Jump to content

ரம்யா நம்பீசன் பேட்டி: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன"


Recommended Posts

ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து...

 

கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது?

பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக்களுக்குத் தேவையான விஷயங்களையும் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்தக் கதை எனக்குள் தோன்றியவுடன் இதைத் தமிழ் மொழியில் தான் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். ஏனெனில், நம்முடைய எண்ணங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்ய தமிழ் மொழி நல்ல களம்.

 

கேள்வி: `UNHIDE' பொறுத்தவரை வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ள. வசனங்களை நீங்கள்தான் எழுதினீர்களா?

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன" - ராம்யா நம்பீசன்

படத்தின் காப்புரிமை Facebook/RemyaNambeesan

பதில்: `பிளான் பண்ணி பண்ணனும்` என்கிற காமெடி படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் என்னுடைய ஐடியாக்கள் குறித்து சொன்னேன். வசனங்கள் ஷார்ப் ஆக இருக்க வேண்டும் என ஆங்கிலத்தில் உதாரணங்கள் சொன்னேன். ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் வசனங்கள் அமைப்பதற்கு எனக்கு உதவி செய்தார்.

கேள்வி: பாலியல் ரீதியான குற்றங்களுக்கு எதிரான நிரந்தரத் தீர்வு என்ன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. நீங்கள் அந்தக் குற்றங்களுக்கு எது தீர்வாகும் என நினைக்கிறீர்கள்?

பதில்: இந்த சிஸ்டம் தவறாக இருக்கிறதா இல்லை நம்முடைய பார்வை தவறாக உள்ளதா என எதுவுமே தெரியவில்லை. நாம அந்தக் குற்றத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என எனக்குள்ளே தோன்றிய கேள்விகளைத்தான் இந்தக் குறும்படம் மூலமாக கேட்டிருக்கிறேன். இப்போதிலிருந்தாவது அந்தக் கேள்விக்கான பதிலை முன்னெடுக்க வேண்டும். நான் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பெண்ணோ, ஆணோ அவர்களை மனிதர்களாகப் பாருங்கள் என்பது தான் நான் சொல்ல நினைக்கிற விஷயம். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.

கேள்வி: தமிழ் சினிமாவில் படங்கள் மூலமாக சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?

பதில்: எனக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அப்படி இயக்குநராவதற்கு நிறைய அனுபவமும், வாசிப்பும் தேவைப்படுகிறது. இயக்குநர் ஒரு கதையை அழகாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எனக்கு கொஞ்சம் காலமும், அனுபவமும் தேவை. நிச்சயம் இயக்குநராக என்னைப் பார்க்கலாம். ஆனால், இத்தனை வருடங்கள் நான் சினிமாவில் இருந்திருக்கிறேன். என் மனதுக்குள் பல ஆண்டுகளாகத் தோன்றிய விஷயங்களை என்னுடைய கலை வடிவம் மூலமாக வெளிப்படுத்த நினைத்தேன். அதன் வெளிப்பாடே இந்தக் குறும்படம்.

கேள்வி: 'மீ டூ'குறித்து உங்களின் பார்வை?

பதில்: தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை முதலில் தைரியமாக அவர்கள் வெளியில் சொல்வதற்காகவே தலை வணங்குகிறேன். ஏனெனில், பல வலிகளைத் தாண்டித்தான் அவர்கள் மீ டூ குறித்துப் பேசுகிறார்கள். யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அதற்கு சமமான உரிமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால்தான் சமூகத்தில் ஏதாவது மாறும். இப்பொழுது எல்லா இடங்களிலும் பெண்கள் குறித்த பார்வை மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் இந்த விஷயங்கள் மாறாது. தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-51599751

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.