Jump to content

கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

china-2-2.jpg

கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கொள்ளை-நோயா/

Link to comment
Share on other sites

கொள்ளைநோய் (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட மனித சனத்தொகையில், குறிப்பிட்ட ஒரு நோயானது புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்.

கொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.]உடற் பருமன்[இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.

https://ta.wikipedia.org/wiki/கொள்ளைநோய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் சென்று கருத்து எழுதலாம். அத்துறை சார்ந்தவர்தான் எழுதுவார் என்றில்லை.

Link to comment
Share on other sites

18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் சென்று கருத்து எழுதலாம். அத்துறை சார்ந்தவர்தான் எழுதுவார் என்றில்லை.

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

பல தகவல்கள் தவறாகவும் பதியப்பட்டிருக்கின்றன. அதைச் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

உண்மை. ஆனால், தொழில்சார் வல்லுனர்கள் இல்லை தெரிந்தவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என யார் விரும்பினாலும் திருத்தலாம்.  

 

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல தகவல்கள் தவறாகவும் பதியப்பட்டிருக்கின்றன. அதைச் சொன்னேன்.

அப்படி... உங்களுக்கு,  தெரிந்து இருந்தால்...
நீங்களும், திருத்தி எழுதியிருக்கலாம் தானே...
நீங்கள்....  ஏன், அதனை   செய்யவில்லை?

அதை... விட்டுட்டு, குறை காண்பது... சரியல்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா,தென் கொரியா, ஈரான் போன்ற அமெரிக்க விரோத நாடுகளில் கொரோனா கொடி கட்டு பறக்குது...பின்னால் யார் இருக்கிறாக்கள் என்று தெரியுது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

சீனா,தென் கொரியா, ஈரான் போன்ற அமெரிக்க விரோத நாடுகளில் கொரோனா கொடி கட்டு பறக்குது...பின்னால் யார் இருக்கிறாக்கள் என்று தெரியுது 

 

தென் கொரியாவா அல்லது வட கொரியாவா.....தென்கொரியா அமெரிக்க ஆதரவு நாடு என்று நினைக்கிறேன்.....!

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

தென் கொரியாவா அல்லது வட கொரியாவா.....தென்கொரியா அமெரிக்க ஆதரவு நாடு என்று நினைக்கிறேன்.....!

இருவரையும் பிரித்து ஆளுவதில் தனி சுகம். 

ஜெர்மனியிலும் இதைத்தான்  செய்தார்கள். 

விட்டால் இரண்டு கொரியாவும் சேர்ந்து விடலாம். விடமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்டைக்கு மட்டும் 12க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளாம்...எங்க போய் முடிய போகுதோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Twelve-more-cases-confirmed-in-England.jpg

இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் மூன்று நோயாளிகள் இங்கிலாந்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களாக அறியப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார்.

இதனிடையே, எசெக்ஸைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார் என்பது கண்டறியப்படவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்துள்ள ஏனைய எட்டுப் பேரில் ஆறு பேர் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் எனவும், இருவர் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் லண்டன், வெஸ்ற் யோர்க்ஷயர் (West Yorkshire), கிரேற்றர் மன்செஸ்ரர் Greater Manchester, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் Hertfordshire மற்றும் க்ளோசெஸ்ரர்ஷைர்  (Gloucestershire) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பேராசிரியர் விற்றி கூறியுள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சுமார் 86,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இங்கிலாந்தில்-மேலும்-12-பே/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.