Jump to content

சாய்ந்தமருதும் பேரினவாதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சாய்ந்தமருதும் பேரினவாதமும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 27

இம்மாதம் 14ஆம் திகதியன்று,  சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான  வர்த்தமானி அறிவித்தலை  வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. 

அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார்.

சாய்ந்தமருது வர்த்தமானியை இரத்துச் செய்வதற்காக அவர் தெரிவித்த காரணத்தில், இரண்டு கருத்துகள் பொதிந்துள்ளன. முதலாவதாக, அரசாங்கம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்காமல் இருக்கப்போவதில்லை என்பதாகும். இரண்டாவது, வழங்கப்படவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி சபைகளோடு அதுவும் எதிர்க்காலத்தில் வழங்கப்படும் என்பதாகும். 

சாய்ந்தமருதுக்கான சபை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றால், ஏற்கெனவே வழங்கப்பட்டதை ஏன் இரத்துச் செய்யவேண்டும்? வழங்கப்பட்டதை அவ்வாறே விட்டுவிட்டு, ஏனைய சபைகளைப் பின்னர் வழங்கலாமே! “இந்தச் சபையை வழங்கியமைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளாலேயே, இவ்வாறு இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்ப, இல்லை என்றார். அவ்வாறாயின், வழங்கப்பட்டதை விட்டு விட்டு ஏனையவற்றைப் பின்னர் வழங்கலாம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை.

சாய்ந்தமருது சபையானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, தாமாக முன்வந்து வழங்கிய சபையல்ல. முன்னைய அரசாங்கமே அதனை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும்  அதைப் பூர்த்தி செய்யவே, தற்போதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் என்று கூறுவதைப் போல், அச்சபையை நிறுவுவதற்காக முன்னைய அரசாங்கத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அலுவல்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தை, அமைச்சர் குணவர்தன, ஊடகவியலாளர்களிடம் காட்டினார்.

தமது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படும் போதே, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், “இது நாம் ஆரம்பித்து அல்ல; முன்னைய அரசாங்கம் ஆரம்பித்தது” என்று கூறுவர். ஒருவேளை, தாம் எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அமைந்தால், அதற்கான பெருமையை, எந்தவோர் அரசியல்வாதியும் தமது போட்டியாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதில்லை. உண்மையிலேயே, அந்தப் போட்டியாளர்கள்தான் அந்தக் காரியத்தை ஆரம்பித்திருந்தாலும், அதற்கான நற்பெயர் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மற்றவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த திட்டங்களை, அவர்களுக்கு அழைப்பு விடுக்காமலே திறந்துவைக்கும் நாடு இலங்கை மாத்திரமேயாகும்.

அவ்வாறிருக்க, பைஸர் முஸ்தபாதான், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்தாரென்று, அமைச்சர் பந்துல ஏன் கூறவேண்டும்? யாரோ முன்வைத்த விமர்சனத்துக்கே, அதன் மூலம் அவர் பதிலளித்தார் போலத்தான் தெரிகிறது. யார் அவ்வாறு விமர்சித்தவர் அல்லது விமர்சித்தவர்கள்?

எந்தவொரு தமிழ்த் தலைவரும், சாய்ந்தமருதுக்கு நகர சபையொன்றை வழங்குவதை எதிர்க்கவில்லை. அவர்கள், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் என்றே கூறினர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் எடுத்துக்கூறி, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைத் தானே  நிறுத்தியதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதியாகவிருந்து, பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த சனிக்கிழமையன்று  கிழக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். 

ஆனால், அவரே அதற்கு முன்னொருநாள், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தால் கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதுதான் உண்மையென்றால்,  சாய்ந்தமருதுக்கான வர்த்தமானியைத் தானே நிறுத்தியதாக அவர் கூறுவது பொய். அல்லது, கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாவதை அவர் விரும்பவில்லை. 

சில சிங்களத் தனி நபர்களும் சமூக வலைத்தளங்களில் கொக்கரிப்பவர்களும் தவிர, வெளிப்படையாக ஊடகவியலாளர்களை அழைத்து, சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஓர் அமைப்பு மட்டும்தான் இருக்கிறது. அது தான், ராஜபக்‌ஷர்களைத் தெய்வதாக மதிக்கும் டொக்டர் குணதாச அமரசேகர மற்றும் டொக்டர் வசந்த பண்டார ஆகியோர் தலைமையிலான “தேசபக்த தேசிய அமைப்பு” ஆகும். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றைத் தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

இது, பேரினவாதிகளின் மனநோயொன்றையே மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்கள், பிற சமூகமொன்றைத் தாக்கிப் பேச வேண்டும் என்றால், கையிலெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம்தான், “தனி நாடு ஒன்றை உருவாக்கப் போகிறார்கள்” என்ற குற்றச்சாட்டாகும். 

ஒரு காலத்தில், கண்ணில் படும் அத்தனைத் தமிழரும் தனித் தமிழ் நாட்டுப் போராட்டத்துக்கு உதவுவதாகக் கூறினர். சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், “கொட்டியா” (புலி) என்றே திட்டினார்கள். பின்னர், மலையகத் தலைவர்கள், “மலைநாடு என்றதோர் தனி நாட்டை உருவாக்கப் போகிறார்கள்” என்று கூறித் திரிந்தனர். அதற்குப் பதிலளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், “மலைநாட்டை உருவாக்கத் தேவையில்லை. பூமி உருவான நாள் முதல் அது இருக்கிறது” என்று கூறியிருந்தார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவிலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் கல்முனையில் தமிழ்ப் பேசும் கச்சேரியொன்று திறக்கப்பட வேண்டும் என்றும் கோரிய போது, “கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி நாடொன்றை அஷ்ரப் அமைக்கப் போகிறார்” எனக் கூச்சலிட்டனர். 

அதைத் தவிர, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த வர்த்தமானியை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவரது இனவாதப் போக்கைக் கருத்திற்கொள்ளும் போது, அந்தச் செய்தி உண்மையாகவும் இருக்கலாம். மன்னார் பனை அபிவிருத்திச் சபையின் பெயர்ப் பலகையொன்றில், தமிழ் எழுத்துகளுக்குக் கீழே சிங்கள எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமடைந்த விமல், அந்தப் பெயர் பலகையை மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்று வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றை தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருக்கும் கருத்தும் விசித்திரமானதாகும். 

பாரியதோர் முஸ்லிம் பிரதேசத்தைப் பிரித்தே, சாய்ந்தமருது மாநகர சபை உருவாக்கப்பட்டது. முஸ்லிம் பிரதேசங்கள் ஒன்றுசேர்வதற்குப் பதிலாக, பிரிந்து தனி நாடு அமைவது எவ்வாறு? இவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பாததற்குக் காரணம், தனித் தமிழ்நாடொன்று உருவாக அது வசதியாகும் என்பதாலாகும். மாகாணங்கள் இணைவதால் தனிநாடு உருவாகும் என்று கூறும் இந்தப் பேரினவாதிகள், முஸ்லிம் பிரதேசங்கள் பிரிவதாலும் தனிநாடு உருவாகும் என்கிறார்கள்.

கல்முனைப் பிரதேசத்துக்குக் கச்சேரியொன்று வழங்கப்பட வேண்டும் என, இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிய போதும், முஸ்லிம் தனி நாடு வரப்போகிறது என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், சிங்கள் மொழி தெரியாத அம்பாறை மாவட்டத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாலேயே, தமிழ் பேசும் கச்சேரியொன்றை, அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கும் தனிநாட்டுச் சாயம் பூசப்பட்டது. இம்முறை அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இந்த பேரினவாதம் பெரிய அலையாக் கிளம்பாவிட்டாலும், அதற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என்பதே உண்மை. 

புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல

இலங்கையில் கிராம சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ அல்லது 1987ஆம் ஆண்டில் தற்போதைய பிரதேச சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையே கடந்த 14ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகரசபை என்பதைப் போலத்தான், சில பேரினவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், தனியாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சிசபை, சாய்ந்தமருது நகர சபையல்ல.   

அதற்கு முன்னரும் சில இடங்களில் புதிதாகத் தனித்தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், ஏற்கெனவே இருந்த உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அக்காலத்தில் இருந்த நான்கு கிராம சபைகள் ஒன்றிணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது பின்னர் அது நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டு, 2001ஆம் ஆண்டில் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது.

2011ஆம் ஆண்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் உருவாக்கமும் மற்றோர் உதாரணமாகும். அப்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வே உள்ளூராட்சி அமைச்சராகக் கடமையாற்றினார். அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கிருந்த பிரதேச சபையைப் பிரித்து, மாநகர சபையொன்றை உருவாக்கினார். இதற்கு அக்காலத்தில் “கபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுகான பிரசார அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரதேச சபையொன்று முதலில் நகர சபையாகத் தரமுயர்த்தப்படாமல், நேரடியாகவே மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படுவது முறையானதல்ல என்பதே அவர்களது வாதமாகியது. 

அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை பிரித்தெடுக்கப்பட்ட போது, மீதமாக இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 4,000 எனவும் கபே கூறியது. ஆனால், அந்த எதிர்ப்புகளை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதற்கு, மஹிந்த தரப்பு ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதே அரசாங்கத்தில் இருந்தவர்கள்தான், இப்போது சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

சாய்ந்தமருது நகர சபைக்கான ஆர்ப்பாட்டங்கள், 2017ஆம் ஆண்டிலேயே உச்சகட்டத்தை அடைந்தன. அதே காலத்தில், மலையகத்திலும் உள்ளூராட்சி சபைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நான்கு புதிய சபைகளாகப் பிரித்து, எட்டு சபைகளை உருவாக்க வேண்டும் என்பதே மலையகத் தலைவர்களின் குறிப்பாகத் தமிழ் முற்போக்கு முன்னணியின் கோரிக்கையாக இருந்தது.

அந்தக் கோரிக்கைக்காக அவர்கள் முன்வைத்த காரணங்களை எவராலும் மறுக்க முடியவில்லை. இந்த இரண்டு பிரதேச சபைகளினதும் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல சுமார் 100 கிலோமீற்றரைக் கடக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். அதேவேளை, 10,000 மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். 

அவ்வாறிருந்தும், அந்தத் தலைவர்கள் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கமே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. தாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மலையகத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்க வேண்டியிருக்கும் என அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க கூறியதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் கூறியிருந்தார்.

அவ்வாறாயின், அதையும் கொடுங்கள், இதையும் தாருங்கள் என்று அடம்பிடித்து, தாம் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.மலையகத் தலைவர்களின் அந்தப் போராட்டம் வெற்றியளித்தது. 2017  முடிவடைவதற்குள், புதிதாக 6 பிரதேச சபைகளுடன் நுவரெலியாவும் அம்பகமுவவும் சேர்த்து எட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாய்ந்தமருதும்-பேரினவாதமும்/91-246139

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.