Jump to content

இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!


Recommended Posts

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார்.

இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத் அபே குணவர்தன கைச்சாத்திட்டார்.

இஸ்ரேலில் வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தற்காலிக தொழில்துறையில் ஈடுபடுத்தல், இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்ரேல் தேசிய மனித வள சந்தை நிலைமை மற்றும் வெளிநாட்டு ஊழியர் தொழில்வாய்ப்புக்கான பகிரங்க பிரிவு தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கையைப் போன்று தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வருடாந்த கோட்டா மற்றும் ஒவ்வொரு தொழில் வாய்ப்புக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76687

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான... 

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

உலகம் இலங்கையையும் பார்க்கின்றது, ஆனால் ? "பராமரிப்பு சேவை தொழில் " செய்ப்பவர்களை இறக்குவதற்கு !!

இஸ்ரேல் உருவான ஆண்டு - 1948 
இலங்கை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1948 

நிலப்பரப்பு இஸ்ரேல்  :: 20,770–22,072 km2
நிலப்பரப்பு இலங்கை :: 65,610 km2

சனத்தொகை  இஸ்ரேல்  :: 9 மில்லியன்கள் 
சனத்தொகை  இலங்கை :: 22 மில்லியன்கள் 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

உலகம் இலங்கையையும் பார்க்கின்றது, ஆனால் ? "பராமரிப்பு சேவை தொழில் " செய்ப்பவர்களை இறக்குவதற்கு !!

இஸ்ரேல் உருவான ஆண்டு - 1948 
இலங்கை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1948 

நிலப்பரப்பு இஸ்ரேல்  :: 20,770–22,072 km2
நிலப்பரப்பு இலங்கை :: 65,610 km2

சனத்தொகை  இஸ்ரேல்  :: 9 மில்லியன்கள் 
சனத்தொகை  இலங்கை :: 22 மில்லியன்கள் 

 

இந்த எண்ணிக்கைகளுக்கும் செய்திக்கும் உள்ள சம்பத்தத்தையும் எழுதி இருக்கலாமே?

9 மில்லியன் சனத்தொகை கொண்ட இஸ்ரேலில் வேலைகளுக்கு மேலதிக ஆட்கள் தேவை.

22 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் பெருமளவு ஆட்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆகவே இந்த செய்தி சாத்தியமானது. மற்ற எண்ணிக்கைகளுக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

உலகம் இலங்கையையும் பார்க்கின்றது, ஆனால் ? "பராமரிப்பு சேவை தொழில் " செய்ப்பவர்களை இறக்குவதற்கு !!

இஸ்ரேல் உருவான ஆண்டு - 1948 
இலங்கை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1948 

நிலப்பரப்பு இஸ்ரேல்  :: 20,770–22,072 km2
நிலப்பரப்பு இலங்கை :: 65,610 km2

சனத்தொகை  இஸ்ரேல்  :: 9 மில்லியன்கள் 
சனத்தொகை  இலங்கை :: 22 மில்லியன்கள் 

 

அதுக்கெல்லாம் மண்டையில சரக்கு இருக்க வேண்டும்। 1948 இல் உருவாகிய நாடு மூளையை பாவித்து இன்று உலகின்  மிகச்  சிறந்த , பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட, அதி கூடிய தனி   மனித வருமானம்  கொண்ட நாடாக மாறிவிட்ட்து।

  நமது நாடடை உருவாக்கியே நம்மிடம் வெள்ளைக்காரன் கொடுத்து விட்டு போனான்। இனவாதம் , மதவாதம் , பெரும்பான்மை , சிறுபான்மை எண்டு  எல்லாம்  பேசி சிங்கள தலைமைகள் நாடடை குட்டிசுவராக்கிவிட்டுதுகள்।

 இருந்தாலும் இஸ்ரவேலுக்கு கூலி வேலைக்கு போனாலும் நல்ல சம்பளமும் , வசதிகளும் கிடைக்கும்। 

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அதுக்கெல்லாம் மண்டையில சரக்கு இருக்க வேண்டும்। 1948 இல் உருவாகிய நாடு மூளையை பாவித்து இன்று உலகின்  மிகச்  சிறந்த , பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட, அதி கூடிய தனி   மனித வருமானம்  கொண்ட நாடாக மாறிவிட்ட்து।

  நமது நாடடை உருவாக்கியே நம்மிடம் வெள்ளைக்காரன் கொடுத்து விட்டு போனான்। இனவாதம் , மதவாதம் , பெரும்பான்மை , சிறுபான்மை எண்டு  எல்லாம்  பேசி சிங்கள தலைமைகள் நாடடை குட்டிசுவராக்கிவிட்டுதுகள்

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

பிரபாகரன் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மை சிங்களவர்களால் முப்பது வருடமாக இபப்டி அடக்கி வைக்க முடியாமல் போனதால் இந்த தமிழர்கள் பெரும் அழிவையும் செய்து நாட்டையும் முன்னேற விடவில்லை. இப்ப தானே கோத்தபாய ஜனாதிபதி ஆகி இருக்கிறார். அடுத்த ஐம்பது வருடத்தில் பலஸ்தீனரிலும் கீழாக சிறுபான்மை தமிழரை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு சிங்களவர் உயர்ந்து காட்டுவார்கள். அதன் பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

இந்த எண்ணிக்கைகளுக்கும் செய்திக்கும் உள்ள சம்பத்தத்தையும் எழுதி இருக்கலாமே?

9 மில்லியன் சனத்தொகை கொண்ட இஸ்ரேலில் வேலைகளுக்கு மேலதிக ஆட்கள் தேவை.

22 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் பெருமளவு ஆட்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆகவே இந்த செய்தி சாத்தியமானது. மற்ற எண்ணிக்கைகளுக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த நாட்டின் வளர்ச்சி, அதாவது மூளையை வைத்து, அபரீதமானது 

அதே வயதை உடைய இலங்கை, அன்று  இரு லீ குவான் யூவால் பாராட்டப்பட்ட  நாடு இன்றி சிங்கப்பூருக்கும் அதே பராமரிப்பு வேலையாக்கு ஆட்களை அனுப்பும் நிலை. இப்படியே அடுக்கிய வண்ணம் செல்லலாம். 

அதிகம் மக்கள் தொகையை கொண்ட தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் கூட பராமபரிப்பு வேலை அனுப்புகின்றோம்.   

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

பிரபாகரன் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மை சிங்களவர்களால் முப்பது வருடமாக இபப்டி அடக்கி வைக்க முடியாமல் போனதால் இந்த தமிழர்கள் பெரும் அழிவையும் செய்து நாட்டையும் முன்னேற விடவில்லை. இப்ப தானே கோத்தபாய ஜனாதிபதி ஆகி இருக்கிறார். அடுத்த ஐம்பது வருடத்தில் பலஸ்தீனரிலும் கீழாக சிறுபான்மை தமிழரை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு சிங்களவர் உயர்ந்து காட்டுவார்கள். அதன் பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

1983 ஆண்டு வரை என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட ஆபிரிக்க சட்ட விரோத குடியேற்றவாசிகளை பலவந்தமாக வ்ளியேற்றும் இஸ்ரவேல், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து இலங்கையைக் குறிவைக்கக் காரணம் என்ன ? 

சோழியன் குடுமி சும்மா ஆடாதே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

1983 ஆண்டு வரை என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும். 

பாலும் தேனும் ஆறாக ஓடியது..... மோட்டுத் தமிழர்களுக்கு அதனை அள்ளிப் பருகத் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

இசுரேலில் பெரும்பான்மை யூதர்கள் சிறுபான்மை பாலஸ்தீன அரபிகளை அடித்து அடக்கி ஆரம்பம் முதலே தலை எடுக்க விடாமல் வைத்து இருப்பதால் இசுரேலால் முன்னேற முடிந்தது.

அங்கை இஸ்ரேல் முழுக்க முழுக்க தனிய நிண்டு வேர்த்து விறுவிறுக்க வேலை செய்து முன்னேறேல்லை. பின்னுக்கு உந்து சக்தியாய் அமெரிக்கா,பிரித்தானியா போல  பணக்கார நாடுகள் மிண்டு குடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதோடை நாசிகளாலை பாதிப்பப்பட்ட இனமெண்ட பரிதாப அலை இப்பவும் வேலை செய்யுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

ஒரு பல்லின சமூக நாடாக இஸ்ரேலின் வளர்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.    

பல்லின சமுகம் என்று சொல்லியிருக்கின்றீர்கள் .......ஏற்றுகொள்ளமுடியவில்லை.....யூதர்கள் தானே அட்டகாசம் அங்கு....

Link to comment
Share on other sites

6 minutes ago, putthan said:

பல்லின சமுகம் என்று சொல்லியிருக்கின்றீர்கள் .......ஏற்றுகொள்ளமுடியவில்லை.....யூதர்கள் தானே அட்டகாசம் அங்கு....

விக்கிப்பீடியாவில் பார்த்துத்தான் எழுதினேன் :

https://en.wikipedia.org/wiki/Israel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

வட ஆபிரிக்க சட்ட விரோத குடியேற்றவாசிகளை பலவந்தமாக வ்ளியேற்றும் இஸ்ரவேல், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து இலங்கையைக் குறிவைக்கக் காரணம் என்ன ? 

சோழியன் குடுமி சும்மா ஆடாதே ?

முஸ்லீம்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து பணம் சம்பாதித்து தாயகத்தில் பெரிய பள்ளிவாசல்களை கட்டுகிறார்கள்.....அதே போன்று சிங்கள பெளத்தர்களும் முன்னேற வேண்டும் என்ற தினேஸ் குணவர்த்தாவின்  புரட்சிகர சிந்தனையாக இருக்க கூடும்..

2 minutes ago, ampanai said:

விக்கிப்பீடியாவில் பார்த்துத்தான் எழுதினேன் :

https://en.wikipedia.org/wiki/Israel

பல்லினசமுகங்களையும் ஒன்றிணைத்து வன்முறையற்ற நாடாக இருந்தால் ,அதை பல்லின சமுக நாடு என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

அங்கை இஸ்ரேல் முழுக்க முழுக்க தனிய நிண்டு வேர்த்து விறுவிறுக்க வேலை செய்து முன்னேறேல்லை. பின்னுக்கு உந்து சக்தியாய் அமெரிக்கா,பிரித்தானியா போல  பணக்கார நாடுகள் மிண்டு குடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதோடை நாசிகளாலை பாதிப்பப்பட்ட இனமெண்ட பரிதாப அலை இப்பவும் வேலை செய்யுது.

உலகில் பரந்து பலமாக அத்துடன் ஓரளவிற்கு ஒற்றுமையாக உள்ளார்கள். மேலாக, ஒருவரை ஒருவர், தமக்குள் ஊக்குவிக்கும் பண்பும் உள்ளது. முக்கியமாக, இவர்களுக்கு பெரிதாக உழைக்கவும், உழைப்பதில் ஒரு பகுதியை நாடு/இனம்/மொழி தேவைக்கு ஒதுக்கவும், தம் தம் நாடுகளில் அரசியல் முன்னெடுப்புக்களை பலமாக முன்னெடுக்கவும் தெரியும்.

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

7 minutes ago, putthan said:

பல்லினசமுகங்களையும் ஒன்றிணைத்து வன்முறையற்ற நாடாக இருந்தால் ,அதை பல்லின சமுக நாடு என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன்

அப்படி பார்த்தால் உலகில் ஒரு நாடும் இருக்க முடியாது ( எது வன்முறை என்பதில் வேறுபடமால் பார்த்தல்) 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

உலகில் பரந்து பலமாக அத்துடன் ஓரளவிற்கு ஒற்றுமையாக உள்ளார்கள். மேலாக, ஒருவரை ஒருவர், தமக்குள் ஊக்குவிக்கும் பண்பும் உள்ளது. முக்கியமாக, இவர்களுக்கு பெரிதாக உழைக்கவும், உழைப்பதில் ஒரு பகுதியை நாடு/இனம்/மொழி தேவைக்கு ஒதுக்கவும், தம் தம் நாடுகளில் அரசியல் முன்னெடுப்புக்களை பலமாக முன்னெடுக்கவும் தெரியும்.

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

அப்படி பார்த்தால் உலகில் ஒரு நாடும் இருக்க முடியாது ( எது வன்முறை என்பதில் வேறுபடமால் பார்த்தல்) 🙂 

இன ஒடுக்குமுறை ,இன வன்முறை, வேறு இனத்தை வன்மறையால் (முக்கியமாக சிறுபான்மையினரை)ஒடுக்குதல்

15 minutes ago, ampanai said:

 

இறுதியாக, இசுரேல் மத்திய கிழக்கில் ஒரே ஒரு சனநாயக நாடு என்ற பெயரும் பலமும் கொண்டது.

 

ஜனநாயக நாடு கேள்விக்குறி.....அது சரி உலகில் ஜனநாயகமே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது நாங்கள் இஸ்ரேலை ஜனநாயக என்று சொல்வதில் தப்பில்லை....

Link to comment
Share on other sites

இலங்கையர்கள், மத்திய கிழக்கில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அதிகமாக உழைத்து இலங்கை பொருளாதாரத்திற்கு பலம் சேர்த்து வருகின்றனர். 

இதை அரசும் ஊக்குவிற்கின்றது. அதற்கென ஒரு அலுவலகம் அமைச்சு. 

Remittances in Sri Lanka decreased to 515.30 USD Million in November from 607 USD Million in October of 2019. Sri Lanka Remittances - data, historical chart, and calendar of releases - was last updated on February of 2020 from its official source.

Sri Lanka Remittances

 

https://tradingeconomics.com/sri-lanka/remittances

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.