Jump to content

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

canada-2.jpg

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

18 வயதிற்கு உட்பட்டவர்களை சிறுவர்கள் என்றே அழைப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர்களின் வயதுக்கு கணிப்பீட்டின் படி 10 வயது வரைக்கும் தான் அப்படி அழைப்பது. அதன்பின் இள மங்கை என்றுதான் குறிப்பிடுவர். பலரும்சரியான சொல்லை பயன்படுத்துவதில்லை.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

 

வாவேன் போவேன்,  are you from Kuppulan?

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

தமிழர்களின் வயதுக்கு கணிப்பீட்டின் படி 10 வயது வரைக்கும் தான் அப்படி அழைப்பது. அதன்பின் இள மங்கை என்றுதான் குறிப்பிடுவர். பலரும்சரியான சொல்லை பயன்படுத்துவதில்லை.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

அப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? தமிழ் மடந்தையை காணவில்லை என்றா?

ஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.

எல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்? :cool:

Link to comment
Share on other sites

On ‎2‎/‎26‎/‎2020 at 11:24 PM, தமிழ் சிறி said:

canada-2.jpg

கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

பெயரை வெளியிடவில்லை ? காரணம் அவர் இளையவர் (juvanille) என்பதால் ??

பீல் பிராந்திய காவல்துறை மின்வலையில் தேடினேன், ஆனால் இந்த தேடலை காணமுடியவில்லை.

அவர் நலமாக வீடு வந்து சேர வேண்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

 

வாவேன் போவேன்,  are you from Kuppulan?

அரவு விடுபட்டுப் போய்விட்டது 😃

1 hour ago, நிழலி said:

அப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? தமிழ் மடந்தையை காணவில்லை என்றா?

ஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.

எல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.

இதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்? :cool:

உண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

Link to comment
Share on other sites

Police looking for 14 year old girl last seen in Brampton

by Jonah Shinuda on February 23, 2020

 

The public's help is requested in finding a missing person.

Angela Rathnayake, 14, has been missing since 6:00 p.m. today and was last seen in the area of Juliette and Jacobs Square.

She’s described as South Asian, 5’1”, with a slim build and short black hair, wearing a blue sweartshirt, white t-shirt, blue jeans, and black boots.

Anyone with information on her whereabouts should contact police at 905-453-3311.

Photo: Peel Regional Police handout

https://www.inbrampton.com/police-looking-for-14-year-old-girl-last-seen-in-brampton-0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழினி said:

Police looking for 14 year old girl last seen in Brampton

by Jonah Shinuda on February 23, 2020

 

The public's help is requested in finding a missing person.

Angela Rathnayake, 14, has been missing since 6:00 p.m. today and was last seen in the area of Juliette and Jacobs Square.

She’s described as South Asian, 5’1”, with a slim build and short black hair, wearing a blue sweartshirt, white t-shirt, blue jeans, and black boots.

Anyone with information on her whereabouts should contact police at 905-453-3311.

Photo: Peel Regional Police handout

https://www.inbrampton.com/police-looking-for-14-year-old-girl-last-seen-in-brampton-0

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இளம் குமரி என்று போட்டால் தான் அது கவர்ச்சியாக இருந்திருப்பதுடன் தவறான விதத்தில் பார்க்கப்படுவதற்கு (misleading) ஏதுவாகவும் அமைந்து இருக்கும்.

17 வயது பெண்ணை / ஆணை காணவில்லை என்றாலும் இங்குள்ள தரமான ஆங்கில ஊடகங்களும் பொலிஸ் அறிக்கைகளும் 17 year girl  / 17 year boy என்றே போடும். 18 to 19 வயது என்றால் young man / young woman

Link to comment
Share on other sites

55 minutes ago, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

Image result for raise hand smiley

Link to comment
Share on other sites

45 minutes ago, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழினி said:

Image result for raise hand smiley

முதலாவது திறமைசாலி... தமிழினி.
அடுத்து யார்.....பார்ப்போம். :grin:

2 minutes ago, நிழலி said:

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.

நிழலி... புரியவில்லை. :rolleyes:
பெற்றோரால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா 
என்ன காரணத்துக்காக... என்று, கூற  முடியுமா 

Link to comment
Share on other sites

39 minutes ago, தமிழ் சிறி said:

பெற்றோரால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா 

என்ன காரணத்துக்காக... என்று, கூற  முடியுமா 

கணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை  கொலையும் செய்வதை என்ன சொல்வது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழினி said:

கணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை  கொலையும் செய்வதை என்ன சொல்வது :(

ஓ.... கடவுளே....
தமிழரில் இந்த,  "வருத்தம்" வரக் கூடாது, என... 
ஆண்டவனை பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

.....

பிற் குறிப்பு: 

தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

giphy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

giphy.gif

அட... மதுரை, ராஜவன்னியன். :grin:
தமிழ்நாட்டுக் காரனுக்கும், இது தெரிந்தது ஆச்சரியம்.

வன்னியன் சார்.... எப்படி அந்த வித்தியாசத்தை உணர முடிந்தது 
என்பதற்கான.. விளக்கத்தை, ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

நானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.
இருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.
முகமே பாக்கத்தேவையில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.
இருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.
முகமே பாக்கத்தேவையில்லை. 😎

குமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும்,
கோத்தபாயா...  ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்....
அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள்.

தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்....  
காத்தோடு....  கரைந்த,  செய்தியாக இருந்திருக்கும். :)

Link to comment
Share on other sites

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரவு விடுபட்டுப் போய்விட்டது 😃

இதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.

 

நல்ல தமிழில் பதில் எழுதியிருக்கிறீங்கள்

அக்கா, கோபப்படாமல் பதில் எழுதியதற்கு நன்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 1:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.

இவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு ?????

நல்லவேளை

சுமே  யாழ் களத்தின் மட்டுநராக  இல்லை

இருந்தால்  நாமெல்லாம்......???😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2020 at 5:45 PM, தமிழ் சிறி said:

canada-2.jpg

தமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.
ஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே.. 
இவர், சிங்கள சிறுமியாகத்தான்  இருப்பார் என, ஊகித்தேன்.

எப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.

பிற் குறிப்பு: 
தமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்... 
உடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.
யாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது  இருந்தால்...
கையை... உயர்த்துங்கள்.  :)

என்னை நேரில் பாத்தால் நான் தமிழ் என்று சொல்ல மாட்டீங்கள்  tw_lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.