Jump to content

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன்

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம்  இல்லை -ஈ.சரவணபவன்

சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

சிறு வலியேனும் அனுபவிக்காத சுரேன் ராகவன், விக்னேஸ்வரன் போன்றோர்கள் தான் களத்தில் சந்தர்ப்பத்தை பாவிக்கின்றனர்.எமக்கு சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக வருகை தரும் வரை அவரை எமக்கு யாரென்றே தெரியாது. யாழ்ப்பாண மக்களுக்கே தெரியாது. ஆளுநராக வந்து அதிகமாக கதைத்திருக்கின்றார். செயல் வடிவமாக எதையும் செய்யவில்லை.வடக்கு மாகாணசபையின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே கூட்டமைப்பு அழைத்து வந்தது. இப்போது சுரேன் ராகவனை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் வெளியாகின்றது.

இப்போது களத்தில் மீண்டும் வந்து சந்தர்ப்பத்தை பாவிக்கின்றார்கள் ஒரு வலியும் அறியாதவர்கள். ராகவனிற்கு இங்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அதேபோன்று தான் விக்னேஸ்வரனிற்கும்.விக்னேஸ்வரனை கொண்டு வந்து பட்டது போதும் என்று நினைக்கின்றார்கள். ராகவன் விடயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.வடக்கு மாகாணசபையின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே கூட்டமைப்பு அழைத்து வந்தது. இப்போது சுரேன் ராகவனை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் வெளியாகின்றது.

காலத்திற்கு காலம் வடக்கு மாகாணத்திற்கு இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து அழைத்த வரப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு அறிமுகம் செய்கின்றது. உண்மையில் எதற்காக இவ்வாறு செய்கின்றீர்கள். இங்கு ஆளுமை உள்ளவர்கள் இல்லை என்று நினைக்கின்றீர்களா?சி.வி விக்னேஸ்வரனை கொண்டு வந்தபோது நான் எதிர்த்தேன். எமது பத்திரிகையும் எதிர்த்தது. கனடாவில் இடம்பெற்ற கூட்டத்தில் கேட்டபோதும் தமிழரசு கட்சியின் தலைவரே பொருத்தமானவர் எனவும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

சுரேன் ராகவன்முதலில் சுமந்திரனை சந்தித்துள்ளார். அவர் விட்ட முதல் பிழையானது சுமந்திரனிற்கு இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியாது.இவ்விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவரிடம் அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் பேசியிருக்க வேண்டும். அந்த விடயத்தில் அவர் தவறிவிட்டார் என கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் முயற்சித்துள்ளமை குறித்து வெளியாகிய செய்திகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம்சாட்டியுள்ளார். (15)
 

http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரனும்-ஓர்-உறுப்பி/

கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை -சுரேன் ராகவன்

கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை -சுரேன் ராகவன்

நாட்டின் மிகவலுவான தமிழ் அரசியல் கட்சி என்பதால், புதிய தமிழ் அரசியல் பிரிவுகளும், கூட்டணிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிஞ்ச முடியாது. சில கட்சி உறுப்பினர்களின் சித்தாந்தங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போகாததால் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டன.போர், இந்திய இராணுவத்தின் தலையீடு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறையவே கடந்து வந்திருக்கிறது. தற்போது, அதன் ஒரே இலக்காக இருப்பது ஒற்றுமையே ஆகும் என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் பங்கு பற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் அரசியலின் நிலைமை குறித்து கவனிப்பதற்காக அந்த கூட்டங்களில் நான் பங்குபற்றினேன்.இதையடுத்தே, நான் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் அது முற்றிலும் பொய். கூட்டமைப்பு என்னை அணுகினால், அது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்ததாகவே இருக்கும். ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே நோக்கம் என மேலும் தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பில்-இணைந்து-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்போது களத்தில் மீண்டும் வந்து சந்தர்ப்பத்தை பாவிக்கின்றார்கள் ஒரு வலியும் அறியாதவர்கள்.

D2-CD7-B0-C-D6-AD-421-F-AFEC-E6-B192-FF8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை .

YeDgv7.gif

உங்கட பொவர் இவ்வளவுதானா.. சுமந்திரன் ஒபீசர்..? ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையாட்டி பொம்மையளை தேடுகினம் போல!

Link to comment
Share on other sites

"சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்."

அந்த பல பேர் யார்? என்ற பட்டியலை வெளியிட்டால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

அத்துடன், ஒரு சனநாயக கட்சி  என்ற முறையில் உங்கள் கூட்டத்திற்குள் பத்திரிகையாளர்களை வரவழைக்கலாம். அதுவும் உதவும். உன்னால் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு.

மாறாக, மற்றையவர்களை  குற்றம் சாட்டும்போழுது கூட்டமைப்பின் மீது உள்ள சந்தேகம் அதிகரிக்கவே செய்யும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.