Jump to content

வறுமையின் நிறம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://lh3.googleusercontent.com/proxy/2N5U2bStk1NySEBEtM7V7JS4swRsBD-QSy5315ZVoKuXtS5u9WUgJwY3IVmV93pP0f0HJk4XQ8GE8bnA11jfCnkYY66s6nA

 

வறுமையின் நிறம்

கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திகள்தான். கூடிக் குதூகலமாகப் பேசிக் கொண்டிருக்கும் பெண்களிடையே சில சமயம் பேச்சு முற்றி சண்டையாக மாறிவிடுவதுமுண்டு.  நாங்கள் சிறுமிகளாக அங்கு பேசும் நடக்கும் நாடகங்களையெல்லாம் பாதி புரிந்தும் மீதி புரியாமலும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்போம். சில வேளைகளில் அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் ஏதோ பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டு நிற்போம். அப்பொழுதெல்லாம் சிலர் பெரியவர்கள் பேசுமிடத்தில்  உங்களுக்கென்ன வேலை என்று கேட்டதுமுண்டு.   

அன்றும் அப்படித்தான். பெண்கள் கூட்டம் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டமும் ஒருவித அங்கலாய்ப்பும் தெரிந்தது. நானும் என்வயதொத்த சிலரும் ஒன்றும் விளங்காமல் பார்த்துக்கொண்டு நின்றோம். அங்கு முன்பின் பார்த்திராத ஒரு பெண் அழுதுகொண்டு நின்றாள். அவளது கையில் துணியினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை. ஆளாளுக்கு அப்பெண்ணுக்கு ஆறுதல் சொல்லுவதும் தமக்குள் கூடிக் கதைப்பதுமாக வினாடிகள் கழிந்தன. நாங்களும் என்னதான் நடக்கிறது என்றறியும் ஆவலில் அவர்களுக்கு அருகில் சென்று நின்று கொண்டோம்.
அன்றைய நாட்களில்  எமது ஊரிலிருந்துதான் கடல் பிரயாணம் மேற்கொள்ளப்படும். நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு எழுவைதீவு என படகுப்பிரயாணத்தினால் எமது ஊர் துறைமுகம் நாள் முழுவதும் திருவிழாப்போல கோலாகலமாகக் காட்சியளிக்கும். படகுகளில் வருவோரும் போவோரும் கடைவீதியும் வாகனங்களுமாக துறைமுகம் களைகட்டும். அத்துடன் காரைநகருக்கு போகும் சிறுபடகுகளும் பாதைஎனப்படும் வாகனங்களையும் மக்களையும் ஏற்றிச்செல்லும் இயந்திரப்பாதையும் இயங்குவதால் நாள் முழுவதும் சனக்கூட்டத்திற்கு குறைவில்லை.

அந்தப் பெண் அனலை தீவிலிருந்து எமது ஊர் அரசினர் வைத்தியசாலைக்கு குழந்தை எடுத்து வந்;திருக்கிறார். வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறி அனுப்பி விட்டிருந்தனர்.  என்ன நோய் ஏன் அனுப்பினார்கள் என்ற விபரமெல்லாம் எமக்குத் தெரியாது. வசதியற்ற அந்தப் பெண்  தனியாகத்தான் குழந்தையை எடுத்து வந்திருந்தார். அவளது குடும்பச் சூழ்நிலையும் எமக்குத் தெரியாது. சந்திரமதிபோல   கையில் குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் அப்பெண்ணைப் பார்த்து அனைவரும் பரிதாபப் பட்டனரே ஒழிய பொருளுதவி செய்யக் கூடிய நிiயில் அங்கு குழுமிநின்ற பெண்கள் யாரும் வசதி படைத்தவர்களில்லை. அங்குநின்ற சில புத்திசாலிப் பெண்கள் சிலர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் சுகவீனமுற்ற பிள்ளைபோல் துணியில் சுற்றி மடியில் வைத்து தமது ஊருக்கு கொண்டு போகும்படி புத்தி சொன்னார்கள். சிலரோ அது பிழை கண்டு பிடித்தால் பிரச்சனையாகும் என்று அறிவுரை கூறினர்.
உயிரற்ற குழந்தையைக் கொண்டு போவதானால் படகிற்கு விசேட பணம் செலுத்த அந்தப் பெண்ணிடம் வசதியில்லை. சிறிது நேரத்தில் அப்பெண் துணியில் சுற்றிய சிசுவுடன் துறைமுகம் உள்ள வீதியில் நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் அழுது வீங்கிய முகமும் அவளது விம்மலும் காட்டிக் கொடுத்து விடுமோ என சிலர் பேசிக்கொண்டனர் ;. அந்த உயிரற்ற உடலைச் சுமந்தபடி சென்ற அந்தப் பெண்ணின் முகமும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழகான விழிமூடிய அமைதியான முகமும் பல ஆண்டுகள் கழிந்தும் என் நினைவுத் திரையில் நின்று அகலவில்லை. இந் நிகழ்வு மனக்கண்ணில் நிழலாடும் பொழுது ஜயோ அப்பொழுது அந்த தருணத்தில் எம்மால் உதவக்கூடிய வயதோ வசதியோ இல்லாமல் போய் விட்டதே என மனம் அங்கலாய்க்கும்.  


'பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ' என்ற பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கும் நேரமெல்லாம் என் நெஞ்சில் நிழலாடும் ஈர நினைவுகளில் இதுவும் ஒன்று.

 

 

--- xx --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavallur Kanmani said:

அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன.

இதே பிரச்சனை மீண்டும் வரும் போல தெரிகிறது.

நல்லதொரு கருவை சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.

31 minutes ago, Kavallur Kanmani said:

வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறி அனுப்பி விட்டிருந்தனர்.  என்ன நோய் ஏன் அனுப்பினார்கள் என்ற விபரமெல்லாம் எமக்குத் தெரியாது.

இதே மாதிரி எனது அம்மம்மா இறந்த போதும் எனது ஒன்றுவிட்ட மாமனார் ஒரு வானை பிடித்து ஆள் இனி பிழைக்காது என்று டாக்ரர் வீட்டுக்கு கொண்டு போகட்டாம் என்று சாரதியும் சேர்ந்து ஏற்றி வீட்டை கொண்டுவந்து இறக்க வீட்டுகாரரும் ஆளாளுக்கு ஏனடா வீட்டை கொண்டுவந்தநீ என்று பேச வாங்கெடுத்து ஆளைக்கிடத்தி வான்காரனை அனுப்பிய பின்னர் தான் ஆள் முடிந்துதென்ற விடயம் எல்லோருக்கும் தெரியவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசை அலைக்கழிக்கும் மிகவும் சோகமான நிகழ்வு. என்ன செய்வது அவைதான் "பசுமரத்து ஆணி" யாய் மனசில் தங்கி விடுகிறது.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரிந்த குழந்தையின் உடலோடு யாருமே தெரியாத இடத்தில் அலைந்த அந்தத்தாயின் மனதின் வேதனை ஒரு போதும் தணிந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட ஈழப்பிரியன் சுவி கிருபன் அனைவருக்கும் நன்றிகள்.

 பச்சைப் புள்ளியிட்ட தமிழ் சிறி ரதி ஈழப்பிரியன் கிருபன் ஆகியோருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சில கொடுமையான நிகழ்வுகள் அப்பப்போ கேள்விப்படுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி சுமே. கேள்விப்படும்பொழுது ஏற்படாத வலி நேரில் கண்டு அனுபவிக்கும்பொழுது தீராத வலியாக மனதில் பதிந்துவிடுகிறது. 

Link to comment
Share on other sites

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி.

உடலும் விறைச்சதடி உயிரும் தொலைந்ததடி கண்மணி என் கண்மணி

பச்சைப் புள்ளையடி பிச்சை கிடைக்கவில்லை

பெத்த வயிறதிர பேதை நடந்ததென்ன

 கதையா இது கண்மணி

காயமென்ன மாயமென்ன காவு வந்து கொண்ட பின்னே

கண்ணில் உள்ள நீரும் அழும் காட்சி எந்தன் முன்னே

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை. படகில் திரும்பி போகும் போது அந்த தாயின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 5:06 PM, Kavallur Kanmani said:

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ' என்ற பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கும் நேரமெல்லாம் என் நெஞ்சில் நிழலாடும் ஈர நினைவுகளில் இதுவும் ஒன்று.

 

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடினான் வறுமையும் துன்பமும் இல்லாதொரு உலகம் வரவேண்டும் சகோதரி.
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் எஎன்பது போல் ஏழைகள் வாழ்வை எப்படி சொல்லுவது.மனது வலிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட ஆதிவாசி கோசான் உதயகுமார் அனைவருக்கும் நன்றிகள். உலகில் ஒருபுறம் செல்வமும் செழிப்பும் மறுபுறம் ஏழ்மையும் வறுமையும் . நேரமின்மையால் விரிவாகக் கருத்தெழுதமுடியவில்லை. மன்னிக்கவும். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து விருப்பிட்ட சுமே ரதி ஆகியோருக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.