Jump to content

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இம்முறை இந்த திருவிழாவில்சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து தண்ணீர் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா(கொவிட் 19) வைரஸ் தொடர்பாகவும் இதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. பக்தர்கள் புறப்படும் இடத்திலும் திரும்பி வரும் பொழுதும் கொரோனா வைரஸ் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
கச்சதீவு புனித தேவாலய ஆராதனைகள் தொடர்பில் வடக்கு செயலகம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கடற்படை கொண்டுள்ள கப்பல் மற்றும் படகுகளை இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/கச்சத்தீவு-புனித-அந்தோனி/

Link to comment
Share on other sites

கோரோனோ வைரசு பரவாமல் தடுக்கவும் பாதுகாப்பு முறைகளை முன்னெடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.