Jump to content

ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு  நன்றி.

“ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . 

தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும்பிலும் இருந்து தெரிவானவர்களின் சமத்துவத்தையும் ஜனநாயக ரீதியான தீர்மானங்களையும் அடியொற்றி செயல்படவில்லை.

தமிழரசுக் கட்ச்சியின் வரலாறு நமக்கு நிறைய கற்பிக்கிறது. நாம்தான் கற்றுக்கொள்வதில்லை. கொழும்பு தமிழர்கள் கட்சி அரசியல் பணிக்கு மிக மிக அவசியமானவர்கள் ஆனால் கட்சி வடகிழக்கு மாகாண மக்கள் தலைமையின்கீழ் மட்டுமே  இயங்க வேண்டும். இதுதான் சத்தியாகைரகத்தின் தோல்வியின் பின்னான வரலாறும் அரை நூற்றாண்டின்பின்னர் ஆயுதப் போராட்டத்தின் பின்னைய வரலாறும் உரத்துச் சொல்கிறது.

 1949 டிசம்பரில் ஆரம்பிக்கபட தமிழரசுக்கட்ச்சி   1961 வரைக்கும் ஜனநாயக ரீதியில் ஐக்கிய வடமாகாண கிழக்கு மாகாண மக்களின் சமத்துவமான தலைமையின்கீழ் இயங்கியது. திருச்செல்வம் போன்ற கொழும்பு தலைவர்கள் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு தொழிற்சங்கம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாகவே செயல்பட்டனர். சத்தியாக் கிரகத்தின் தோல்விக்குப் பிறகு  திருச்செல்வம் செல்வநாயகம் ஐயாவை முடக்கி வைத்துக்கொண்டு கட்சி தலமையை இயக்கினார். தமிழரின் படு தோல்விகளுக்கு ஒருகாலத்தில் கட்ச்சிக்கு கட்டுப்பட்டு சிறப்பாக பணியாற்றிய திருச்செல்வத்தின் தலைமை ஆசையே காலானது.

அதேபோல வடகிழக்கு மாகாணத் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறந்த கட்ச்சியணியாளராக செயல்பட்டிருக்கக்கூடிய  கொழும்பு தமிழர் நீலன் திருச்செல்வமும் வடகிழக்கு மாகாணத் தலைமையின் உறுதியின்மையால் தலமைக்கு ஆசைபட்டு யு.என்.பியின் நோக்கங்களுக்கு இசைந்து  தோல்விகளுக்கு வழிவகுத்தார்.   

போருக்குப்பின்னான விரக்தியும்  குறிப்பாக சம்பந்தர் ஐயா போன்ற வடகிழக்கு தலைவர்களின் முதுமை விரக்தி என்பவை மீண்டும் வடகிழக்கு தலைமையை பலகீனப்படுத்தியுள்ளது. இது 1960பதுகளில் சத்தியாக் கிரக தோல்வியின்பின்னர் வடகிழக்குத் தலைமை செயலிழந்த சூழலை ஒத்த நிலமையாகும். இதுதான் ஒழுங்காக கட்ச்சிப் பணி ஆற்றிய திருச்செல்வம் போன்ற கொழும்புத்தமிழர்கள் கட்ச்சியைக் கைப்பற்றிய காலக்கட்டம். கொழும்பு தமிழ் தலைமை  தமிழர் வல்லமைகளை ஐக்கியதேசிய கட்ச்சிக்கு அடைவு வைத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைச்சு அதிகாரங்களை அனுபவித்த காலம்.  

1960களில் ஏற்பட்ட சத்தியாக்கிரக தோல்வி போலவே சரியாக அரைநூற்றாண்டின் பின்னர் ஏற்பட்ட  ஆயுதப் போராட்டத்தின் பெரும் தோல்வியும் வடகிழக்கு ஈழ தமிழர்களின் போராட்டத் தலைமையை விரக்தியும் துரோகங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தினுக்குள் தள்ளிவிட்டது. 

திருச்செல்வம் நீலந்திருச்செல்வம்போலவே கட்சியின் பணிகளுக்கும் வடகிழக்கு தலைமைக்கு கட்டுப்பட்டு பொறுப்புகளை நிர்வகிப்பதற்க்கும் கொழும்புத் தமிழரான சுமந்திரன் மிகவும் வல்லமையுள்ளவர்.

திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும்   கட்சியின் முடிவுகளை   ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு  கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.  

 

 

Link to comment
Share on other sites

தவறுநிகழ்ந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும்.

.

திருச்செல்வங்கள் விட்ட தவறுகளை தொடரமால் சுமந்திரன் வடகிழக்கின் தலமைப் பாத்திரத்தை வகிப்பவர்கள் கருத்தை விவாதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த விடயமாயினும்   கட்சியின் முடிவுகளை   ஏற்று கட்ச்சிக்குக் கட்டுபட்டு  கழப் பணியாற்றவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.