Jump to content

"சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்­க­ வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது" - கஜேந்­திரகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்­க­ வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது" - கஜேந்­திரகுமார்

புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு  வந்து மூன்று மாத ­காலப் பகு­தி­யி­லேயே சர்­வ­தேச நாடுகள் அதி­ருப்தி தெரி­விக்கும் வகையில் நடந்து கொண்­டுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் போக்கில் சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிரயோ­கிக்க வேண்­டிய ஒரு தேவை  தற்­போது அதி­க­ரித்­துள்­ளது. 

ஆகவே அந்த அழுத்­தங்களை எந்­தெந்த இடங்­களில் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி யின்  தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார். 

ஜெனி­வா­வுக்கு வருகை தந்­துள்ள கஜேந்­திரகுமார் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவற்றைக் குறிப்­பிட்டார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

sadasda.jpg

கேள்வி: மனித உரிமைகள் பேர­வையின்  பிரே­ர­ணைக்­கான இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து இலங்கை அர­சா­னது வில­கி­யுள்­ளது. இதனை உங்கள் கட்சி எவ்­வாறு பார்க்­கி­றது?

பதில்: ஏற்­க­னவே இலங்கை கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தாலும் கூட  அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் மூடி­ ம­றைத்­தது.  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை என சிங்­கள மக்கள் மத்­தியில்  உறு­தி­யாகக் கூறி­ வந்­தனர்.  ஆனால் இன்று கோத்த­பாய அர­சாங்கம்  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கு­வ­தாக வெளிப்­ப­டை­யாக அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு கடந்த‍ ஐந்து வரு­டங்­க­ளாக எவ்­வித பிர­யோ­ச­னமும் கிடைக்­க­வில்லை. எனவே இலங்கை அர­சாங்­கத்தின் இந்த அறி­வித்தல் இதனை பலப்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்கும்.

எனவே உறுப்பு நாடுகள்  தொடர்ந்தும் தமி­ழர்­க­ளு­டைய பொறுப்புக் கூறலை ஐ.நா.வில் முடக்கி வைத்­தி­ருப்­பது நியா­யப்­ப­டுத்த முடி­யாத ஒரு நிலை­மையை இலங்கை அர­சாங்­கமே எமக்கு ஏற்­ப­டுத்திக்  கொடுத்­துள்­ளது. இதனை ஒரு சாத­க­மான ஒரு விட­ய­மா­கத்­தான்  நான் பார்க்­கின்றேன்.

கேள்வி: இலங்கை  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­ய­தற்கு பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடுகள் தமது அதிருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன. அந்த நிலையில் அர­சாங்கம் செய்­ததைச் சரி என்ற நிலையில் நீங்கள் கூறு­கின்­றீர்கள். இதில் எந்தளவு நியாயம் இருக்­கி­றது?

பதில் :  அர­சாங்கம் செய்­ததை சரி என்று நான் கூற வர­வில்லை. அர­சாங்­கத்தின் பக்­க­மி­ருந்து பார்க்­கின்ற போது அவர்­க­ளுக்கு அது சரி­யாக இருக்­கலாம். எங்­க­ளு­டைய பக்­கத்­தி­லி­ருந்து பார்க்­கின்ற போது  நிறை­வேற்­றப்­பட்ட ஒரு தீர்­மானம்  கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக  எவ்­வித முன்­னேற்­றமும் காணப்­ப­டாத நிலை­யி­லேயே இருந்தது. ஆனால் காணாமல் ஆக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­தையும்  இழப்­பீட்டு அலு­வ­ல­கத்­தையும்  காட்டி ஏதோ முன்­னேற்றம் இடம்­பெற்­றுள்­ள­தாக  காட்­டப்­பட்டு பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளது குரல்கள் முடக்­கப்­பட்­டன. இந்த இரண்­டையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் முற்­றாக மறுக்­கின்­றனர். இவ்­வா­றான    நிலையில் இலங்கை அர­சாங்­கமே இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக  கூறியுள்ளது. அவர்கள் முன்­னேற்றம் இடம்­பெற்­றுள்­ள­தாக  எந்த விட­யத்தைக் கூறி  தமிழ் மக்­களின் குரல்­களை  முடக்­கி­னார்­களோ    அதை வைத்து இனி  தமிழ் மக்­களின் குரல்­களை  முடக்க முடி­யாது என்­று தான் நாம் கூறு­கின்றோம்.

கேள்வி: அவ்­வாறு தமிழ் மக்­களின் குரல்­களை முடக்க முடி­யாது என்றால் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்ன? அதற்கு ஏதா­வது  யோசனை  உங்­க­ளிடம் உள்­ளதா?  

பதில்:  பொது­வா­கவே  சர்­வ­தேச நாடுகள் இலங்கை மீது தற்­போது அதி­ருப்­தியை தெரி­வித்து வரு­கின்­றன. முன்­னைய ரணில் – மைத்­திரி அர­சாங்­க­மா­னது  சர்­வ­தேச நாடு­க­ளுடன்  ஒத்­து­ப்போ­கின்ற ஓர் அர­சாக காணப்­பட்­டது. ஆனால்  இந்தப் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு  வந்து மூன்று மாத ­காலப் பகு­தி­யி­லேயே சர்­வ­தேச நாடுகள் அதி­ருப்தி தெரி­விக்கும் வகையில் நடந்து கொண்­டுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் போக்கில் சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்­டிய ஒரு தேவை  தற்­போது அதி­க­ரித்­துள்­ளது. 

ஆகவே அந்த அழுத்­தங்களை எந்­தெந்த இடங்­களில் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். 

குற்­ற­வியல் தீர்ப்­பா­ய­மொன்றை உரு­வாக்கி அதன் ஊடாக அழுத்தம் பிர­யோ­கிப்­பது  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறலை அடை யக் கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும். இதைத்தான் நாம் 2012 ஆம் ஆண்டு முதல் கூறி­ வ­ரு­கிறோம். 

இதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு பாரிய பொறுப்­புள்­ளது கடந்த காலங்­களில் இவர்­க­ளது அச­மந்­தப்­ போக்­கி­னால்தான் கடந்த 8 வரு­டங்­க­ளாக இந்த மனித உரி­மைகள் ­பே­ர­வையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான தீர்வு இழு­பறி நிலையில் உள்­ளது. இலங்­கையில் அடுத்து வரப்­போ­கின்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொறுப்பு வாய்ந்த பிர­தி­நி­திகள்  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கேள்வி: சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றுக்கு இலங்கை விவ­காரம் கொண்டு செல்­லப்­பட வேண்டும் என  கடந்த பல வரு­ட­ கா­ல­மாக கூறி­ வ­ரு­கின்­றீர்கள். இந்­நி­லையில் ஒரு­சில தரப்­புகள் அவ்­வாறு கொண்டு செல்ல முடி­யாது எனக் கூறி வரு­கின்­றன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மாத்­தி­ரமே இவ்­வாறு கொண்டு செல்ல முடி­யாது எனக் கூறி வரு­கின்­றது. காரணம் இலங்கை ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை.   இவ்­வாறு ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­டாத தரப்­புகள் சர்­வதேச நீதி­மன்­றுக்குச் செல்­வ­தாயின்  பாது­காப்பு சபை ஊடா­கத்தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் பாது­காப்பு சபை யில் மஹிந்த ராஜ­க் ஷ­வுக்கு மிகவும் விசு­வா­ச­மான  சீனா போன்ற நாடுகள் அங்கம் வகிக்­கின்­ற­மையால் அவர்கள் தங்­க­ளு­டைய வீட்டோ போன்ற அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி குற்­ற­வியல் நீது­மன்­றுக்கு இலங்­கையை கொண்டு செல்­வ­தற்­கான நடை­மு­றையை தோற்­க­டிப்­பார்கள் என்­ப­துதான் அவர்­க­ளு­டைய கருத்­தா­க­வுள்­ளது.  

இவர்­க­ளு­டைய  இந்தக் கருத்­தா­னது ஒன்று மக்­க­ளுக்கு உண்­மையை அவர்கள் கூற விரும்­ப­வில்லை அல்­லது  குற்­ற­வியல் நீதி­மன்றம் சம்­பந்­த­மான அண்­மைக்­கால நடை­மு­றை கள் குறித்த போதிய அறி­வின்மை என்­பதைக் காட்­டு­கின்­றது. உதா­ர­ண­மாக மியன்­மாரை எடுத்­து­க்கொண்டால் மியன்மார் ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை.  அதே­நேரம் சீனா மியன்­மா­ருக்கு மிகவும் நெருங்­கிய நாடு. உல­கமே மியன்­மா­ருக்கு எதி­ரா­ன­போது சீனா அவர்கள் பக்கம் நின்­றது. இது தெரிந்ததும் குற்­ற­வியல் நீதி­மன்றம் அண்­மைக்­கா­ல­மாக  குற்றம் நடை­பெ­று­கின்ற நாடு­களை குற்­ற­வியல் நீதி­மன்­றுக்குக் கொண்­டு­வந்து விசா­ரணை நடத்­து­கின்­றது. ஆகவே அவர்கள் எப்­படி விசா­ரிக்­கின்­றார்கள் என்றால், மியன்­மாரில் குற்றம் அதி­க­ரிக்­கின்­ற­போது மக்கள் தஞ்சம் கேட்டு பங்­களாதேஷ் போன்ற நாடு­களை நோக்­கி நக­ரலாம். அதன்­போது பங்­க­ளாதேஷ் போன்ற நாடுகள் குற்­ற­வியல் நீதி­மன்றில் அங்கம் வகிக்­கின்­ற­மையால் அதனைக் காரணம் காட்டி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் இலங்கை விவ­கா­ரமும் சாத்­தி­ய­மாகும். ஆகவே ஈழ­த்த­மி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு மனித உரிமைகள் பேர­வையில் மாத்தி ரமே தீர்வுள்ளது எனக் கூறுவது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமென்றே  கூற வேண்டும். 

கேள்வி: தற்போது அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகிய பின்னர் தாங்கள் உள்ளக கட்டமைப்பின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அது சாத்தியப்படுமா?

பதில்  பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அப்படியொரு முயற்சிக்கு ஒத்துழைக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய வாய்மொழி அறிக்கையில் கூட தெளிவாகத்  தெரிவித்திருந்தார் ,

அப்படிப்பட்ட நடைமுறையை முற்றுமுழுதாக எதிர்த்திருந்தார். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகத்தான் அமைந்திருந்தது. ஆகவே இது சாத்தியப்படாது. 

ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்

 

https://www.virakesari.lk/article/76794

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.