Jump to content

தயவுசெய்து சாகவிடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-E6-C8512-7-A3-E-49-C9-8422-DE4-DA2-C32
Alfred Schnurreக்கு
92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.

தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப்  பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு  முரணான சட்டம்தான் அமுலில் இருக்கிறது. ஆனால் அயல்நாடான சுவிற்சலாந்தில் அது சாத்தியமாகிறது

2015இல்கருணைக் கொலையை அனுமதியுங்கள்என்று மக்கள் மத்தியில் எழுந்த அலையை யேர்மனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி அரசியல்வாதிகள்  தோற்கடித்து விட்டார்கள்.

“இன்னும் எவ்வளவு காலம் நான் சாவதற்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் விரைவில் அது நடக்கும். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கான முடிவை எடுக்க உரிமை இருக்கிறது. அது அவர்களது சாவுக்கும் பொருந்த வேண்டும். சட்டங்களும், அரசியல்வாதிகளும் மற்றவர்கள் வாழ்க்கைக்குள் உள் நுளைவது சரியானதல்லஎன்று தனது வாழ்வை நிறைவு செய்யும் நிலையில் Alfred தெரிவிக்கிறார்

8641-B517-531-E-4316-8-E73-2-CC6-BBFA017

யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை  இன்று (26.02.2020) அறிவித்திருக்கிறது

கருணைக்கொலைக்கு ஆதரவாக பலர் தாக்குதல் செய்த கோரிக்கைகளை ஆராய்ந்த மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், “இந்த பொதுத் தடையிலிருந்து நாம் விலகிச் செல்வது நல்லது. ஒருவர் வாழும் போது எடுக்கும் தீர்மானங்களுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதுபோல் இறப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் உரிமையும் இருக்க வேண்டும்என்று  அது அறிவித்திருக்கிறது. அதாவது யேர்மனிய மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம், கருணைக்கொலையை ஏற்று தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

ஆனால் இந்த முடிவு மிகவும் எளிதானது அல்ல.

யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதானவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் இந்த முடிவு ஒரு அபாயகரமான வழியைக் காட்டிவிடும்

வாழ்க்கையில் சாதாரண விரக்தியில் உள்ளவர்களும் இந்த கருணைக் கொலை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள்

மருத்துவர்களும், சில உதவி அமைப்பினரும் இதை ஒரு வர்த்தகமாகவே ஆக்கிவிடுவார்கள்” 

“மரணத்துக்கான முடிவை மனிதன் எடுக்க முடியாது” என்று பல காரணங்களை  அரசியல் கட்சிகள், கிருஸ்தவ தேவாலயங்கள்,மதகுருக்கள் முன்வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kavi arunasalam said:

மரணத்துக்கான முடிவை மனிதன் எடுக்க முடியாது” என்று பல காரணங்களை  அரசியல் கட்சிகள், கிருஸ்தவ தேவாலயங்கள்,மதகுருக்கள் முன்வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.

 

முதலில் மதப்போரால் இறப்பதையும்,அரசியல் போரால் மரணிப்பதையும்  இவர்கள் தடுத்து நிறுத்தட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத வயதானவர்களுக்கும் 

இது தவறு.ஒருவருக்கு சுகயீனம் அதனால் மிகவும் கஸ்டப்படுகிறார் என்றால் அவரை கருணைக்கொலைக்கு அனுமதிக்கலாம்.

மற்றும்படி வாழ இயலாமல் ஏதோ விரக்தியில் சாகப் போகிறேன் என்றால் அதை அனுமதிக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

ஒவ்வொருவரும் அந்தந்த நிலைக்கு தள்ளுப்படும் போதுதான் அதைப்பற்றிய தெளிவு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவரும் அந்தந்த நிலைக்கு தள்ளுப்படும் போதுதான் அதைப்பற்றிய தெளிவு வரும்.

இளங்கன்று பயமறியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

தனிமையோடு போராடுவதும் அடுத்தவரின் உதவி இல்லாமல் வாழ்வதென்பதும் முதுமையில் அவ்வளவு இலகு இல்லை சகோதரி.அன்பே சிவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

இஞ்சை ஜேர்மனியிலை களவாய் செய்தவங்கள்.இரண்டு மூண்டு இடத்திலை பிடிபட்டு போச்சுது.

எங்கடை ஊரிலை உந்த கோதாரிவிழுந்த சட்டம் கிட்டம் ஒண்டுமில்லை.ஆக்களின்ரை உதவியும் தேவையில்லை.
இருக்கவே இருக்கு பொலிடோல்.தண்டவாளம்.கிணறு.கயிறு. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இவர் எல்லையை கடந்து சுவிஸுக்கு போகலாமே ...?
அங்கு மூன்று நாலு நாளில் போட்டு தள்ளுவார்கள். 

கொஞ்சம் காசு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் 

கேள்வியும் கேட்டு பதிலையும் தந்திருக்கிறீர்கள் மருதங்கேணி. இந்த விடயம் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ காப்புறுதி அதற்கான பொறுப்பை ஏற்கும்.

14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிற பிரச்சனையள் போதாதென்று இதுவேற

இதுவும் நீண்ட காலமாக யேர்மனியில் பேசப்படும் (இருக்கிற) பிரச்சனைதான் சகோதரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.