Jump to content

கடவுள் என்னும் மாயை


Recommended Posts

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்?

இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா?

இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்?

மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எனக்குத் தெரியவில்லை, என்னால் இந்தச் சோகத்தை எதிர்க்கொள்ள முடியவில்லை ஆகவே நான் கடவுள் என்னும் ஒரு மாயையில் நம்பிக்கை வைக்கிறேன் என்பது, கடவுள் நம்பிக்கை பற்றி அண்மையில் கண்மணி எழுதிய பதிவின் தொனிப் பொருளாகவும் இருந்தது.ஆகவே கடவுள் என்பது நாமாகவே உருவாக்கும் ஒரு மாயை என்பதை ஏற்றுக் கொள்கிறோமா? சரி அப்படி என்றால் ஏன் நாம் அப்படியான ஒரு மாயைக்குள் வாழ வேண்டும்? உளவியல் ரீதியாக மன ஆற்றலை ஆரய்ந்த வல்லுனர்கள் சொல்வார்கள் ,எவனொருவன் தனது தலைவிதியயைத் தானே தீர்மானிக்கும் உள உரனை உடையவனாக இருக்கிறானோ அவனே தனது தலை விதியை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெறுகிறான் என்ங்கிறார்கள்.

தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டு மென்று சொல்லிச் செத்துப் போன தந்தை செல்வாவுடன், தமிழர் தலை விதியை நாம் தான் மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட ஒரு பதினாறு வயசுப் பையன் நிகழ்த்திய சாதனைகளின் பின்னால் இருப்பது இந்த உள உரன் என்பது எமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம்.என்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று எழும் நம்பிக்கையே மாற்றங்களை நிகழ்த்த வல்லது.என்னால் எதுவும் முடியாது அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது, அப்பனே முருகா என்னைக் காப்பது என்பதால் என்ன மாற்றத்தை நிகழ்த்தி விட முடியும்?இது எனது விதிப் பயன்,இது தான் எனது தலை எழுத்து என்று சொல்லி விட்டு முயற்ச்சி எதுவும் அற்று இருப்பதால், விதி என்னும் புற நிலையை நாமே எமது அகத்திற்குள் வரவழைத்துக் கொள்கிறேம் அல்லவா?ஆகவே இந்த கடவுள் என்னும் மாயையில் இருந்து விடுபட்டால் இந்த 'விதி வழி ' என்னும் மாயைக்குள் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது அல்லவா?

கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று கூறும் எல்லா மதங்களும் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை மறுதலிக்கின்றன.பரிணாமத் தத்துவத்திற்கு எதிர்வினையாக முன் வைக்கப்பட்ட ஒரு பிரபலமான கூற்று, பின் வருமாறு வருகிறது.

//Fred Hoyle who reportedly stated that the "probability of life originating on Earth is no greater than the chance that a hurricane, sweeping through a scrapyard, would have the luck to assemble a Boeing 747."//

இதை தமிழில் மொழி பெயர்த்தால், உலகில் உயிர்கள் பரிணாமத்தால் தோன்றியதற்கான நிகழ்தகவு ,ஒரு கழிவுப் பட்டறைக்குள் உள் நுழைந்த சூறாவழியால் ஒரு போயிங் 747 விமானம் ஒன்று வடிவமைக்கப் படுவதற்கான நிகழ்தகவை விடக் குறைவானது என்பதாகும்.படைப்பை நிருபிப்பதற்காக fரெட் கொயில் என்பவரால் முன் மொழியப்பட்ட இந்த தர்க்கத்தை, ரிச்சர்ட் டார்க்கின் பின்வருமாறு கட்டுடைக்கிறார்.

முதலாவதாக மிகவும் சிக்கலான ஒரு விமானத்தை வடிவமைப்பதற்கு ஒரு தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர் தேவை.ஆகவே சிக்கலான உயிரினக்களை வடிவமைத்த கடவுள் இன்னும் சிக்கலானவராகவே இருப்பார்.அப்படியான சிக்கலான கடவுளை வடிவமைத்தவர் யார்? அவரைக் கடவுளின் தந்தை என்று கொள்வோமாயின், இன்னும் சிக்கலான கடவுளின் தந்தையை வடிவமைத்த திறமைசாலி யார் என்று இது ஒரு தொடரான கேள்வியாகச் செல்லும்.ஆகவே உயிர்களின் தோற்றத்தைப் பற்றி விளக்கக்கூடிய ஒரு கோட்பாடாக பரிணாமக் கோட்பாடே இருக்கிறது எனலாம்.ஒரு விமானத்தைப் போலன்றி பரிணாமம் என்பது நெடு நாட்களாக நிகழ்ந்த ஒரு விடயம்.பல்வேறு விதமான விகாரங்கள்,தேர்வுகளின் இறுதியில் தக்கன பிழைத்து நிகழ்ந்ததே பரிணாமம்.உயிரினக்கள் இப்போது உள்ள நிலையிலையே வடிவமைக்கப்பட்டன என்பது ஒரு வகை மாயையே.பரிணாமத்திற்கான பல் வேறு வளர்ச்சி நிலைகள் அடையாளம் காணப்பட்டு அந்தச் சங்கிலியில் இருந்த பல் வேறு உயிரிகளும் அடையாளம் காணப்படுள்ளன.பல்லாயிரம் ஆண்டுகளின் முன் இருந்த உயிரிகளும் அகழ்வாராச்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஆகவே இன்று இருக்கும் உயர் நிலை உயிரிகளின் வடிவமே பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னும் இறைவனால் படைக்கப்பட்டன என்பது ஏற்றுக்கோள்ள முடியாத ஒரு வாதமாகும்.

அடுத்ததாக எல்லா கடவுள் சம்பந்தமான வாதங்களும் சங்கமிக்கும் ஒரு வாதம் இருக்கிறது ,அது தான் மனித சிந்தனைக்கு தெரியாத விடயத்தை எதோ ஒரு சக்தியைத் தான் கடவுள் எங்கிறோம் என்னும் வாதம்.இந்த வாதத்தில் இருக்கும் தர்க்கவியற் பலவீனம் என்ன என்பதைப் பார்ப்போம்.முதலாவதாக மனிதனால் விளங்கப் படுத்த முடியாதது என்று சொல்லிக் கொண்டே அதனை 'கடவுள் 'என்னும் கோட்பாட்டால் விளக்கங்கப் படுத்த முயல்கின்றனர்.விளங்கப்படுத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் உள்ளதையே விளங்கிக்க முடியாதது உள்ள மாயை வாழ்க்கைக்குள்ள.. கடவுள் என்றும் அதை மாயை என்றும்.. கடவுளே..! எத்தனை வகையில மனித அறியாமைகள் வெளிப்படுகின்றன..! :P :lol:

Link to comment
Share on other sites

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் உள்ளதையே விளங்கிக்க முடியாதது உள்ள மாயை வாழ்க்கைக்குள்ள.. கடவுள் என்றும் அதை மாயை என்றும்.. கடவுளே..! எத்தனை வகையில மனித அறியாமைகள் வெளிப்படுகின்றன..! :P :lol:

தன்னைக்கட்டுப்படுத்த கடவுள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதற்க்காக அடிபடும் மனிதனை என்ன வென்று சொல்லி பாராட்டுவது? :lol::lol:

Link to comment
Share on other sites

தன்னைக்கட்டுப்படுத்த கடவுள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதற்க்காக அடிபடும் மனிதனை என்ன வென்று சொல்லி பாராட்டுவது? :lol::lol:

எனக்கு கடவுள் நானே தான்

:lol:

Link to comment
Share on other sites

ரிச்சர்ட் டாக்வின்னின் சனல் நான்கிற்காகத் தயாரிக்கப்பட்ட 'கேடுகளின் மூலம்' என்னும் விவரணம்.

கேடுகளின் மூலம்

இராக்கிய யுத்தம் ,சமயமும், புஸ்ஸும் பிளயரும், கிருத்துவ மத வாதமும்,பரிணாமாத் தத்துவமும்.

டாக்வின்னின் சுவரசியமான பேட்டி

http://www.youtube.com/watch?v=sM3l5WJk6fY

http://www.youtube.com/watch?v=z0-Nxg--5rs

http://www.youtube.com/watch?v=Gq9C6HglKRY

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எனக்கு கடவுள் நானே தான்

:icon_idea:

What you are telling is right. that is Athvaidha

"உன்னைக் கடந்தால் உள்ளே இருப்பது கட-வுள். உன்னுள்ளே இருப்பவை எல்லாம் உனக்கு தெரிவதில்லை. அப்படி தெரியும் போது நீயே கடவுள்"

"சீவனார் வேறு சிவனார் வேறில்லை

சீவனார் சிவனாரை அறிவாராகில்

சீவனாரே சிவனார் ஆவார்" (திருமூலர் திருமந்திரம்)

பூமிக்கு கீழ் இருக்கும் வைரங்கள் தோண்டுபவனுக்குத்தான் கிடைக்கும்.

பட்டை தீட்டினால் தான் ஜொலிக்கும்.

Link to comment
Share on other sites

கடவுள் எனப்படுவது எந்த உருவமும் அற்ற ,விருப்பு வெறுப்பு அற்ற ..... இந்த பூமியையும் பிற கிரகங்ங்களையும் அதன் பாதையில் இயங்க வைத்து ...... தண்ணீருக்கு மட்டும் உறை நிலையில் அதன் நிறையானது அதன் நீர்ம நிலையை விட குறைவாக உள்ளது போல் செய்து....... அதனால் உயிர்கள் உருவாக காரணமுமான ஒரு அற்புதமான தட்ப வெப்ப நிலை உருவாகாக்கி ....... இன்னும் பல குழப்பங்களுக்கு விடைகாண முடியாத ஒரு ஆற்றலாக வேண்டுமானால் இருக்கலாம்

எந்த மதமும் கடவுளை சரியாக விவரிக்கவில்லை ...... கடவுளின் பெயரால் சண்டையிடுவது போன்ற ஒரு முட்டாள்த்தனம் வேறொன்றுமில்லை........ ஏனென்றால் கடவுளென்று ஒரு ஆற்றல் இருக்குமாயின் அதற்கு எந்த விருப்பும் வெறுப்பும் இருக்கமுடியாது...... இயங்க வைத்து இயக்கும் இயற்கையே கடவுளை உருவகப்படுத்தலாம்...

கடவுள் பற்றி விவாதிப்பதும் நேரத்தை வீணடிப்பது தான் ஏனென்றால் அது முடிவற்றதாகவே இருக்கும் ...எல்லாம் இயற்கையின் வினோதங்கள்

Link to comment
Share on other sites

எந்த மதமும் கடவுளை சரியாக விவரிக்கவில்லை ...... கடவுளின் பெயரால் சண்டையிடுவது போன்ற ஒரு முட்டாள்த்தனம் வேறொன்றுமில்லை........ ஏனென்றால் கடவுளென்று ஒரு ஆற்றல் இருக்குமாயின் அதற்கு எந்த விருப்பும் வெறுப்பும் இருக்கமுடியாது...... இயங்க வைத்து இயக்கும் இயற்கையே கடவுளை உருவகப்படுத்தலாம்...

நீங்கள் சொல்வது 100% சரி. இதுவே வேதசாரமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை மாயை என்றதும் இன்னொரு மாயை தான். மதங்களின் குளறுபடிகளை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபடலாம். அப்படி விடுபடுவதற்கு 'நாத்திகம்' என்று பெயரிட்டு அது ஒரு கோட்பாடாகி இன்னுமொரு மானிடப்பிரிவிற்கே வழிவகுக்கும்.

'We have invented GOD. The thinking created god for itself. That means due to unhappiness, fear and depression we created something called god. God did not create us after his imagination, I wish He had'.
- J.K
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.