Jump to content

கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது!


ampanai

Recommended Posts

கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார்.

கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.

தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான உயிரிழப்களும் 34 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/76750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, காலை... வேலைக்குப் போயிருந்த போது... 
எனது  மேலதிகாரி,  என்னை... தனியே.... கூப்பிட்டு....
நான் ஒருவர் தான்... வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம், 
அதிகம் நேரடி தொடர்பு,  வைத்திருப்பவர் என்பதால்....
அவர்களிடம்... கை  குலுக்கி, வரவேற்க வேண்டாம். 
கவனமாக.... இருக்கும் படி சொன்னார்.

உண்மையில்... எனக்கு, அப்பவே...  பயம் தொற்றிக் கொண்டு விட்டது.

டிஸ்கி: இந்தப் பயத்திலேயே.... கொரோனாவுக்கு முதல்...
எனக்கு... பிரஷர் வந்து, செத்துப் போவன் போல கிடக்கு.  🔨

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.