Jump to content

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின்  செயற்பாடு - நளின் பண்டார


Recommended Posts

(ஆர்.விதுஷா)

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும்  நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது  எனத் தெரிவித்த ஐக்கிய  தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சேவை தொடர்பில்; பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ  பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான  நிலையில்  இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள்  ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நிலைப்பாட்டியேலே அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.

அத்துடன் எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக  கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில்  முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன்,  மஹிந்த தரப்பினர் 2015 இற்கு  முன்னராக நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று  வருகின்றவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76749

Link to comment
Share on other sites

பாராளுமன்றம் முடியும் தருவாயில் நாடு சீக்கிரமாக இராணுவ மயம்; மூன்று சம்பவங்கள் இதோ.. அனைத்தும் சட்ட விரோதம்.! நந்தசேனவின் 'இராணுவ காய்ச்சலுக்கு' நாட்டின் சட்டத்தை பலி கொடுக்க வேண்டியது இல்லை..!

விமல் தீரசேகரவின் வெளியீடு

Sri-Lanka-Militarization.jpg

 

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 27 முற்பகல் 08.45)

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய எடுத்துள்ளதால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வே இறுதியான பாராளுமன்ற அமர்வாக கருதப்பட்டது.

பாராளுமன்றம் முடிவுக்கு வரும் தருவாயில் ஜனாதிபதி நந்தசேன சட்டவிரோதமாக சிவில் நிறுவனங்களுக்கு அமுதா இராணுவ அதிகாரிகளை நியமித்து மிக வேகமாக நாட்டை இராணுவ மயமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை.

https://lankaenews.com/news/274/ta

நந்தசேனவின் கடுமையான சட்ட விரோத இராணுவ தலையீடு..

ஜனாதிபதி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரியவை நியமித்தமை அவரது சட்டவிரோத பிரதானமான நியமனம் ஆகும். 24 ஆம் திகதி இராணுவ சீருடையில் சென்று தனது சட்ட விரோத நியமனத்தில் கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரலுக்கு இதற்கு முன்னர் தமது உரிமைகளுக்காக போராடிய சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கம் அதன் தலைவர்கள் கூட்டத்திற்கு நடுவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேஜர் ரவிப்பிரியவின் நியமனம் சட்டவிரோதமானது என கூறுவதற்கு காரணம் இதோ. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1419/3 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கையின் நிர்வாக சேவையில் 'விசேட தரம்' (Super Grade)  உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய அமைச்சு மற்றும் திணைக்கள பிரதானிகளின் பதவி நிலை பல பெயரிடப்பட்டடுள்ளன. அதில் 28ஆவது பதவியாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் உள்ள அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நந்தசேனவிற்கு உள்ள இராணுவ காய்ச்சலுக்கு ஏற்ப சுங்கத் திணைக்களத்திற்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றால் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தில் உள்ள நிர்வாக அதிகாரி ஒருவரை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக நியமித்து அவருக்கு உதவி செய்வதற்கு என ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்து இருக்க முடியுமே தவிர அந்த பதவிக்கு அல்லது பதவியை கண்காணிப்பு செய்ய இராணுவ அதிகாரியை நியமித்தமை சட்ட விரோதமான செயலாகும். சட்டத்தின் ஆட்சியை புரிய வந்த ஜனாதிபதிக்கு சட்டத்தை மீறி செயல்பட வாய்ப்பு அளிக்கக் கூடாது.

நந்தசேனவின் இரண்டாவது சட்ட விரோத இராணுவத் தலையீடு.. 

ஜனாதிபதி நந்தசேன தனது சட்ட விரோத நியமனத்தில் மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளடங்களாக இரண்டாவது இராணுவ அதிகாரிகள் குழு ஒன்றை பொலிஸ் திணைக்களத்தின் குற்ற விசாரணை பிரிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமித்துள்ளார்.

இந்த சட்ட விரோத நியமனத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு உள்ள மற்றுமொரு சட்டவிரோத நியமனத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித பலனும் இல்லை என்பதால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வரும் குறித்த விசாரணைகளை கண்காணிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையிலான 6 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுடைய பொறுப்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்றங்களை கண்காணித்து வாரத்திற்கு ஒரு முறை தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என கமல் குணரத்ன கூறியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே தான் இந்த நியமனங்களை வழங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

கமல் குணரத்னவும் சட்ட விரோதம் அவர் செய்த செயலும் சட்ட விரோதம்.. 

பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் இருக்க முடியாது என்பதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நியமனம் சட்ட விரோதமானது. நாட்டில் தற்போது சட்ட ரீதியான பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை. 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர அதற்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் எவரும் பாதுகாப்பு அமைச்சை தன் வசம் வைத்திருக்க முடியாது. மேலும் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையில் நாட்டில் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சு ஒப்படைக்கப்படவில்லை. அதன்படி கமல் குணரத்ன சட்டவிரோத நியமனத்திலேயே உள்ளார்.

பொலிஸார் முன்னெடுத்து செல்லும் ஏதேனும் விசாரணைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு மாத்திரமே உள்ளது. இவ்வாறான நிலைமையில் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளமை முழுமையான சட்டவிரோத செயல் ஆகின்றது. பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபர் தவிர்ந்த வெளி நபர்களுக்கு போலீசாரின் விசாரணை குறித்து கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டவிரோத செயலாகும். அதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன அதிகாரம் இழந்து ஒரு மூலையில் இருக்கும் நிலையில் கமல் குணரத்னவின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து குறைந்தது சட்டமா அதிபராவது குரல் எழுப்ப வேண்டும்.

சந்தேகம் சந்தேகம் சந்தேகம்.. 

இதேவேளை ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசார் முன்னெடுக்கும் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை அனுப்பி உள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் அமைப்பை அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவே உருவாக்கியுள்ளது. மேலும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமிற்கு இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்கியதாக அரசாங்கத்தின் இணை ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் விசாரணையை கண்காணிக்க இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நந்தசேனவின் மூன்றாவது சட்ட விரோத இராணுவத் தலையீடு..

ஜனாதிபதி நந்தசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது சட்டவிரோத செயல் கொழும்பு போக்குவரத்து பிரிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இராணுவ மிலிட்டரி போலீசாரை நியமித்துள்ளமை ஆகும்.  இராணுவத்தில் மாத்திரமல்ல கடற்படை விமானப் படையிலும் மிலிட்டரி போலீசார் உள்ளனர். இந்த இராணுவ மிலிட்டரி போலீசாருக்கு உரிய கடமைகள் என்ன என்பது சட்ட ஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றின் ஊடாக இராணுவ போலீசாரின் கடமைகள் இராணுவத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக குறித்த நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகும். இவர்களுக்கு வீதிகளில் இறங்கி சிவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் செயல்படுவதற்கு விஷேட சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நந்தசேன தனக்கு ஏற்பட்டுள்ள இராணுவ காய்ச்சலை சுகப் படுத்திக்கொள்ள செய்ய வேண்டியது இந்த இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றில் தேவையான திருத்தங்களை ஏற்படுத்தி குறித்த இராணுவ மிலிட்டரி போலீசாரை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதாகும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.

பொது மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை அழைப்பதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு மிலிட்டரி போலீசாருக்கு சிவில் செயற்பாடுகளை பொறுப்பளிக்க முடியாது. அப்படி செய்வதானால் பாராளுமன்றத்துக்கு புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து மிலிட்டரி போலீசாருக்கு இருக்கக்கூடிய கடமைகள் தொடர்பில் சட்டமூலம் நிறைவேற்றி புதிய வர்த்தமானி மூலம் அறிவித்து செயல்பட வேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயணிகளின் பஸ்களை சோதனை செய்வதற்கு பொலிசாரின் உதவியை பெற்று இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர் என்பதனை மறந்து விடக்கூடாது. காரணம் அவசரகால சட்டம் காணப்பட்டாலும் சிவில் செயற்பாடுகளில் போலீசாரே தலையிட முடியும் என்பதாகும்.

ஜனாதிபதி நந்தசேன இவ்வாறு சட்ட விரோதமான முறையில் பொலிசாரின் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவ தலையீட்டை ஏற்படுத்துவாரே ஆனால் விரைவில் இலங்கையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளுக்கு மேலிடத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது நடக்கக் கூடியதே. 

சட்டத்தை மதிக்காத நந்தசேனவின் வழக்கம்..

நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது இவ்வாறு செயல்பட வேண்டுமானால் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரையில் ஜனாதிபதி நந்தசேன தான் சட்டத்தை மதிக்காது செயல்படும் நபர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் "சட்டதிட்டங்கள் காரணமாக சாதாரண நபர் ஒருவருக்கு சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 22 ஆவது வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி நந்தசேன கருத்து தெரிவித்தார். நந்தசேன என்பவர் சட்டத்திற்கு மாறான மனிதக் கொலை புரிந்து, நிதி மோசடி செய்து, அரச பணத்தை மோசடி செய்து நீதிமன்றங்கள் பலவற்றில் விசாரணைகளை எதிர்கொண்டு நாட்டின் தலைவராக மாறிய பின்னர் கிடைக்கும் விடுதலையால் உள்ள நபர். எனவே இப்படியான ஒருவர் இவ்வாறு செயற்படுவது எதிர்பார்த்தது என்றபோதும் அதற்கு அனுமதி அளிக்க முடியாது.

69 லட்சம் மக்கள் வாக்களித்ததால் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அமெரிக்கன் நந்தசேன இருந்தால் அவர் வாளை மிதித்துக் கொண்டு இருக்கின்றார் என அர்த்தம். 

தோற்கடிக்கப் பட்டவர் மரண தூக்கத்தில் இருந்தாலும் முன் எழுந்து வர வேண்டும்..   

மேற்கூறியவாறு நாட்டின் ஜனாதிபதி நந்தசேன கடந்த சில நாட்களாக சட்ட விரோதமான முறையில் செயற்பட்டு நாட்டை விரைவான இராணுவ மயமாக்கலுக்கு கொண்டு செல்லும் நிலையில் பலாத்காரமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர் தோற்கடிக்கப்பட்ட மரண தூக்கத்தில் உள்ளார். காரணம் ராஜபக்ஷக்களை விடவும் இவருக்கு அதிகமான 'இராணுவ காய்ச்சல்' ஏற்பட்டுள்ளதனாலாகும். இராணுவ நியமனங்கள் குறித்து கதைத்தால் தனது இராணுவ விருப்ப காய்ச்சலுக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.

எதிர்க் கட்சித் தலைவரை குளிர் காயுமாறு கூறிவிட்டு அதிகரித்து வரும் சட்டவிரோத மோசமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்னிற்பதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், சட்டத் துறையில் உள்ளவர்கள் மற்றும் உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முக்கிய கடமை பொறுப்பு உள்ளது.  

விமல் தீரசேகர 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

 

 

எதிர்க் கட்சித் தலைவரை குளிர் காயுமாறு கூறிவிட்டு அதிகரித்து வரும் சட்டவிரோத மோசமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்னிற்பதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், சட்டத் துறையில் உள்ளவர்கள் மற்றும் உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முக்கிய கடமை பொறுப்பு உள்ளது.  

விமல் தீரசேகர 

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இவை யாவும் தேவை என சிங்கள புத்திஜீவிகள்,புரட்சிகர முன்னனியினர் ,பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்புகின்றனர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

69 லட்சம் மக்கள் வாக்களித்ததால் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அமெரிக்கன் நந்தசேன இருந்தால் அவர் வாளை மிதித்துக் கொண்டு இருக்கின்றார் என அர்த்தம். 

அறுபது லட்ஷம் மக்களும் வாக்களிக்க உதவியது அப்பாவி தமிழ் கிறிஸ்தவர்களின் உயிர்கள். எப்போதுமே சிங்களவன் அரசியல் கதிரை ஏற உதவுவதும்  தமிழ் மக்களே. 

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

இவ்வாறான  நிலையில்  இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள்  ஏற்படும்.

உலகப்பொருளாதாராம் வேகமாக சரிந்து வருகின்றது. இந்த ஆண்டின் தாக்கம் பல ஆண்டுகளாக நீடிக்கும். 

பொருளாதார சரிவில் சிங்களமும் சிக்கிய ஆகும். வருமானம் இல்லாமல் திக்காடும். இவர்கள் வளர்க்கும் இரானுவமே இவர்களுக்கு எதிராக திரும்பலாம்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.