Jump to content

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை பதிவு செய்ய..


Recommended Posts

நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது.

j5Rcu5VCdz8Gqex1bz-Ubqd1UdzSMPfjDB5A72aIx3P2u1GZU8byUw30Ol6WP5Y

ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு.
 
எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால் இலங்கையில் சொத்துக்களோ வங்கி நடவடிக்கைகளோ மேற்க்கொள்ள முடியாது.ஏனனில் அவர் இலங்கை பிரைஜை அல்ல.
 
அரச நிறுவனங்களில் அல்லது திணைக்களங்களில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும் உள்ளவர்கள் தங்களின் கடமைகளை சுற்றுநிரூபங்களுக்கு உட்பட்டு  மாத்திரம் செய்பவர்கள்.ஆக கிராம உத்தியோகத்தரின் வேலை உங்களின் காணி உறுதியை சரிபார்த்து உறுதிப்படுத்துவது மாத்திரம் அதுவே காணி பதியும் இடத்தில அந்த உறுதிப்பாட்டை வைத்து பதிந்து தருவது.எவரும் இதன் பின்னால் வரப்போகும் சிக்கல்களை பற்றி கதைக்கவோ தெளிவுபடுத்தவோ மாட்டார்கள் அது அவர்களின் சுற்றுநிருப கடமையும் அல்ல.
 
ஆக இலங்கை பிரஜை இல்லாத உங்களுக்கு பரம்பரை காணி இருந்தாலும் அதனை எந்த விதத்தில் உங்களால் உங்களுடையது என உரிமை கோர முடியும் இலங்கைப்பிரையையே இல்லாத நீங்கள் எப்படி சொத்து வைத்திருக்க முடியும்.இப்படி எப்பயாவது சிந்தித்துள்ளீர்களா? ஓடிவந்து பதிந்தால் அந்த தகவல் திரட்டை வைத்து பலதுறைக்கு உங்கள் காணிகளை சுவீகரிக்காவிட்டாலும் அரசுடமையாக்குவதற்க்கு நீங்களே தகவலை குடுக்கின்றீர்கள் அல்லவா.
 
இதற்க்கு செய்யக்கூடியது இரட்டை பிராயாவுரிமை எடுத்து உங்களின் சொத்துக்கள் வாக்குரிமை என்பவற்றை பாதுகாக்க முடியும்.இல்ல இலங்கையில் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரின் பெயரில் பெயர் மாற்றம் செய்து கொடுப்பது.
 
இது இரண்டில் நீங்கள் எதையும் செய்யாது விட்டு உணர்ச்சி அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் அல்லது  விளக்கம் கெட்டதனமாக விதண்டாவாதமாக எங்கட காணி தானே ஊரில சண்டை நடக்காட்டி  நாங்கள் ஏன் போறம் எங்கட காணி பரம்பரை காணி தானே எண்டு கதைச்சுக்கொண்டு நிப்பியல் எண்டால் நில்லுங்கோ உங்கட காணிய ஏதாவது ஒரு அரச தேவைக்கானதாக மாற்றிவிடுவார்கள் அது கட்டாயம் பாதுகாப்புத்தரப்புக்காக தான் இருக்க வேணும் என்றில்லை அதாவது மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் ஒரு திணைக்களத்தின் பிரதேச காரியாலயம் கூட அமைக்க முடியும் அவ்வளவு ஏன் பிரதேச இன விகிதாசாரத்ததை குலைக்க கூடியவாறு 2 சோனக அல்லது சிங்கள குடும்பத்தை கூட குடியேற்ற முடியும்.
 
அதுக்கு பிறகு ஆர்ப்பாட்டம்  போராட்டம் என கட்சிகள் தங்கட வாக்கிற்க்கான வேலைகளை தொடங்கும் சில போலித்தேசியவாதிகள் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் செய்வார்கள் வீடியோ எடுக்கிறவஙாகள் உங்களிட்ட வந்து உணர்ச்சிகரமான பதிவுகளை எடுத்து தங்கட வருவாயை பார்ப்பார்கள். சில சட்டம் தெரிஞ்சவங்கள் தங்கட வருமானத்த பாக்க வழக்கு போடுவம் எண்டுவாங்கள் எல்லாம் நடக்கும் ஆனால் காணி திரும்ப வருமா? வராது.கொஞ்ச நாளைக்கு பிறகு இதுவும் பேரினவாதத்தின் அடக்குமுறை என ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணீட்டு முகநூல்காரங்களும் போய்டுவம் நீங்கள் அடுத்த தரம் ஊருக்கு வரும் போது பேரப் பிள்ளைகளுக்கு இது முந்தி தாத்தாடது பிறகு கிப்ட்டா குடுத்தாச்சு எண்டு விழுந்தவன் மீசைல மண்ணில்லை என போய்டுவியல் ஆனால் இதனால வரப்போற அடுத்த கட்ட பிரச்சினைகள் ஊரில இருக்கிறவனுக்கு தான்.
 
ஆக தயவு செய்து உங்கள் உடமைகளை சொத்துக்களை வங்கிகளில் உள்ள வைப்புக்களை எடுக்க ஓடிப்போய் முட்டி முக்கி நிற்க்காமல் படிப்படியாக உங்களின் ஆவணங்களை சரி செய்து கைவசம் வைத்துக்கொண்டு செல்லுங்கள்.ஒன்றுமில்லாமல் போய் அரசுடமையாக்காதீர்கள் தமிழர் சொத்துக்களை.
 
உங்களிடம் அடையாள அட்டை இருந்தால் உங்கள் வாக்காளர் பதிவை ஒரு தரம் சரி பாருங்கள் அதனை உறுதிப்படுத்துங்கள்.அது இருந்தாலே பாதி சிக்கலுக்கு நிவாரணம் சரி
எதுவுமே இல்லை என்றால் முதலில் அவற்றை எடுக்க தகுந்த நடவடிக்கையை செய்யுங்கள்.
 
சிலர் சொல்வார்கள் ஏன் நாங்கள் எதுவுமே இல்லாமல் செய்துள்ளோமே என்று.ஆம் செய்துள்ளீர்கள் ஆப்பு கண்ணுக்கு தெரியாது ஏன் என்றால் நீங்களாகவே ஏறி அதுக்கு மேல இருக்கிறியல் என்றதால அதன் விபரம் வரும் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெற்று வருபவரால் காட்டப்படும். 
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.