Jump to content

கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து!


Recommended Posts

கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து!

இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற்  ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார்.

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது.

ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில் கனடாவும் பங்கெடுக்குமா? என்று கேட்டார்.

 

 

 

.

 

Sri-lanka-Issue-in-Canada-Parliament-2.j

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, “நாங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றோம். அது இலங்கையாகவோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் வலியுறுத்துவோம்.

அதற்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையினை கனடா கொண்டு வந்து, மனித உரிமைகள் தொடர்பான கடமைக்கு இணங்கியது.

நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை கடுமையாக எதிர்க்கிறோம். இது இறையாண்மையின் அழிவுக்கு உதவுகிறது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sri-lanka-Issue-in-Canada-Parliament-3.j

http://athavannews.com/கனடா-நாடாளுமன்றில்-இலங்க/

 

Link to comment
Share on other sites

32 minutes ago, nunavilan said:

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, “நாங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றோம். அது இலங்கையாகவோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் வலியுறுத்துவோம்.

அதற்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையினை கனடா கொண்டு வந்து, மனித உரிமைகள் தொடர்பான கடமைக்கு இணங்கியது.

நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை கடுமையாக எதிர்க்கிறோம். இது இறையாண்மையின் அழிவுக்கு உதவுகிறது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனடிய பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் தமிழ் இனவழிப்பு தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாடு என்ன? - ஜஸ்டின் ரூடோ மழுப்பலான பதில். அதுவும் இராச தந்திரம் தான் 🙂  

 

Link to comment
Share on other sites

உள் நாட்டுப் பிரச்சனைகளுக்கே உறுதியான முடிவு எடுக்கத் தெரியாதவர் ரூடோ. எம் விடயத்தில் எப்பவும் மறுப்பலான பதில் தான் கொடுத்து வருகின்றார்.

இந்த முறை வழக்கமாக பங்கெடுக்கும் தைப் பொங்கல் விழாவிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

உள் நாட்டுப் பிரச்சனைகளுக்கே உறுதியான முடிவு எடுக்கத் தெரியாதவர் ரூடோ. எம் விடயத்தில் எப்பவும் மறுப்பலான பதில் தான் கொடுத்து வருகின்றார்.

இந்த முறை வழக்கமாக பங்கெடுக்கும் தைப் பொங்கல் விழாவிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என அறிந்தேன்.

51 minutes ago, ampanai said:

கனடிய பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் தமிழ் இனவழிப்பு தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாடு என்ன? - ஜஸ்டின் ரூடோ மழுப்பலான பதில். அதுவும் இராச தந்திரம் தான் 🙂  

 

ம்ம்ம்

கேள்விக்கு பதிலளிப்பதைவிடுத்து

பயங்கரவாதம்  பற்றி பேச்சை  மாற்றும்போதே புரிகிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.