Jump to content

மனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை


Recommended Posts

ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள்.
2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்.
4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள்.
7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.
8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும்.
10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567796

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ampanai said:

ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள்.
2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்.
4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள்.
7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.
8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும்.
10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567796

காந்தி தேசம்..... செய்யும்,  பொய்  பித்தலாட்டுத்துக்கு... நல்ல உதாரணம்.
அமெரிக்க ஜனாதிபதி...  இந்தியா, வந்த பின்...
நடந்த.... முஸ்லீம் மக்கள் மீதான, டெல்லி  தாக்குதல்களுக்கு.....  
இது.... ஒரு முன் நோட்ட, குறும்  படம் மட்டுமே.

நமக்கென்ன.... 
நாடு இருக்கா... நகரம் இருக்கா...  இல்லையே.....
எம்மை... கெடுத்தவனை....
ஊர்ந்து, கண் காணிப்போம். 🔨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்.

டெல்லியில் வீழ்ந்த கொலைகள் ஒன்றே போதும் இந்திய மனித உரிமையை உலகம் தெரிந்து கொள்ள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்.

டெல்லியில் வீழ்ந்த கொலைகள் ஒன்றே போதும் இந்திய மனித உரிமையை உலகம் தெரிந்து கொள்ள.

ஈழப்பிரியன்...
அமெரிக்க ஜனாதிபதி போன... கையுடன், 
திட்டமிட்டு   ஆரம்பிக்கப் பட்ட, மதக் கலவரம் என்று சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.