Jump to content

விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு வடமராட்சி மாலுசந்திப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்தது.அந்தக் கலந்துரையாடலில் அப்போதும் எம்முடன் இணைந்திருந்த கஜேந்திரகுமார், பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.எனினும் மறுநாள் கஜேந்திரனுக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் வேண்டும் என கோரினார். இந்த ஆசன பங்கீட்டில் அவர்களுக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் வெளியேறினார். மற்றபடி அவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்கவில்லை. அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய கஜேந்திரகுமாரினால் ஒரு தடவை கூட நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாமல் இருக்கின்றது.

அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமையால் வெளியேறினார். தேர்தல் முடிந்தவுடன் நாம் தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவது தொடர்பாக கூடி பரிசீலனை செய்த்தோம். அப்போது எமது கட்சியில் போட்டியிட்ட அருந்தவபாலன் 14 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றிருந்தார். எனினும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மிகவும் குறைவான விருப்பு வாக்குகளே கிடைத்தது. இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஆசனம் வழங்குவது. இப்படி இவர்கள் எல்லோரும் சலுகைகளுக்காகக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்கள்.

கருணா, பிள்ளையான் போன்றவர்கள் முஸ்லிம் விரோத அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். முஸ்லிம்களுடன் சில பிரச்சினைகள் உள்ளனதான். அவற்றை வைத்து முஸ்லிம் விரோத அரசியலை அவர்கள் இருவரும் செய்கின்றார்கள். இது மிக ஆபத்தானது.இதைத் தொடர்ந்தால் வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. முஸ்லிம்களை எம்மிலிருந்து அந்நியப்படுத்துவதற்காக இவர்கள் இயங்குகின்றார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது. கிழக்கு மக்களுக்கு நாம் இது குறித்து விளக்கமளிப்போம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் விரோத அரசியல் செய்யப்பட்டு வருகின்றது. இது ஆபத்தானது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம்.கிழக்கில் அரசியல் செய்யும் கருணா, ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றார். பிள்ளையான் ஒன்றுக்குத் தலைமை தாங்குகின்றார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என ஒன்று இயங்குகின்றது. இவையெல்லாம் எமக்கு எதிரானவை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியில் இருக்கும்போது சுரேஷ் என்னை கடுமையாக விமர்சித்தார். இதனை ஊடகங்கள், விக்னேஸ்வரன் என்னுடன் ஓர் நிகழ்வில் இருந்தபோது கேட்டனர்.அதற்கு அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரனுக்கு கல்வி அமைச்சு பதவி வழங்கவில்லை என்ற கோபத்திலேயே கடுமையான விமர்சனங்களை வெளியிடுகின்றார் என கூறியிருந்தார். அது ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-நன்றி-இல்லா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

ஆசன பங்கீட்டில் அவர்களுக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் வெளியேறினார். மற்றபடி அவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்கவில்லை

D428-B1-BA-BB3-F-4-AE3-9-F43-9-E1-E05482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

தமிழனுக்கு தீர்வை கொண்டுவருவம் என்று சொல்லி தமிழர்கள் மூலம்  தேர்தலில் வென்று அதன்பின் சிங்களவர்களை போர் குற்றத்தில் இருந்து விடுவிக்க நாடு நாடாய் பறந்து  அந்த நாட்டு முக்கிய அதிகாரிகளை சந்தித்து சிங்களவருக்கு  எதிரான போர்க்குற்ற விசாரணையில் இருந்து விடுவித்து சிங்களவருக்கு விசுவாசத்தை காண்பித்த உங்களை விட அவர்கள் எவ்வளவோ மேல் தமிழரசு கட்சி என்பதை விட நாய்கழரசு கட்சி என்பதே பொருத்தமானது ஏனென்றால் நாய்கள் ஒருபோதும் தங்கள் இனத்துக்கு விசுவாசமாய் இருப்பதில்லை .

Link to comment
Share on other sites

சுமந்திரன், உங்களின் கொள்கை என்ன?  கடந்த 5 வருடங்களில் தமிழ் மக்களுக்கு செய்தவை எவை எப பட்டியல் இட முடியுமா?

Link to comment
Share on other sites

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் சுமந்திரன் போன்ற கொழும்புத் தமிழர்களுக்கிடையில் ஆயிரம்  உட்பிரச்சினைகள் இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் நாமேன் மூக்கை நுழைப்பான்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்

அவர்கள் செய்தது இருக்கட்டும்.

சரி கடந்த நல்லாட்சியில் நீங்கள் என்னென்ன மக்களுக்காக செய்துள்ளீர்கள்.

அவைகளை ஒருக்கா பட்டியலிடுங்கோ பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

தாங்கள் தமிழினத்திற்கே நன்றியில்லாதவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.