Jump to content

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
2 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

உண்மை...

.பிரபாகரன் காலத்தில் இந்த சிவப்பு சிந்தனையாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது ?.....பிரபாகரன் சர்வாதிகாரி என்ற பிரச்சாரத்தை சர்வதேசரீதியிலும்...இந்திய அரசிடமும் முறைப்பாடு  செய்வதிலயே சிவப்பு சிந்தனையாளர்கள்நேரத்தை கழித்தனர்.....மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கவே இல்லை....ஏன்?
சிவப்பு சிந்தனையாளருக்கு தமிழ் தேசியத்தை விட சிறிலங்கா தேசியம் முதலிடம் பெற்றது.....என எடுத்து கொள்ளலாமா?

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

3 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

Link to comment
Share on other sites

Yes, I have seen that in 2019, Same village Puttur in Sri Lanka, Went for a funeral and saw that.

ஆம், 2019 ஆம் ஆண்டில், இலங்கையில் அதே கிராமமான புட்டூர், ஒரு இறுதி சடங்கிற்குச் சென்று அதைப் பார்த்தேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

 

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

 

2 hours ago, Kapithan said:

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம்

நீங்கள் சொல்வது ஏதோ உண்மைதான். ஆனால் மரணம் நடந்த வீட்டில் சாப்பிட்டால், தண்ணீர் குடித்தால் கோயிலுக்கு போகேலாது. சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

 

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

Link to comment
Share on other sites

23 minutes ago, satan said:

சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

இது சைவர்களின்ட மூடநம்பிக்கைகளில் ஒன்டு என்டு தான் நான் நினைச்சிருந்தான். இப்ப இந்த வழக்கம் வெகுவா மாறிட்டு. இளம் சமுதாயம் மத்தியில இந்த நம்பிக்கை இல்லை.  

இப்ப 14 நாளுக்கு பின்னரே கண்டறியக்கூடிய கொரோனா வைரஸ் போன்ற ஏதாவது தொற்று பயங்கர நோய் காரணமாக புனித, பொது வெளில நோய்கள் பரவிடக் கூடாது என்ற ஆழமான விஞ்ஞான முடிவாகவும் இத சைவர்களின்ட ஆழமான விஞ்ஞான நம்பிக்கையா கருத வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

 

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

 

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

ஐயா கோசான் 

குப்பை கூழங்களை எரிப்பதையே நான் விரும்புபவனல்ல. புதைப்பதையே விரும்புபவன். அப்படியிருக்க உடலங்களை குடியிருப்புக்கள் மத்தியில் எரிப்பதை ஆதரிப்பதாக எப்படி புரிந்து கொண்டீர். நான் எந்த்வொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லையே. 

எனது எழுத்திலேதும் தவறோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

இதில் கோவிக்க ஏதுமில்லை ராஜேஸ். நீவீர் எப்போதுமே சிண்டுமுடிவதால் நானும் உம்முடன் சற்றே தனகினேன்(😎) . மற்றும்படி நீங்கள் என்னைக் கோவித்தாலும் நான் உங்களுடன் வேற்றுமை பாராட்டப் போவதில்லை.  

ஏனென்றால் நான் Kapithan ஆக்கும்😀

12 minutes ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

 

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

யோவ் ராஜேஸ்,

நான் என்ன சாதியை கேட்டேன் என்று நினைத்தோ சன்னதம் ஆடுகிறீர்.  அப்படி நினைப்பீராக இருந்தால் இதோ குறித்துக் கொள்ளுமையா.

சாதி, சமயம், பிரதேசவாதம் பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாளலல்ல.

(இப்ப ஓகேயா ?)

4 minutes ago, மாங்குயில் said:

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

👍 நன்றி.

Link to comment
Share on other sites

உண்மைதான் புத்தன். ஆனாலும் நாம் அவர்கள்போல இல்லையே. நம்மிடம் உலகத்தில் மட்டுமல்ல மயானத்திலும் சாதி இருக்கே.

Link to comment
Share on other sites

நாம் பிணங்களை எரிக்கிறோம். குடிமனைகளுக்குள் வைத்து எரிப்பது தடைசெய்யபடுதல் அவசியமல்லவா? சாதியில்லாத பொது மின் மயானங்கள் தமிழக நகரங்களில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அனுபவம் முக்கியமல்லா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

Link to comment
Share on other sites

இந்த விஞ்ஞான யுகத்தில் சமூக விடுதலைக்கு விஞ்ஞானம் என நாம் செயல்பட வேண்டாமா?  ஊருக்குள் உள்ள எரியூட்டும் பழைய தொழில்நுட்ப மயானங்களை மூடிவிட்டு / புங்காக்களாக மாற்றிவிட்டு ஒதுக்கு புறமான இடங்களில் உள்ள மயானங்களை மின்மயானங்களாக மாற்றும் பிரேரனையை முன்வைத்து ஏகமனதாக ஆதரிக்குமாறு யாழ் அங்கத்தவர்களைக் கோருகிறேன். யாழ் குடும்பம் ஆதரிக்கும் பட்சத்தில் யாழ் இணைய தொடர்பாடல் வலையை முழுமையாக பயன்படுத்தி இத்திட்டத்தை முதலில் பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மக்கள் மற்றும் நிர்வாகிகள்  மத்தியிலும் பின்னர் முழு வடகிழக்கு மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் எடுத்து செல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

யூகே பிணத்தை எரிப்பதை தடை செய்யவில்லை. திறந்த வெளியில் எரிப்பதைதான் தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

2 hours ago, putthan said:

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

போராட்டத்தின் மூலம் சாதி பார்ப்பதை நிறுத்த முடியாது ஆனால் சாதிய அடக்குமுறையை நிறுத்தலாம். 

40-50-60 களில் மக்கள் போராடி இருக்காவிட்டால், இப்பவும் யாழில் பல சாதியினர் கோவிலுக்கு வெளியேதான் நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

மயானம் அருகே குடியிருக்கும் அளவுக்கு அவர்களுக்கு வாழ இடம் இல்லை யூட். 

அவர்கள் அடாத்தாக கூட பிடிக்கவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 

மேலே வாதவூரன் எழுதியதையும் பாருங்கள் - அந்த பகுதியில் வேறு எங்கு யாரும் அவர்களுக்கு யாரும் காணி விற்க முன்வரவில்லை.

(எனது வீட்டை வேறு சாதி மனிதன் ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்து நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும் 😂).

அதே ஊரில் பலர் வேறு மயானங்களில்தான் எரிக்கிறார்கள். (இரெண்டு வருடத்துக்கு ஒரு சாவா நடக்கும்).

ஒரு சிலர்தான் சாதித்தடிப்பால் இப்படி செய்கிறர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

 

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

 

 


கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

 

Link to comment
Share on other sites

19 minutes ago, மாங்குயில் said:


கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

 

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.