Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

கொரோனா வைரஸ் குறித்த புள்ளிவிவரங்களில் இதுவரை உலக நாடுகளில் மொத்தம் 1,34,769 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு 70,387 பேர் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

4,983 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, கொரோனா பாதித்தவர்களில் 52 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குணமடைந்ததாகவும், 3.6 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த தொற்றுநோய் பாதிப்பால் 59,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5,994 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சீனாவில் 80,814 பேர் பாதிக்கப்பட்டு அதில் 64,117 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

இத்தாலியில் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேரில் 12,839 பேர் குணமாகியுள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2500855

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்   

கடந்த ஒரு மாதமாக, கொரோனாத் தொற்றிலிருந்து தப்புவதற்கான ஏராளமான வழிமுறைகளை, ஒவ்வொருவரும் தமது அலைபேசிகளின் ஊடாகப் பெற்றிருப்போம்; பெற்றுவருகிறோம். அவற்றில் பெரும்பாலானவை, அறிவியல் ரீதியாகத் தவறானவை. ஆனால், அவற்றை உணராமல், அவை உண்மை என்று நம்பி, நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.   

சில தினங்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனம் இவற்றுக்கு விரிவான பயனுள்ள பதில்களை அளித்துள்ளது.   

உள்ளி பயன்படுத்துவது, இந்தத் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் என்ற செய்தி முதலாவது. ‘உள்ளி மருத்துவக் குணங்கள் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், உள்ளி சாப்பிடுவதால், கொரோனாத் தொற்று ஏற்படாது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை’ என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.   

இரண்டாவது, எமது தொண்டையை ஈரலிப்பாக வைத்திருந்தால் கொரோனா வைரஸ் தாக்காது. நீர் அருந்துவது நல்லது; ஆனால், அது கொரோனாத் தொற்றிலிருந்து காப்பாற்றாது; ஏனெனில், கொரோனா வைரஸுகள்  சுவாசத்தின் ஊடாக உட்புகுபவை.  

மூன்றாவது, வெப்பநிலை; அதிக வெப்பமுள்ள நாடுகளில் இந்தத் தொற்றுப் பரவாது. இதற்கும் அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை.  

 நான்காவது, தேசிக்காய் போன்ற விற்றமின் சீ உள்ளவற்றை உட்கொள்வது, பலனளிக்கும் என்பதாகும். விற்றமின் சீ, சில மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆனால், கொரோனாத் தொற்றிலிருந்தான பாதுகாப்புக்காக அல்ல.  

இந்தத் தகவல்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் சொல்லப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், இதை ஐ.நா சிறுவர் நிதியம் மறுத்துள்ளதோடு, இந்தத் தகவலுக்கான அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை என்று சொல்லியுள்ளது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கரன-வரஸ-அசசததககம-அறவயலககம-நடவ/91-246746

Link to comment
Share on other sites

Coronavirus: Europe now epicentre of the pandemic, says WHO Why is Europe the 'epicentre'?

More than 132,500 people have been diagnosed with Covid-19 in 123 countries around the world, according to the WHO.

The total number of deaths has reached about 5,000 - a figure Dr Tedros described as "a tragic milestone".

"Europe has now become the epicentre of the pandemic, with more reported cases and deaths than the rest of the world combined, apart from China," he said.

"More cases are now being reported every day than were reported in China at the height of its epidemic."

 

As well as the increases in Spain and Italy, France has now confirmed 2,876 cases and 79 deaths, up from a total of 61 deaths on Thursday.

Germany has seen 3,062 cases and five deaths. There have been 798 confirmed infections in the UK and 11 deaths.

Map of European cases

https://www.bbc.com/news/world-europe-51876784

Link to comment
Share on other sites

There are more than 142,000 cases worldwide

There are now more than 142,000 coronavirus cases globally and more than 5,300 related deaths, according to the latest figures from the World Health Organization.

Here's the latest breakdown:

  • Total cases: 142,320
  • Deaths: 5,388
  • Countries or territories with cases: 129

China remains the hardest-hit country, with close to 81,000 cases. Italy has more than 17,000 cases, followed by Iran, with more than 11,000 cases.

 

  • India declares a "a notified disaster"
  • Coronavirus cases in Spain have risen by 1,500 to more than 5,700, public health officials say. Spain is the worst affected country in Europe after Italy, which has more than 15,000 cases.
  • Italy's death toll has increased by 250, bringing the total to 1,266 on its fourth day of lockdown
  • In badly-affected Iran, the streets are being cleared to prepare all citizens for testing in the next 24 hours
  • In the UK, local elections have been postponed for a year, and Canada's parliament has been suspended temporarily
Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் - இதுவரை சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவு

கொரோனா வைரசினால் சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏஎவ்பி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் வைரஸ் தாக்கத்திற்குள்ளான சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் மூலம் நோய்பரவாது என்பது அர்த்தமில்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவர்கள் வைரசினால் பாதிக்கப்படுவது எங்களிற்கு தெரியும்,ஆனால் அவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை மரணிக்கவில்லை என ஜோன்கொப்கின்ஸ் புளும்பேர்க் பொது சுகாதார கல்லூரியின் தொற்று நோயியலாளர் ஜஸ்டின் லெஸ்லெர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவ்வாறு அறிகுறிகளற்ற அல்லது சிறிதளவு அறிகுறிகளை கொண்டுள்ள சிறுவர்கள் எவ்வளவு தூரம் நோயை பரப்புகின்றனர் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வுகானை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது 10 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களில் ஒரு வீதமானவர்களே நோய் தொற்றிற்கு ஆளாகியிருந்ததும் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

பத்து வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் நோய் தொற்று மிகவும் குறைந்தளவே காணப்பட்டமையும் இறப்புகள் இல்லாததும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

20 வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் பாதிப்பு குறைவாக உள்ளமைக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் என அமெரிக்காவின் சுகாதார பொகட்ரி சர்வதேச ஆய்வு மையத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/77815

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில், ஓரு மணித்தியாலத்திலேயே கோவிட்-19 குறித்துப் பல விடயங்கள், பல செய்திகள், அனைத்தையும் முழுமையாகக் கிரகிப்பது கடினம் என்பதை கடந்து, அதை புரிதலுக்கு உட்படுத்துவதே சவால் நிறைந்த பணி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

இறங்கு நிலையில், முதல் இடத்தில் சீனாவும், அதற்கு பின்னால் தென் கொரியாவும் உண்டு. அவர்கள் தங்கள் உச்ச நிலையை ஏய்தி கீழ் இறங்குவதாலேயே, அவற்றின் புதிய எண்ணிக்கைகள் நாளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஏனைய அனைத்து நாடுகளும் ஏறுநிலையிலேயே உள்ளன. ஏறுநிலையில் முன்னணியில் தற்போது இத்தாலி உள்ளது. அது இன்னமும் தன் உச்சத்தைத் தொடவில்லை. அதன் அடுத்த நிலையில், சுவிட்சலாந்து, நோர்வே, டென்மார்க், ஸ்பெயின் அதன் பின்னாலே ஏனைய நாடுகள் உள்ளன. அங்கு தான் நாடுகளுக்கு சவால் உருவாகிறது. அந்த உயர் நிலையை ஏய்தும் போது, அதிகரித்த எண்ணிக்கையிலானோரை வைத்திசாலை பராமரிப்பில் பேண வேண்டிய சூழல் ஏற்ப்படும். அதற்கான முன்கூட்டிய தயாரிப்பில் அவர்கள் தற்போது உள்ளனரா? என்பதே கேள்வி. இருந்தால், ஒரு சமூகமாக அதைக்கடந்து இறங்கு நிலையை அவர்கள் ஏய்துவார்கள்.

அதையே வரைபு (அ) ஊடாக நீங்கள் அவதானிக்கலாம். மோசமாக பாதிக்கப்படுபவர்களே வைத்திசாலைக்கு செல்லும் போது, அவர்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் வேண்டும். இரண்டாவது வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசம் வழங்குவதற்கான உபகரணங்கள் எவ்வளவு உண்டு என்பது. அவ்வெண்ணிக்கைக்கு ஏற்றவாறு நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பை திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதிலேயே, அந்த சமூகமாக கடந்து செல்லல் தங்கியிருக்கிறது.

 

 

சரியான திட்டமிட்ட முறையில் அணுமாகால், அது தன்னிச்சையாக வேகமாக அதிகரித்தால், அதனை தாங்கும் சக்தியை அந்நாட்டின் சுகாதாரத்துறை கொண்டிராக நிலையில், நிலைமை நாடு தழுவி மேலும் பாரிய சிக்கலை வளர்த்துவிடும். அதனை வரைபு (ஆ) கீழே காட்டுகிறது. 

-- முகநூல் 

இருக்க 30 இல் இருந்து 70 சதவீதமானோர் இந்நோய்த் தொற்றை சந்திப்பர் என நாட்டிற்கு நாடு வேறுபட்டுப் பேசப்டுகிறது. அது சாத்தியமே. ஆனால் அதில் 60 முதல் 80 சதவீதமானோர் தமக்கு நோய்த் தொற்று ஏற்ப்பட்டது என்பது தெரியாமலே கடந்து செல்லும் வாய்ப்பும் உண்டு.

Link to comment
Share on other sites

கையை அடிக்கடி தொற்று நீக்குவதுடன், அலைபேசியையும் தொற்று நீக்கிவிடுங்கள்

கோவிட்-19ஜ அண்டாமல் விரட்டுவதற்கு கைகளை அடிக்கடி கழுவுங்கள் என்பதே எங்கு திரும்பினாலும் நினைவூட்டப்படும் செய்தி. கோவிட்-19 காற்றுவழி மூலம் பரவுகின்ற ஒரு தொற்றல்ல. கோவிட்-19 தொற்றுள்ள ஒருவர் இருமுகின்ற போது அல்லது தும்முகின்ற போது வெளிப்படும் நீர்த்துணிக்கைகள், அருகில் உள்ள ஒரிவரின் கண், மூக்கு, வாய்ப்பகுதியை சென்றடைந்தால், அவர் வைரஸ் தொற்றிக்கு உள்ளாகலாம். கண், மூக்கு, வாய் மூலமே இது உடலினுள் புகும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறான தாக்கத்திற்கு உள்ளாமல் இருப்பதற்கே, ஒருவரில் இருந்து ஆறடி தூரத்தைப் பேணுமாறு வேண்டப்படுகிறது.

அதேவேளை ஒருவர் இருமிக்கொண்டிருந்தாலோ, அல்லது தும்மிக்கொண்டிருந்தாலோ, அவரை விட்டு நீண்ட தூரம் விரைந்து விலகிவிடுவதே பாதுகாப்பானது. இருக்க இருமலிலோ அல்லது தும்மலிலோ வெளிப்படும் நீர்துணிக்கைகள், அருகில் உள்ள பலதரப்பட்ட பரப்புகளில் படிவதற்கான வாய்ப்பும் அதிகம். அவ்வாறு படியும் வைரஸ் எவ்வளவு காலம் வாழும் என்பது விவாதத்திற்குரியது. ஆனாலும் ஒரு பக்றீரியா போன்று அதிகம் வாழும் வாய்ப்பை வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு படிந்திருக்கும் வைரசை கொண்டிருக்கும் நீர்த்துணிக்கைகளை, எமது கையால் தொட்டுவிட்டு பின்னர், அதனை எமது கண் அல்லது மூக்கு அல்லது வாய்ப்பகுதிக்கு கொண்டு செல்லும் போது, நாமே எமக்கு சூனியம் வைக்கும் நிலை தோன்றிவிடுகிறது. பலவேளைகளில் எம்மையறியாமலே எமது கை இதைச் செய்தும்விடுகிறது. அதனாலேயே கையை அடிக்கடி கழுவும் விடயம் வலியுறுத்தப்படுகிறது. வெளியில் நடமாடும் போது இது சாத்தியமில்லை என்பதால், கான்ட் சனிட்டைசர் எனப்படும், கையை தொற்று நீக்கிக் கொள்ளும் திரவம் அடங்கிய சிறிய போத்தல்களை, வாங்கி வைத்துக் கொள்வோமானால் அது இத்தகைய சூழலில் பேருதவியாக இருக்கும். இதற்குத் தான் கடைகளில் தற்போது பெரும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதன் ஒரு அங்கமாகவே கைலாக்கு எனப்படும் கைகளைக் குலுக்கிக் கொள்வதை, தவிர்க்குமாறும் வேண்டப்படுகிறது. பல வேளைகளில் இருமுபவரோ அல்லது தும்முபவரோ தமது கைகளால் பொத்தி, அதிலேயே தும்மியோ இருமியோ விடுகின்றனர். பின்னர் அவர்கள் கைகளில் தங்கிவிடும் வைரசுடன் கைகுலுக்கிக் கொள்ளும் போது, மற்றையவருக்கு அதை கடத்தியும் விடுகின்றனர். ஏன் இந்த வம்பு தவிர்த்து விடுவோமே.

அதேவேளை பிளாஸ்டிக்கில், கோவிட்-19 சற்று நீண்டு நிலைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் பல கடைகளில் நீராகாரப் பதார்த்தங்களை தரும் போது, தற்போது பிளாஸ்டிக் குவளைகளில் தருவது தவிர்க்கப்படுகிறது. அத்துடன் ரிம் கொட்டனில் உங்கள் பிளாட்டிக் குடுவையைக் கொடுத்து, அதில் நிரப்பி வாங்குவதை வேறு தடை செய்துள்ளனர். பிளாஸ்டிக் என்று வரும் போது தற்போது பாவனையில் உள்ள நாணயத்தாள்கள் அனைத்துமே பிளாஸ்டிக்காலானவை. அது தொடர்ந்தும் பல கைகள் மாறும் வாய்ப்புள்ளதால், அது ஒரு பெரும் நோய்க்காவியாக மாறிவிடும் ஆபத்துள்ளதாலேயே, சீனா கோவிட்-19தை கட்டுக்குக் கொண்டுவருவதில், அதிலும் அதீத கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக்கைக் கொண்டிருக்கும், அதேவேளை எமது அதிகரித்த பாவனையில் உள்ள ஒரு பொருள் தான், எம் கைத்தொலைபேசி எனப்படும் அலைபேசி. இவரை எமது கையால் கையாண்டு, முகத்திற்கு அதிகரித்த எண்ணிக்கையில் எடுத்துச் செல்கிறோம். பின்னர் பேசிவிட்டு எங்கெங்கோ அடிக்கடி வைத்தும் விடுகின்றோம். கோவிட்-19 பயணிப்பதற்கு அலைபேசி பெரும் வாய்ப்பாக மாறிவிடுகிறது. ஆகவே அவர் மீதும் அதீக கரிசனை செலுத்துங்கள். முடிந்தவரை அவரையும் அடிக்கடி தொற்று நீக்கி விடுங்களேன். கோவிட்-19ஜ அருகில் அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் முன்னெச்சரிக்கையே முதன்மை பெறுகிறது. அதனை தொடர்ந்தும் தவறாமல் கடைப்பிடிப்பதுவும் முதன்மையாகிறது. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தொலைபேசி

-- முகநூல்

Link to comment
Share on other sites

சீனாவை பின்தள்ளி உலகில் வியாபித்தது கோவிட்-19

கோவிட்-19 வைரஸ் தொற்று என்றால், சீனாவை மையப்படுத்திய பேச்சு அருகும் வகையில், நோய்த் தொற்று எண்ணிக்கையிலும், இறப்பு எண்ணிக்கையிலும், சீனாவின் எண்ணிக்கைகளைக் கடந்து, இன்று மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நகர்ந்துவிட்டது கொவிட்-19.

இதுவைரையிலான நோய்த் தொற்று எண்ணிக்கையிலான சீனாவின் எண்ணிக்கை, 80 ஆயிரத்து 849 ஆகும். ஆனால் சீனாவிற்கு வெளியில் ஏனைய அனைத்து நாடுகளிலுமான மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை, இன்று சீன எண்ணிக்கையை முதல் தடவையாகக் கடந்து, இதை நான் பதிவிடும் வேளையில், 88 ஆயிரத்து 366 ஆகியுள்ளது.

அதனால் உறுதிப்படுத்தப்பட்ட உலகளாவிய மொத்த எண்ணிக்கை, 1 லட்சத்து 69 ஆயிரத்து 215 ஆகியுள்ளது. சமீபகால நோய்த்தொற்றுக்களான, "சார்ஸ்", "சுவைன் புளு", "இபோலா", "மீர்ஸ்" ஆகியவற்றை விட, கோவிட்-19 இன்; தொற்றின் வேகம் மிக அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. சீரிய உடல்நிலையைக் கொண்ட இளைய வயதினர் பலர், தமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டது அல்லது ஏற்பட்டுள்ளது என்பதை, உணரும் வகையிலான அறிகுறிகளை வெளிப்படுத்தும் வாயப்பு இல்லை, என்பதால் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை, இதைவிடப் பல மடங்காக இருக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இருக்க கோவிட்-19 நோய்த் தொற்றினால், இறந்தவர்களின் சீனாவிலான இதுவரையிலான எண்ணிக்கை 3,199 ஆகும். ஆனால் மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, சீனாவைக் கடந்த ஏனைய உலகளாவிய நாடுகளில், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஆகியுள்ளது. இதனால் கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, 6,499 ஆகியுள்ளது.

 

நாள் ---- புதிய நோய்த்தொற்றாளர்கள் --- இறப்புக்கள்
மர்hச் 15 --- 12748 (10) ------ 668 (8)
மார்ச் 14 --- 11139 (20) ------ 404 (10)
மார்ச் 13 -- 10907 (11) ------- 448 (13)
மார்ச் 12 -- 8362 (20) --------- 353 (7)
மார்ச் 11 -- 7266 (15) --------- 332 (11)
மார்ச் 10 -- 4567 (24) --------- 271 (22)
மார்ச் 9 --- 4390 (19) --------- 198 (17)
மார்ச் 8 --- 3892 (40) --------- 228 (22)
மார்ச் 7 --- 4049 (44) --------- 105 (27)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
 
 

 

முகநூல் 

Link to comment
Share on other sites

நோய் அறிகுறி வெளிப்படாதவர்களே வைரசை பரப்புகின்றனர்- சர்வதேச நிபுணர்கள் தகவல்

வைரஸ் தொற்றிற்குள்ளாகி நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமலிருப்பவர்களே வைரசினை பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என்பது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் வெளியாகியுள்ளது என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்றிற்குள்ளான போதிலும்  நோய்க்கான அறிகுறி வெளிப்படாமலிருப்பவர்கள்   நோய் பரவுவதற்கு எவ்வளவு தூரம் காரணம் என்பது இன்னமும் தெரியாத போதிலும்; அறிகுறிகள் தென்படாத அல்லது சிறிதளவு அறிகுறிகள் உள்ளவர்களே நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என பல நிபுணர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுதலே வைரஸ் பரவுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது என அமெரிக்காவின் மினெசொட்டா பல்கலைகழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை பிரிவின் இயக்குநர் மைக்கல் ஒஸ்டர்ஹோம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சர்வதேச நோய்தொற்றினை நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுவதலால் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இதனை கட்டுப்படுத்துவது கடினமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதளவு நோய் தொற்றுள்ளவர்கள் மூலம் அல்லது நோய் தொற்று அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலம் கொரோனா பரவுவதால் சார்சினை விட இதனை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பல நிபுணர்கள் நோய்அறிகுறி வெளிப்படாதவர்களே காரணம் என்பதை ஏனைய பல நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்களும் சிறிய அறிகுறிகள் காணப்படுபவர்களுமே நோய் தொற்றிற்கு காரணம் என வில்லியம் ஸ்காவ்னெர் என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவர்களே சமூகங்களில் நோயை பரப்பபோகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் நோய் பரவுவது குறித்து தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/77975

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

வெப்பம் அதிகரிக்க கோவிட்-19 மறைந்துவிடுமா?

இன்று நாம் உலகளாவி எதிர்கொள்ளும் கோவிட்-19 வைரசின் சவாலை ஓரளவு வெளிப்படையாக அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆம் தற்போதைய நிலை உச்சநிலையை எய்த இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்டுவதற்கில்லை... இதில் இருந்து முழுமையாக மீள பல மாதங்களை எடுத்துக் கொள்ளப்போகிறோம்... அவ்வாறானால் கோடையில் அதிகரிக்கும் வெப்பநிலை நிவாரணியாக அமையாதா? என்பதே எங்கும் எழும் கேள்வி...

வழமையாக வைரஸ் தாக்கம் வெப்ப காலத்தில் குறைவாகவும், குளிர் காலத்தில் அதிகமாகவும் அமைவது வழக்கம்... ஆனால் அது தற்போதைய கொரோனா வைரஸ் கோவிட்-19க்கும் பொருந்துமா? என்பதே கேள்வி. சீனாவிற்கு அருகில் உள்ள வெப்பநிலை அதிகமான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியாவில் குறைந்த நோய்த் தொற்றை அதற்கு உதாரணமாக சிலர் காட்ட முனைந்தனர்... ஆனால் ஆரம்பத்தில், அவ்வாறான நாடுகளிலான போதியளவு சோதனையின்மையைக் காரணமாகக்காட்டி, தற்போது சோதனைகள் அதிகரிக்க அங்கு கண்டறியப்படும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, விரைவாக அதிகரிப்பதையும் காட்டி, வெப்ப சூழல் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலாக்கலில் பாதிப்பை ஏற்பபடுத்தவில்லை என அடித்துக் கூறுகின்றனர்.

அவ்வாறாயின் எம்மை தற்காத்துக் கொள்ள நாம் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையாக இருப்பது கோடையிலும் அவசியமென்றாகிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
 
 
-- முகநூல் 
Link to comment
Share on other sites

Power of Social Distancing

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

 

Know the difference: Self-Monitoring, Self-Isolation and Isolation [COVID19]

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

Coronavirus: Australian scientists map how immune system fights virus

Scientists in Australia say they have identified how the body's immune system fights the Covid-19 virus.

figure1

https://www.nature.com/articles/s41591-020-0819-2

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்

இலங்கையை மட்டுமன்றி, முழு உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸ்தொற்றாக கொரோனா காணப்படுகின்றது.
 

ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் கொரோனா குறித்த தேடல்களும், அனுபவங்களும், அறிகுறிகளும் பத்திரிகைகலிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றது.

அந்தவையில், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத செம்புகளின் வெளிப்பகுதிகளில் கொரோனா வைரஸ் 3 தினங்கள் இருக்கமுடியும் என்று புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

sfdfs.jpg


மேற்படி தகவலை New England Journal of Medicine என்ற சஞ்சிகை வெளியிட்டுள்ளது. வெளிப்புறத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 2002 ஆம் ஆண்டு பரவிய SARS  - CoV - 1 அல்லது SARS வைரசுடன் கொரோனா வைரசை ஒப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் செம்பு பொருட்களில் 4 மணித்தியாலங்களும், காட்போட் பொருட்களில் 24 மணித்தியாலங்களும், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத இரும்பு பொருட்களின் வெளிப்பகுதியில் 72 மணித்தியாலங்களும் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் காற்றில் 3 மணித்தியால காலம் தங்கியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது மிருகங்கள் மத்தியில் பெருமளவில் காணப்படும் வைரஸ் குழுமத்தைச் சேர்ந்ததாகும். விஞ்ஞானிகளினால் இது ஸுனோடிக் (Zoonotic) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இது மிருகங்கள் ஊடாக மனிதர்களுக்கு தொற்றக்கூடுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுகள் மூலம் கொரோனா வைரஸ் சில மணித்தியாலங்கள் தொடக்கம் ஒரு வார காலத்திற்கு மேற்பட்ட காலம் சுற்றாடல் பகுதிகளில் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78157

Link to comment
Share on other sites

அசுர வேகம் எடுக்கும் எண்ணிக்கைள், கட்டை இழக்கும் இத்தாலி, ஈரான், ஸ்பெயின்

உத்தியோகபூர்வ எண்ணிக்கையில், நொய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தையும் இறப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் இன்று கடக்கின்றன. இதைப் பதிவிடும் வேளையில் அவ்வெண்ணிக்கைகள் முறையே, 1,98,543 ஆகவும் 7,988 ஆகவும் உள்ளன. நான் பலமுறை குறிப்பிட்டது போல் உண்மையான எண்ணிக்கைகள் இவ்வுத்தியோக பூர்வ எண்ணிக்கைகளை விட பல மடங்கே.

நேற்று மார்ச் 17ஆம் நாள், அன்றைய புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து 740 ஆகவும், இறப்புகளின் எண்ணிக்கை, 817 ஆகவும் பதிவாகின. இவ்வெண்ணிக்கைகளே ஒரு நாளில் எட்டப்பட்ட் அதிவுயர் எண்ணிக்கைகள் ஆகும்.

சமீப நாட்களாக ஒவ்வொரு நாளும் இவ்வெண்ணிக்கைகள் புதிய இலக்கை அடைவதுவும், எண்ணிக்கை அதிகரிப்பை அனைத்து வட்டகை நாடுகளும் வெளிப்படுத்துவதுவும், அந்நாடுகளில் அதிகரித்த எண்ணிக்கையிலானோர் சோதனைக்கு உட்ப்படுத்தப்படுவதுவே காரணமாகும். கோவிட்-19 அனைத்து நாடுளிலும் எல்லைகளைக் கடந்து, பரந்து, வியாபித்து வருகிறது. ஆனால் சோதனைகள் முறையாக முன்னெடுக்கப்படாததால், வியாபிப்பின் அளவு வெளிப்படாமல் இருக்கிறது. இது ஒரு பேராபத்தை சுட்டி நிற்கிறது.

ஏற்கனவே மூன்று நாடுகள், கோவிட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் தோற்றுவிட்டன என்றே சொல்லாம். கோவிட்டின் இறப்பு சதவீதம் 3.4 ஆகவே இருக்கிறது என்பதே உலக சுகாதார மையத்தின் கணிப்பாகும். ஆனால் இத்தாலியில் அது 8 சதவீதமாகவும், ஈரானில் 7 சதவீதமாகவும், மற்றும் ஸ்பெயினில் 5 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளை சமீப நாட்களிலான இறப்புவீதம், இந்நாடுகளில் 10 சதவீதத்தை தொட்டும் கடந்தும் இருப்பது, அவை கட்டை இழந்துவருவதை தெளிவாக காட்டுகிறது.

அதாவது தமது சுகாதார சேவையால் பேணப்படமுடியாத அளவை, கடந்துவிட்ட நிலையில், இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்தேயாகும். காரணம் மருத்துவ வசதியைப் பெறும் நிலையை, புதிய ஆபத்து நிலையை ஏய்துபவர்கள் பெறமுடியாத நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளனர் என்பதேயாகும். இந்நிலையை எய்திவிடக்கூடாது என்றே பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துப் போராடுகின்றன.

ஆனால் அதிலும் பல இப்போரை கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுவருகின்றன என்பதே நிதர்சனமான உண்மையாகும். கோவிட்-19 மனிதர்களின் கால்களுக்குக் கீழே இந்த உலகத்தையே அனைத்து அம்சங்களிலும் மாற்றியமைத்து வருகின்றது என்பது தான் யதார்த்தமான உண்மையாகும். மனித உலகம் கடந்த நூற்றாண்டில் கண்டிராத வரலாற்றுச் சவால் இதுவாகும். அதன் ஆழத்தையும், அகலத்தையும், புரிந்து கொள்ளும் பக்குவமோ, அல்லது தாங்கிக் கொள்ளும் மனோநிலையோ, இருப்பது அரிதாகவே இருக்கும்...

- முகநூல் பதிவு 

Link to comment
Share on other sites

COVID-19 will spread like a forest fire. We need to control the burn as best we can

Ashleigh Tuite and David Fisman are epidemiologists and professors at the Dalla Lana School of Public Health at the University of Toronto. Dr. Fisman is also a practising physician at the University Health Network in Toronto

There is no single measure that will control COVID-19. We can change the course of this pandemic, but it will require all of us to make dramatic, disruptive and potentially prolonged changes to our lives to reduce transmission and protect the most vulnerable in our communities. We have a choice. We act early, pro-actively, or we act late, reactively.

https://www.theglobeandmail.com/opinion/article-covid-19-will-spread-like-a-forest-fire-we-need-to-control-the-burn/

 

கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்: மலேசிய சுகாதார அமைச்சு எச்சரிக்கை

"சுனாமி போன்ற மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு"

மலேசியர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51949212

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.