Jump to content

இதயத்தைப் பாதுகாத்து கொள்ள


Recommended Posts

மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பாகும். அதிலும், நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் இதயமானது சாதாரணமானவர்களின் இதயத்தைவிடவும் மும்மடங்கு பலவீனமானதாகக் காணப்படும். அதன் காரணத்தினால் இதயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம்.  

அதேநேரம், இதயப் பாதிப்புகளானது வயதானவர்களுக்கு மாத்திரமல்லாமல் பிறந்துள்ளவர்களுக்கும் வரலாம். சிறுவயதிலும் வரலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் ஏற்படும் இதய நோய்கள் குறித்து தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

இவ்வாறு இதயப் பாதிப்புக்கள் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பின்மை, நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை, தொடர் மனச்சிதைவு நோய், தொடர் மருத்துவப் புறக்கணிப்பு என்பன காரணங்களாக அமையலாம். இந்த இதயப் பாதிப்புகளானது ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படக்கூடியதாக இருந்து வந்த போதிலும் கடந்த சில வருடங்களாக இருபது வயதினரைக்கூட அதிகம் தாக்கக்கூடியதாக விளங்குகின்றது.  

குறிப்பாக, இதயத் தமனி நோய்கள் நீரிழிவு நோயாளர்களை அதிகமாகத் தாக்கக்கூடியனவாக உள்ளன. அதனால் உயரத்துக்கு ஏற்பட உடல் எடையையும், குருதியில் குளுக்கோஸின் அளவையும், இதய குருதி நாளங்களில் கல்சியம் படிவதையும் குறைத்து உரிய அளவில் பேணிக் கொள்ள வேண்டும். அத்தோடு உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரித்து விடாமலும் உடலில் உற்பத்தியாகும் நல்ல கொழுப்பு (HDL) உரிய மட்டத்தில் பேணிக்கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.  

 

அத்தோடு உணவு, உள்ளுணர்வு மற்றும் உடல் உழைப்பு என்பவற்றை உரிய முறையில் பேணிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் குளுக்கோஸ் மட்டத்தை உயர்த்திடும் மா சத்து உணவு வகைகளை நாளொன்றுக்கு 100கிராமுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது உணவு முறையால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவடைந்துவிடும். உடல் பருமனும் கட்டுப்படுத்தப்பட்டு விடும். அவற்றின் ஊடாக இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்பட்டுவிடும்.  

மேலும் தொடர் மன உளைச்சல், மன இறுக்கம், மனச்சிதைவு போன்றவற்றுக்கு முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் இதயப் பாதிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க முடியும். ஹோர்மோன் வித்தியாசங்களால் ஏற்படும் இதயப் பாதுகாப்பும் குறைவடையும். அத்தோடு உடல் உழைப்பு குறைந்தால், உடலின் அனைத்து தசைகளும் பலவீனமடையும். இதய தசைகளுக்கும் அதன் தமனிகளுக்கும் தேவைப்படும் ஆரோக்கிய சூழல் குறைவடையும். இவற்றின் விளைவாக இதய நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரிக்கும்.  

ஆகவே முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, இதயம் தொடர்பான பெரும்பாலான நோய்களுக்கு பெரிதும் பங்களிக்கும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது நல்லது. அதன் மூலம் இதய நோய்கள் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவதோடு அடுத்த தலைமுறையினரையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 

https://www.thinakaran.lk/2020/02/29/சுகாதாரம்/49004/இதயத்தைப்-பாதுகாத்து-கொள்ள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.