் நடு றோட்டில் நிக்கப் போறார் 🤫
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

இன்னும் கொஞ்ச காலத்தில்  அரச பதவியும் இல்லாமல்  ,மனுசியும் இல்லாமல் நடு றோட்டில் நிக்கப் போறார் 🤫
 

இவர்களின் அரச குடும்பத்தில் அது சாதாரணம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இன்னும் கொஞ்ச காலத்தில்  அரச பதவியும் இல்லாமல்  ,மனுசியும் இல்லாமல் நடு றோட்டில் நிக்கப் போறார் 🤫
 

இது எமக்கு ஒரு சிறந்த பாடம் ....
நாம் மேலைநாடுகளுக்கு வந்து  இதுதான் வாழ்க்கையின் உச்சம் என்று கட்டி பிடித்துக்கொண்டு 
வாழ்க்கையை வாழாது இயந்திரங்கள் போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது இருக்கும் காசுகளை கொண்டு மூன்றாம் தர நாடுகளுக்கு போனாலே 
ஜாலியாக நமக்கு பிடித்தமாதிரி சேமித்து சாப்பிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இன்னும் கொஞ்ச காலத்தில்  அரச பதவியும் இல்லாமல்  ,மனுசியும் இல்லாமல் நடு றோட்டில் நிக்கப் போறார் 🤫
 

பேத்திக்கார கிழவி  பேரன் ஹரியனை சொத்து கித்தை பிரிச்சு குடுக்காமல் வெறுங்கையோடை திரத்தி விடும் எண்டுறியள்? 😎

ஒரு மனுசி  போனால் இன்னொண்டை அமுக்கலாம் தானே? தேப்பன்காரனும் அப்பிடித்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்களின் அரச குடும்பத்தில் அது சாதாரணம் தானே.

இதற்கு முன்னரும் ஒரு,சிலர் அரச பதவிகளை துறந்துள்ளார்கள் 
 

21 hours ago, Maruthankerny said:

இது எமக்கு ஒரு சிறந்த பாடம் ....
நாம் மேலைநாடுகளுக்கு வந்து  இதுதான் வாழ்க்கையின் உச்சம் என்று கட்டி பிடித்துக்கொண்டு 
வாழ்க்கையை வாழாது இயந்திரங்கள் போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது இருக்கும் காசுகளை கொண்டு மூன்றாம் தர நாடுகளுக்கு போனாலே 
ஜாலியாக நமக்கு பிடித்தமாதிரி சேமித்து சாப்பிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

இவர்கள் போனதன் நோக்கம் அரச வாரிசுகளாய் இருந்தால் தாங்கள் சுதந்திரமாய் ,அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியாது என்பதால் தவிர , நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை ...ஹரி தனக்கு தெரிந்த சிலரிடம் மேகனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக வாசித்திருந்தேன்...தாங்கள் ஆடம்பமாய் வாழ போதுமான பணம் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை 
 

19 hours ago, குமாரசாமி said:

பேத்திக்கார கிழவி  பேரன் ஹரியனை சொத்து கித்தை பிரிச்சு குடுக்காமல் வெறுங்கையோடை திரத்தி விடும் எண்டுறியள்? 😎

ஒரு மனுசி  போனால் இன்னொண்டை அமுக்கலாம் தானே? தேப்பன்காரனும் அப்பிடித்தானே

மனிசி இவர்கள் கேட்டதை கொடுக்காததால் தான் இவர்கள் பிரிந்து போனவர்கள்😂 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.