Jump to content

யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-kokkuvil.jpg

யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்!

யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது.

இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது.

குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக்குதல் நடாத்தியிருக்கின்றது.

இலக்க தகடுகளற்ற மோட்டார் சைக்கிளில் வந்த முகங்களை மூடியிருந்த கும்பலே இந்த தொடர் தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://athavannews.com/யாழில்-தொடரும்-அடாவடி-நே/

Link to comment
Share on other sites

இதுவும் உயிர்த்த ஞாயிறு போன்று மக்களுக்கு ஒரு செய்தியை கூறுவதாக அரங்கேற்றப்படுகின்றது. 

நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் ஒரு பாதுகாப்பை உறுதி செய்யும் வல்லமை கொண்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று. 

கொடுமை சரவணா  😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

இதுவும் உயிர்த்த ஞாயிறு போன்று மக்களுக்கு ஒரு செய்தியை கூறுவதாக அரங்கேற்றப்படுகின்றது. 

நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் ஒரு பாதுகாப்பை உறுதி செய்யும் வல்லமை கொண்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று. 

கொடுமை சரவணா  😞 

தெற்கின் தந்திரம் இங்கும் எடுபடும் என்னும் உள்நோக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.