Jump to content

'அறிவியலை எளிமையாகப் புரிய வைத்தவர் சுஜாதா' #SujathaMemories


Recommended Posts

எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

Image result for சுஜாதா

சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.

 

 

சந்தோஷ் நாராயணன்:

"சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் யாராலும் முடியவில்லை. சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் ஒரு சாதாரண தமிழ் வாசகனுக்கு அறிவியலை எளிமையாகப் புரிய வைக்கும் வல்லமை படைத்தவை. விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு படித்து வியந்து போனவர்களில் நானும் ஒருவன். பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய தொடர்கள் வியக்க வைக்கின்றன.

தற்பொழுது உள்ள இந்த டிஜிட்டல் உலகில் சுஜாதா இருந்திருந்தால், டெக்னாலஜி குறித்து மிகவும் எளிமையாக எழுதி இருப்பார் என்பது உறுதி. சுஜாதா ஓர் இலக்கியவாதியா? இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி பல புதுக்கவிஞர்களை தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இலக்கியச் சண்டைகளில் அதிகம் ஈடுபடாதவர். தமிழ் வாசகர்களுக்கு சுஜாதாவின் இழப்பு மிகப்பெரியது"

 

கவிஞர் சாம்ராஜ்:

தமிழ் உரைநடைகளில் புரட்சி செய்தவர் சுஜாதா. ஒரு சூழலை அல்லது குறிப்பிட்ட இடத்தை வருணனை செய்துக் கொண்டிருந்த காலத்தில் மிகவும் கூர்மையாகத் தெளிவாக ஓர் இடத்தைப் பற்றி எழுதியவர்இவர். ஒரு கதையில் மதுரையில் உள்ள சுவரைப் பற்றி அப்படியே அச்சு பிசகாமல் எழுதியிருப்பார். மதுரை வீதியில் இருக்கும் ஜவுளிக்கடைகள் சுவர்கள், அங்கிருக்கும் போலீஸ்காரர்கள், பேருந்துகள் என எல்லாவற்றையும் பற்றி கூர்மையாக, தெளிவாக எழுதியிருப்பார். சுஜாதா குறித்து வண்ணதாசன் இவ்வாறு கூறியிருப்பார்,

' பெரிய தோட்டக்கத்தியை எடுத்து மீசையை செதுக்கிக் கொண்டிருந்தபொழுது சின்னக் கத்தியை எடுத்து செல்லமாய் மீசையை செதுக்கியவர்'

வளவள என்று அதிகம் எழுதாமல் கச்சிதமாக சிறுகதைகளை எழுதுவதில் சுஜாதா வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் சிறுகதைகள் என இவற்றை சொல்வேன், நகரம் , பார்வை, ஒரேயொரு மாலை, மகாபலி, எல்டோராடா.

வண்ணதாசன், கலாப்ரியா, நா. முத்துக்குமார் இப்படி பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவரின் இழப்பு மிகப்பெரியதாக கருதப்படுகின்றது ஏனென்றால் இவர் ஒரு பரந்துபட்ட வாசிப்பாளர். இந்த சிறு கதை நன்றாக இருக்கிறது, இந்த தொகுப்பு நன்றாக இருக்கிறது என்று இவர் பரிந்துரைக்கும் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர். தமிழ் உரைநடைக்கு மிகப்பெரிய இழப்பு சுஜாதாவின் மரணம்."

 

https://www.vikatan.com/literature/news/sujatha-memorial-day-special-article

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முமன் முதலில் குமுதத்தில் பத்து வாரங்கள் வந்த இவரது “அனிதா இளம் மனைவி” முதல் எல்லா கதைகளையும் இலங்கையில் இருந்தவரை வாசித்து இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களே எங்களை நம்பாதீர்கள்; அன்றே சொன்ன சுஜாதா: கானா பிரபா

sujatha.jpg

18 ஆண்டுகளுக்கு முன் அப்போது வானொலி உலகத்தில் என் வயசு மூன்று. நான்கு தசாப்தங்கள் எழுத்துத் துறையில் இருக்கும் ஆதர்ஷ நாயகன் எனதருமை சுஜாதாவோடு பேட்டி எடுக்க ஆசைப்பட்டு அழைக்கிறேன். சின்னப் பையனிடம் என்ன பேட்டி என்று உதாசீனப்படுத்தி விடுவாரோ என்ற தயக்கம் வேறு. ஆனால் நடந்ததோ வேறு.

2002 ஆம் ஆண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, “ஆ” என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்”, எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.

ஈழத் தமிழ் இலக்கியங்களில் தான் பெரிதும் நேசிக்கும் படைப்பாளிகளாக செங்கை ஆழியான், தேவகாந்தன் Devakanthan Bala, கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் Cheran Rudhramoorthy, மைத்திரேயி குறித்து இந்தப் பேட்டியில் சிலாகிக்கிறார்.

கவிஞர் சேரன் தொகுத்த “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி குறித்தும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நாவலாசிரியர் தேவகாந்தனின் உதவி குறித்தும், கவிஞர் மைத்திரேயின் கவிதைகள் எவ்வாறு பயன்பட்டன என்று விபரிக்கிறார்.

ஈழத்தமிழ் எழுத்தாளர்களது படைப்புகளைப் படித்த அனுபவத்தில் அவர்களது எழுத்தில் ஒரு உண்மையும், யோக்கியமும் இருப்பதாக எனக்குப் படுகிறது என்றார் சுஜாதா.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது

“எங்களை நம்பாதீர்கள்”

” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்”

என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் 12 வது நினைவு தினமாகும்.

கானா பிரபா
27.02.2020

http://www.vanakkamlondon.com/sujatha-27-02-2020/

Link to comment
Share on other sites

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத் தமிழ் இலக்கியங்களில் தான் பெரிதும் நேசிக்கும் படைப்பாளிகளாக செங்கை ஆழியான், தேவகாந்தன் Devakanthan Bala, கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் Cheran Rudhramoorthy, மைத்திரேயி குறித்து இந்தப் பேட்டியில் சிலாகிக்கிறார்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஐயா;  தெரிந்த பெயராக உறவாக இருக்கே, நமக்கும் பெருமைதானே. 

3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது

“எங்களை நம்பாதீர்கள்”

” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்”

என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

“எங்களை நம்பாதீர்கள்” - என்று மாறும் இந்த அவல நிலைப்பாடு? யார் மாற்றுவார்கள் ??  எம்மால் என்ன செய்ய முடியும் இதை மாற்ற    ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

வ.ஐ.ச.ஜெயபாலன் ஐயா;  தெரிந்த பெயராக உறவாக இருக்கே, நமக்கும் பெருமைதானே. 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.