Jump to content

Smart வில்லன்


Recommended Posts

a12.jpg?itok=zb8fNRh0

 

நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன்  காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார்  கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து  அவர் மனம் திறந்ததாவது...

'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது?

கதை  கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ்  காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு  ஸ்டைலிஷா இருந்தது.

' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ?

எனக்கும்  அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக  மக்கள் பார்த்து இருக்காங்க. அவருக்கு வில்லனா நான் நடிக்கும் போது பெரிய  போட்டி இருந்தது.

* மாபியா படத்தில் உங்களுக்கு ஜோடி இருக்காங்களா?

வில்லனுக்கு யாருங்க ஜோடி தராங்க. பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு ஹீரோயின் கொடுத்தால் வேணாம்னா சொல்லப் போறேன்.

' வில்லனாக நடிக்க விரும்புவது ஏன்?

'அஞ்சாதே'க்கு  பின் 'முரண்', 'துப்பறிவாளன்', 'திருட்டு பயலே 2', 'மாபியா', தெலுங்கில்  'ஜவான்' மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் ஒரு படம் என வில்லனாக  நடிக்கிறேன். ஹீரோவா நடிக்கும் போது இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடு இருக்கும். வில்லனாக நடிக்கும் போது சுதந்திரம் கிடைக்கும்.

' அருண்விஜய் ஒரு 'ஜிம் ேபாய்' நீங்க எப்படி ?

அருண்விஜய்யை  முதல்ல பார்த்ததே ஜிம்மில் தான். அவர் அப்பாவுடன் தான் ஜிம்க்கு வருவார்.  நானும் உடற்பயிற்சி மீது ஆர்வம் செலுத்துவதற்கு இவர்கள் ஒரு காரணம்.

' சினேகா நடித்த 'பட்டாசு' படம் பார்த்தீங்களா ?

ஒரு  கணவரா அவங்கள அந்த கேரக்டரில் பாக்கும் போது பெருமையா இருந்துச்சு. ஒரு  சினிமா ரசிகனாக பார்க்கும் போது அவங்க முயற்சி பாராட்டும்படி இருந்துச்சு.  'பட்டாசு' எனக்கும், குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் திருப்தியான படம்.

'தனுஷ் இயக்கத்தில் நீங்க நடித்தது குறித்து?

அவர்  குறித்து நான் என்னவெல்லாம் நினைச்சுட்டு வந்தேனோ அதை எல்லாம் பிரேக்  பண்ணிட்டே வந்துட்டு இருக்காரு. எவ்வளவு திறமையான நடிகரோ அந்த அளவு  திறமையான இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர். இதை எல்லாம்  சாதாரணமாக செஞ்சிட்டு இருக்காரு.

' தற்போது வரும் புது இயக்குனர்கள் ?

'மாபியா'  கார்த்திக் நரேனுக்கு 2வது படம். இவர் எந்த இயக்குனரிடமும் வேலை  பார்க்கலை, அனுபவமும் இல்லை. ஆனால் ஒரு இயக்குனராக ஜெயிச்சிருக்கார்.  கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு உதாரணமாக சொல்லலாம். புது இயக்குனர்கள்  வரும்போதே அவர்களுக்கான திறமைகளை வளர்த்துட்டு வர்ற மாதிரி தெரியுது.

* விஷால் கூட நடிக்கிற 'துப்பறிவாளன்' குறித்து கூறுங்கள்?

'துப்பறிவாளன்1'ல் நடிச்சதை விட 'துப்பறிவாளன் 2' நடிக்கும் போது ரொம்ப நெருக்கமா ரெண்டு பேரும் ஆகிட்டோம்ணு சொல்லலாம்.

* உங்க திரை அனுபவத்துல 18வருஷத்துல 35படங்கள் ?

எந்தப்  படத்தை பார்த்தாலும் நல்லா பண்ணி இருக்கலாமேனு தோணும். இந்த 18வருஷம்  மேடு பள்ளங்கள் தாண்டி வந்திருக்கேன். என் எதிர்காலம் உறுதியாக இருக்கும்னு  நம்புறேன்.

* உங்களுக்கு படம் இயக்க, தயாரிக்க ஆர்வம் இருக்கா ?

நிறைய கதை மனசுல ஓடிகிட்டே இருக்கு. படம் தயாரிப்பதில் ஆர்வம் இருக்கு. கண்டிப்பா விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

* சினேகாவும் நீங்களும் 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு ?

'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.

http://www.thinakaran.lk/2020/02/21/சினிமா/48680/smart-வில்லன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.