Jump to content

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின்  செயற்பாடு - நளின் பண்டார


Recommended Posts

(ஆர்.விதுஷா)

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும்  நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது  எனத் தெரிவித்த ஐக்கிய  தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சேவை தொடர்பில்; பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ  பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான  நிலையில்  இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள்  ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நிலைப்பாட்டியேலே அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.

அத்துடன் எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக  கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில்  முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன்,  மஹிந்த தரப்பினர் 2015 இற்கு  முன்னராக நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று  வருகின்றவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76749

Link to comment
Share on other sites

பாராளுமன்றம் முடியும் தருவாயில் நாடு சீக்கிரமாக இராணுவ மயம்; மூன்று சம்பவங்கள் இதோ.. அனைத்தும் சட்ட விரோதம்.! நந்தசேனவின் 'இராணுவ காய்ச்சலுக்கு' நாட்டின் சட்டத்தை பலி கொடுக்க வேண்டியது இல்லை..!

விமல் தீரசேகரவின் வெளியீடு

Sri-Lanka-Militarization.jpg

 

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 27 முற்பகல் 08.45)

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய எடுத்துள்ளதால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வே இறுதியான பாராளுமன்ற அமர்வாக கருதப்பட்டது.

பாராளுமன்றம் முடிவுக்கு வரும் தருவாயில் ஜனாதிபதி நந்தசேன சட்டவிரோதமாக சிவில் நிறுவனங்களுக்கு அமுதா இராணுவ அதிகாரிகளை நியமித்து மிக வேகமாக நாட்டை இராணுவ மயமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை.

https://lankaenews.com/news/274/ta

நந்தசேனவின் கடுமையான சட்ட விரோத இராணுவ தலையீடு..

ஜனாதிபதி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரியவை நியமித்தமை அவரது சட்டவிரோத பிரதானமான நியமனம் ஆகும். 24 ஆம் திகதி இராணுவ சீருடையில் சென்று தனது சட்ட விரோத நியமனத்தில் கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரலுக்கு இதற்கு முன்னர் தமது உரிமைகளுக்காக போராடிய சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கம் அதன் தலைவர்கள் கூட்டத்திற்கு நடுவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேஜர் ரவிப்பிரியவின் நியமனம் சட்டவிரோதமானது என கூறுவதற்கு காரணம் இதோ. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1419/3 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கையின் நிர்வாக சேவையில் 'விசேட தரம்' (Super Grade)  உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய அமைச்சு மற்றும் திணைக்கள பிரதானிகளின் பதவி நிலை பல பெயரிடப்பட்டடுள்ளன. அதில் 28ஆவது பதவியாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் உள்ள அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நந்தசேனவிற்கு உள்ள இராணுவ காய்ச்சலுக்கு ஏற்ப சுங்கத் திணைக்களத்திற்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றால் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தில் உள்ள நிர்வாக அதிகாரி ஒருவரை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக நியமித்து அவருக்கு உதவி செய்வதற்கு என ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்து இருக்க முடியுமே தவிர அந்த பதவிக்கு அல்லது பதவியை கண்காணிப்பு செய்ய இராணுவ அதிகாரியை நியமித்தமை சட்ட விரோதமான செயலாகும். சட்டத்தின் ஆட்சியை புரிய வந்த ஜனாதிபதிக்கு சட்டத்தை மீறி செயல்பட வாய்ப்பு அளிக்கக் கூடாது.

நந்தசேனவின் இரண்டாவது சட்ட விரோத இராணுவத் தலையீடு.. 

ஜனாதிபதி நந்தசேன தனது சட்ட விரோத நியமனத்தில் மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளடங்களாக இரண்டாவது இராணுவ அதிகாரிகள் குழு ஒன்றை பொலிஸ் திணைக்களத்தின் குற்ற விசாரணை பிரிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமித்துள்ளார்.

இந்த சட்ட விரோத நியமனத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு உள்ள மற்றுமொரு சட்டவிரோத நியமனத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித பலனும் இல்லை என்பதால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வரும் குறித்த விசாரணைகளை கண்காணிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையிலான 6 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுடைய பொறுப்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்றங்களை கண்காணித்து வாரத்திற்கு ஒரு முறை தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என கமல் குணரத்ன கூறியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே தான் இந்த நியமனங்களை வழங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

கமல் குணரத்னவும் சட்ட விரோதம் அவர் செய்த செயலும் சட்ட விரோதம்.. 

பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் இருக்க முடியாது என்பதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நியமனம் சட்ட விரோதமானது. நாட்டில் தற்போது சட்ட ரீதியான பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை. 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர அதற்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் எவரும் பாதுகாப்பு அமைச்சை தன் வசம் வைத்திருக்க முடியாது. மேலும் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையில் நாட்டில் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சு ஒப்படைக்கப்படவில்லை. அதன்படி கமல் குணரத்ன சட்டவிரோத நியமனத்திலேயே உள்ளார்.

பொலிஸார் முன்னெடுத்து செல்லும் ஏதேனும் விசாரணைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு மாத்திரமே உள்ளது. இவ்வாறான நிலைமையில் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளமை முழுமையான சட்டவிரோத செயல் ஆகின்றது. பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபர் தவிர்ந்த வெளி நபர்களுக்கு போலீசாரின் விசாரணை குறித்து கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டவிரோத செயலாகும். அதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன அதிகாரம் இழந்து ஒரு மூலையில் இருக்கும் நிலையில் கமல் குணரத்னவின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து குறைந்தது சட்டமா அதிபராவது குரல் எழுப்ப வேண்டும்.

சந்தேகம் சந்தேகம் சந்தேகம்.. 

இதேவேளை ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசார் முன்னெடுக்கும் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை அனுப்பி உள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் அமைப்பை அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவே உருவாக்கியுள்ளது. மேலும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமிற்கு இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்கியதாக அரசாங்கத்தின் இணை ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் விசாரணையை கண்காணிக்க இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நந்தசேனவின் மூன்றாவது சட்ட விரோத இராணுவத் தலையீடு..

ஜனாதிபதி நந்தசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது சட்டவிரோத செயல் கொழும்பு போக்குவரத்து பிரிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இராணுவ மிலிட்டரி போலீசாரை நியமித்துள்ளமை ஆகும்.  இராணுவத்தில் மாத்திரமல்ல கடற்படை விமானப் படையிலும் மிலிட்டரி போலீசார் உள்ளனர். இந்த இராணுவ மிலிட்டரி போலீசாருக்கு உரிய கடமைகள் என்ன என்பது சட்ட ஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றின் ஊடாக இராணுவ போலீசாரின் கடமைகள் இராணுவத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக குறித்த நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகும். இவர்களுக்கு வீதிகளில் இறங்கி சிவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் செயல்படுவதற்கு விஷேட சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நந்தசேன தனக்கு ஏற்பட்டுள்ள இராணுவ காய்ச்சலை சுகப் படுத்திக்கொள்ள செய்ய வேண்டியது இந்த இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றில் தேவையான திருத்தங்களை ஏற்படுத்தி குறித்த இராணுவ மிலிட்டரி போலீசாரை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதாகும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.

பொது மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை அழைப்பதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு மிலிட்டரி போலீசாருக்கு சிவில் செயற்பாடுகளை பொறுப்பளிக்க முடியாது. அப்படி செய்வதானால் பாராளுமன்றத்துக்கு புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து மிலிட்டரி போலீசாருக்கு இருக்கக்கூடிய கடமைகள் தொடர்பில் சட்டமூலம் நிறைவேற்றி புதிய வர்த்தமானி மூலம் அறிவித்து செயல்பட வேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயணிகளின் பஸ்களை சோதனை செய்வதற்கு பொலிசாரின் உதவியை பெற்று இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர் என்பதனை மறந்து விடக்கூடாது. காரணம் அவசரகால சட்டம் காணப்பட்டாலும் சிவில் செயற்பாடுகளில் போலீசாரே தலையிட முடியும் என்பதாகும்.

ஜனாதிபதி நந்தசேன இவ்வாறு சட்ட விரோதமான முறையில் பொலிசாரின் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவ தலையீட்டை ஏற்படுத்துவாரே ஆனால் விரைவில் இலங்கையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளுக்கு மேலிடத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது நடக்கக் கூடியதே. 

சட்டத்தை மதிக்காத நந்தசேனவின் வழக்கம்..

நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது இவ்வாறு செயல்பட வேண்டுமானால் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரையில் ஜனாதிபதி நந்தசேன தான் சட்டத்தை மதிக்காது செயல்படும் நபர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் "சட்டதிட்டங்கள் காரணமாக சாதாரண நபர் ஒருவருக்கு சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 22 ஆவது வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி நந்தசேன கருத்து தெரிவித்தார். நந்தசேன என்பவர் சட்டத்திற்கு மாறான மனிதக் கொலை புரிந்து, நிதி மோசடி செய்து, அரச பணத்தை மோசடி செய்து நீதிமன்றங்கள் பலவற்றில் விசாரணைகளை எதிர்கொண்டு நாட்டின் தலைவராக மாறிய பின்னர் கிடைக்கும் விடுதலையால் உள்ள நபர். எனவே இப்படியான ஒருவர் இவ்வாறு செயற்படுவது எதிர்பார்த்தது என்றபோதும் அதற்கு அனுமதி அளிக்க முடியாது.

69 லட்சம் மக்கள் வாக்களித்ததால் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அமெரிக்கன் நந்தசேன இருந்தால் அவர் வாளை மிதித்துக் கொண்டு இருக்கின்றார் என அர்த்தம். 

தோற்கடிக்கப் பட்டவர் மரண தூக்கத்தில் இருந்தாலும் முன் எழுந்து வர வேண்டும்..   

மேற்கூறியவாறு நாட்டின் ஜனாதிபதி நந்தசேன கடந்த சில நாட்களாக சட்ட விரோதமான முறையில் செயற்பட்டு நாட்டை விரைவான இராணுவ மயமாக்கலுக்கு கொண்டு செல்லும் நிலையில் பலாத்காரமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர் தோற்கடிக்கப்பட்ட மரண தூக்கத்தில் உள்ளார். காரணம் ராஜபக்ஷக்களை விடவும் இவருக்கு அதிகமான 'இராணுவ காய்ச்சல்' ஏற்பட்டுள்ளதனாலாகும். இராணுவ நியமனங்கள் குறித்து கதைத்தால் தனது இராணுவ விருப்ப காய்ச்சலுக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.

எதிர்க் கட்சித் தலைவரை குளிர் காயுமாறு கூறிவிட்டு அதிகரித்து வரும் சட்டவிரோத மோசமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்னிற்பதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், சட்டத் துறையில் உள்ளவர்கள் மற்றும் உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முக்கிய கடமை பொறுப்பு உள்ளது.  

விமல் தீரசேகர 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

 

 

எதிர்க் கட்சித் தலைவரை குளிர் காயுமாறு கூறிவிட்டு அதிகரித்து வரும் சட்டவிரோத மோசமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்னிற்பதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், சட்டத் துறையில் உள்ளவர்கள் மற்றும் உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முக்கிய கடமை பொறுப்பு உள்ளது.  

விமல் தீரசேகர 

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இவை யாவும் தேவை என சிங்கள புத்திஜீவிகள்,புரட்சிகர முன்னனியினர் ,பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்புகின்றனர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

69 லட்சம் மக்கள் வாக்களித்ததால் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அமெரிக்கன் நந்தசேன இருந்தால் அவர் வாளை மிதித்துக் கொண்டு இருக்கின்றார் என அர்த்தம். 

அறுபது லட்ஷம் மக்களும் வாக்களிக்க உதவியது அப்பாவி தமிழ் கிறிஸ்தவர்களின் உயிர்கள். எப்போதுமே சிங்களவன் அரசியல் கதிரை ஏற உதவுவதும்  தமிழ் மக்களே. 

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

இவ்வாறான  நிலையில்  இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள்  ஏற்படும்.

உலகப்பொருளாதாராம் வேகமாக சரிந்து வருகின்றது. இந்த ஆண்டின் தாக்கம் பல ஆண்டுகளாக நீடிக்கும். 

பொருளாதார சரிவில் சிங்களமும் சிக்கிய ஆகும். வருமானம் இல்லாமல் திக்காடும். இவர்கள் வளர்க்கும் இரானுவமே இவர்களுக்கு எதிராக திரும்பலாம்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.