Jump to content

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
2 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

உண்மை...

.பிரபாகரன் காலத்தில் இந்த சிவப்பு சிந்தனையாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது ?.....பிரபாகரன் சர்வாதிகாரி என்ற பிரச்சாரத்தை சர்வதேசரீதியிலும்...இந்திய அரசிடமும் முறைப்பாடு  செய்வதிலயே சிவப்பு சிந்தனையாளர்கள்நேரத்தை கழித்தனர்.....மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கவே இல்லை....ஏன்?
சிவப்பு சிந்தனையாளருக்கு தமிழ் தேசியத்தை விட சிறிலங்கா தேசியம் முதலிடம் பெற்றது.....என எடுத்து கொள்ளலாமா?

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

3 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

Link to comment
Share on other sites

Yes, I have seen that in 2019, Same village Puttur in Sri Lanka, Went for a funeral and saw that.

ஆம், 2019 ஆம் ஆண்டில், இலங்கையில் அதே கிராமமான புட்டூர், ஒரு இறுதி சடங்கிற்குச் சென்று அதைப் பார்த்தேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

 

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

 

2 hours ago, Kapithan said:

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம்

நீங்கள் சொல்வது ஏதோ உண்மைதான். ஆனால் மரணம் நடந்த வீட்டில் சாப்பிட்டால், தண்ணீர் குடித்தால் கோயிலுக்கு போகேலாது. சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

 

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

Link to comment
Share on other sites

23 minutes ago, satan said:

சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

இது சைவர்களின்ட மூடநம்பிக்கைகளில் ஒன்டு என்டு தான் நான் நினைச்சிருந்தான். இப்ப இந்த வழக்கம் வெகுவா மாறிட்டு. இளம் சமுதாயம் மத்தியில இந்த நம்பிக்கை இல்லை.  

இப்ப 14 நாளுக்கு பின்னரே கண்டறியக்கூடிய கொரோனா வைரஸ் போன்ற ஏதாவது தொற்று பயங்கர நோய் காரணமாக புனித, பொது வெளில நோய்கள் பரவிடக் கூடாது என்ற ஆழமான விஞ்ஞான முடிவாகவும் இத சைவர்களின்ட ஆழமான விஞ்ஞான நம்பிக்கையா கருத வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

 

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

 

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

ஐயா கோசான் 

குப்பை கூழங்களை எரிப்பதையே நான் விரும்புபவனல்ல. புதைப்பதையே விரும்புபவன். அப்படியிருக்க உடலங்களை குடியிருப்புக்கள் மத்தியில் எரிப்பதை ஆதரிப்பதாக எப்படி புரிந்து கொண்டீர். நான் எந்த்வொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லையே. 

எனது எழுத்திலேதும் தவறோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

இதில் கோவிக்க ஏதுமில்லை ராஜேஸ். நீவீர் எப்போதுமே சிண்டுமுடிவதால் நானும் உம்முடன் சற்றே தனகினேன்(😎) . மற்றும்படி நீங்கள் என்னைக் கோவித்தாலும் நான் உங்களுடன் வேற்றுமை பாராட்டப் போவதில்லை.  

ஏனென்றால் நான் Kapithan ஆக்கும்😀

12 minutes ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

 

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

யோவ் ராஜேஸ்,

நான் என்ன சாதியை கேட்டேன் என்று நினைத்தோ சன்னதம் ஆடுகிறீர்.  அப்படி நினைப்பீராக இருந்தால் இதோ குறித்துக் கொள்ளுமையா.

சாதி, சமயம், பிரதேசவாதம் பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாளலல்ல.

(இப்ப ஓகேயா ?)

4 minutes ago, மாங்குயில் said:

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

👍 நன்றி.

Link to comment
Share on other sites

உண்மைதான் புத்தன். ஆனாலும் நாம் அவர்கள்போல இல்லையே. நம்மிடம் உலகத்தில் மட்டுமல்ல மயானத்திலும் சாதி இருக்கே.

Link to comment
Share on other sites

நாம் பிணங்களை எரிக்கிறோம். குடிமனைகளுக்குள் வைத்து எரிப்பது தடைசெய்யபடுதல் அவசியமல்லவா? சாதியில்லாத பொது மின் மயானங்கள் தமிழக நகரங்களில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அனுபவம் முக்கியமல்லா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

Link to comment
Share on other sites

இந்த விஞ்ஞான யுகத்தில் சமூக விடுதலைக்கு விஞ்ஞானம் என நாம் செயல்பட வேண்டாமா?  ஊருக்குள் உள்ள எரியூட்டும் பழைய தொழில்நுட்ப மயானங்களை மூடிவிட்டு / புங்காக்களாக மாற்றிவிட்டு ஒதுக்கு புறமான இடங்களில் உள்ள மயானங்களை மின்மயானங்களாக மாற்றும் பிரேரனையை முன்வைத்து ஏகமனதாக ஆதரிக்குமாறு யாழ் அங்கத்தவர்களைக் கோருகிறேன். யாழ் குடும்பம் ஆதரிக்கும் பட்சத்தில் யாழ் இணைய தொடர்பாடல் வலையை முழுமையாக பயன்படுத்தி இத்திட்டத்தை முதலில் பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மக்கள் மற்றும் நிர்வாகிகள்  மத்தியிலும் பின்னர் முழு வடகிழக்கு மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் எடுத்து செல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

யூகே பிணத்தை எரிப்பதை தடை செய்யவில்லை. திறந்த வெளியில் எரிப்பதைதான் தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

2 hours ago, putthan said:

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

போராட்டத்தின் மூலம் சாதி பார்ப்பதை நிறுத்த முடியாது ஆனால் சாதிய அடக்குமுறையை நிறுத்தலாம். 

40-50-60 களில் மக்கள் போராடி இருக்காவிட்டால், இப்பவும் யாழில் பல சாதியினர் கோவிலுக்கு வெளியேதான் நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

மயானம் அருகே குடியிருக்கும் அளவுக்கு அவர்களுக்கு வாழ இடம் இல்லை யூட். 

அவர்கள் அடாத்தாக கூட பிடிக்கவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 

மேலே வாதவூரன் எழுதியதையும் பாருங்கள் - அந்த பகுதியில் வேறு எங்கு யாரும் அவர்களுக்கு யாரும் காணி விற்க முன்வரவில்லை.

(எனது வீட்டை வேறு சாதி மனிதன் ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்து நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும் 😂).

அதே ஊரில் பலர் வேறு மயானங்களில்தான் எரிக்கிறார்கள். (இரெண்டு வருடத்துக்கு ஒரு சாவா நடக்கும்).

ஒரு சிலர்தான் சாதித்தடிப்பால் இப்படி செய்கிறர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

 

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

 

 


கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

 

Link to comment
Share on other sites

19 minutes ago, மாங்குயில் said:


கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

 

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.