Jump to content

விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்க துணிச்சலில்லாமல் எனது கையில் திணித்தார்கள் சீ.வீ.கே வெளியிடும் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனிற்கு எதிராக பேச பயந்தார்கள், அவரை எதிர்க்க துணிந்தார்கள் என கேசவன் சயந்தன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்க துணிச்சலில்லாமல் எனது கையில் திணித்தார்கள். மாகாணசபையிலிருந்தவர்களே அவரை எதிர்க்க பயந்தார்கள். இது மாதிரி அவர்கள் பேசினால், இன்னும் பல விடயங்களை பேச வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

நேற்று முன்தினம் (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தமிழ் அரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்து அடிப்படையில், சில கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்கிறேன். விமர்சனங்கள் எந்தவொரு அரசியல் கட்சியாலும் எந்தவொரு அரசியல்வாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.

வள்ளுவர் சொன்னதுபோல செவி கைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கேள்தங்கும் உலகு, ஆகவே விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அவை சுய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை, அது சுய நடவடிக்கைக்கும் உட்படுத்த வேண்டியவை, அவை முன்னேற்றங்களுக்கான திட்டமிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்ற அடிப்படையிலே இரண்டு மூன்று விடயங்களை நான்தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

அநேகமான நேற்றைய பேச்சாளர்கள் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கு வருடங்களாக எதுவும் சாதிக்கவில்லை என்ற பெரும்பாலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதற்கு போதுமான விளக்கங்களை சுமந்திரன் முன்வைத்தார்கள். நாங்கள் ஒரு இன விடுதலைக்கான, இனத்தினுடைய தன்னாட்சிக்கான, ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள் மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள். அந்த முயற்சியின் அடிப்படையில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த அரசியல் திருத்த முயற்சிகள் அதனுடைய அழுத்தங்களை நாங்கள் எங்களுடைய நாடாளுமன்ற குழு முன்னெடுத்து வந்த காரணங்களால் அந்த இறுதி வடிவம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் 2018 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சதி நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.

அவ்வாறு தடுக்கப்படாமல் போயிருந்தால் அந்த முயற்சியினுடைய முன்னெடுப்பிலே நாங்கள் ஒரு முன்னேற்றமான நிலையை எய்தியிருப்போம். அந்த அறிக்கையிலே பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த மிக முக்கியமாக மத்திய மற்றும் மாகாண தொடர்புகள் சம்பந்தமான குழுவிற்கு எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தான் தலைமை தாங்கினார்கள். அந்த அறிக்கையிலேயே அதிகாரப்பகிர்வு சம்பந்தமான பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதிகமான அதிகப் பகிர்வு என்று நான் முழுமையாக சொல்லவில்லை. அந்தத் தீர்வுதான் எங்களுடைய இறுதி என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் ஒருபடி முன்னேற்றத்திற்கான வழியாக அமைகின்றது என்று சொல்ல வருகிறேன்.

அந்த அதிகாரப் பகிர்வினுடைய செயற்பாடு சதியின் மூலம் தடுக்கப்பட்டது.

எங்களுடைய முயற்சி தொடர்ந்துதான் இருக்கிறது. அந்த ஆவணம் அப்படியேதான் இருக்கிறது. அது இன்னும் வேறு வடிவத்தில் முன்னேற்றகரமாக முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தவேளையிலேயே இனம் சார்ந்து மிகத் தெளிவான ஒரு செயற்பாட்டை, நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் மிகப் பணிவோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆனால் இரண்டு விடயங்கள் அங்கே குறிப்பிடப்பட்டது. ஒன்று கம்பவாரி ஜெயராஜ்  சொன்னார்கள். இளைஞர்களுக்கான வாய்ப்பு வசதி, அவற்றை வழங்கக்கூடிய சந்தர்ப்பம். அவர்களை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு இது பற்றி சொன்னார்கள்.

ஆனால் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். அது ஒரு படிமுறையான வழிவர வேண்டும். எடுத்த எடுப்பிலே ஹெலிகொப்டர் பாய்ச்சல் மாதிரி இல்லாமல் ஒரு கட்சியினுடைய அடிப்படையிலே இருந்து அந்த கட்சியினுடைய அல்லது அரசியலினுடைய அடிப்படைகுறிக்கோள் இயங்கு நிலைக்கு வந்து கட்சிப்பதவிகளை பொறுப்புக்களை ஏற்று அரசியல் பொறுப்புக்களை ஏற்கக்கூடிய வழிமுறைகளிலே எங்களுடைய கட்சி ஏற்கனவே ஈடுபட்டு வந்திருக்கிறது.

இன்றைக்கு உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கக்கூடிய தவிசாளர்களிலே கிட்டத்தட்ட ஒன்பது பேர் இளைஞர்கள். அவர்கள் வளர வேண்டியவர்கள். அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் ஒத்துமொத்தமாக ஒதுங்கி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அரசியலும் சரி, பொது நிர்வாகத்திலும் சரி, தனி நிர்வாகத்திலும் சரி தனியார் துறையாக இருந்தாலும் சரி அவ்வாறான செயல்முறை சாத்தியமற்றது.

கோப்பிரேட் முகாமைத்துவம் என்று சொல்லக்கூடியமேல் நாடுகளில் இருக்கக்கூடிய முகாமைத்துவ தத்ததுவத்தின் படி அந்த முகாமைத்துவ பணிப்பாளர் சபைகளில் அடிப்படையில் சுழற்சி முறை மாற்றங்கள் நிகழும்.

உதாரணமாக 30 பேர் இருந்தால் 10 பேர் போவார்கள். 10 பேர் வருவார்கள். தொடர் அனுபவங்கள் தொடர்ச்சியாக இருக்கும். அந்த வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்கும். அவ்வாறுதான் ஒரு நிறுவனம் திறமையாக செயல்பட முடியும். அதைவிட்டு முழுமையாக புதியவர்களோ அல்லது முழுமையாக தொடர்ந்து இருப்பவர்களோ தொடர்ந்து திறம்பட செயற்பட முடியாது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு அனுபவம் மிக்க இந்த நாட்டின் அரசாங்கத்தைச் சந்தித்தவர்கள், பேசியவர்கள், அவர்களோடு இணைந்த செயற்பாட்டைப் பார்த்தவர்கள் இன்றைக்கு அவர்களுடைய அனுபவத்தோடு அடுத்த பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

நேற்றைய தினம் என்னுடைய நண்பன் சூரியசேகரத்தை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை, பல காலமாக முகாமைத்துவ கழகத்திலே எம்மோடு செயற்பட்டவர். அவர் இரண்டு விடயம் சொன்னார்.

ஒன்று அவர் முன்னாலே இருந்த சுரேன் ராகவனைப் பார்த்து, அவரை அடுத்த முறையோ அல்லது இந்தமுறையே எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அவரை நாங்கள் உயர்பதவிக்கு உள்வாங்க வேண்டும் என்றார்.

அரசியல் என்பது அதற்கான அனுபவம் வேண்டும். இன்றைக்கு ஏன் சம்பந்தன் ஐயாவைப் பின்பற்றுகின்றோம். அவரிடமிருக்கின்ற ஆற்றல், அறிவு, அனுபவம், ஏற்புடைமை ஆகும்.

மேலும் இன்னொருவரையும் இவர் தன்னுடைய வசதிக்கு ஏற்றமாதிரி கொண்டு வர வேண்டும் என்றார். நான் பல இடங்களிலும் நேற்றைய தினம் எனது நண்பர்களிடம் சொன்னேன் இவ்வாறு ஹெலிக்கொப்டர் பாய்ச்சல்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு அரசியல் தெரியாது. நிர்வாகமும் தெரியாது.இன்னும் பல விக்னேஸ்வரன்களை உருவாக்குவோம்.

விக்னேஸ்வரன் நல்ல மனிதர். சுமந்திரனின் ஆசிரியர். அது வேறு. அவரை நான் ஒரு ஆன்மீகவாதியாகப் பார்க்கிறேன். ஏன் அவர் தோற்றார். பல பேர் பல மாதிரி விமர்சிக்கிறார்கள். அரசியல் அணுகுமுறை அவரிடம் இருக்கவில்லை. அதுதான் தோல்விக்கு காரணம். நிர்வாக அனுபவமும் அவரிடம் இருக்கவில்லை. ஒரு கட்சிக்குள் இருந்து, வளர்ந்தாலே ஒரு கட்சிக்காரனுக்கு அந்த அனுபவம் இருந்திருக்கும். அவ்வாறு இல்லாத ஒருவரை ஏதோஒரு காரணங்களுக்காக நாங்கள் கொண்டு வந்தோம். அது தவறாக முடிந்திருக்கிறது.

அதிலே ஒரு விடயம் நேற்று பேசப்பட்டது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. ஜெயராஜ் பேசும்போது சொன்னார் சம்பந்தர் ஐயா, அவரை உடனடியாக 2015 ஆம்ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலே வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள் என்று எங்களுக்கு எதிராக பேசின பொழுதே அவரை நீக்கியிருக்கலாம். அதுதான் பொறுத்தமானது தலைமைத்துவதற்கு அழகு என்று சொன்னார்.

அதைத் தொடர்ந்து பேசிய சயந்தன் சொன்னார், அவருக்கு எதிராக பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள். அவரை எதிர்க்க துணிவில்லை என்றார்.எனக்கு இது விளங்கவில்லை. உண்மையாக சொன்னால் சில மாகாணசபை உறுப்பினர்களே பயந்தார்கள்.

குற்றம் காணாத அமைச்சர்களுக்கு எதிரான விக்னேஸ்வரனின் தீர்மானத்தை நான் எதிர்த்தேன். அந்த சபையிலே நான் சொன்னேன். நீங்கள் உங்களுடைய தீர்ப்பை இப்பொழுது வாசிக்க வேண்டாம் என்று.

இங்கே எமது முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். விக்னேஸ்வரனின் இரண்டாவது முடிவோடு நான் உடன்படவில்லை என்று பகிரங்கமாகச் சொன்னேன். நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் கட்சி தீர்மானத்தோ தெரியவில்லை. நான் கட்சி அலுவலகத்திற்கு போன போது என்னுடைய பெயரை முன்னுக்குப் போடவேண்டாம். அது சரியில்லை. நாகரீகமில்லை பின்னுக்கு போடுங்கள் என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை முன்னுக்குப்போட வேண்டும் என்று போட்டார்கள். அதற்கும் நான் கையெழுத்து வைத்தேன். அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கமலேஸ்வரன் என்னிடம் தந்தார். நான் சொன்னேன் நான் இதை கொடுக்கிறது சரியில்லை. அவர்களைக் கொடுக்கச் சொல்லுங்கள். நானும் வருகிறேன் என்று கூறி எனது வாகனத்தில் சுகிர்தனோடு எந்த ஆவணத்தையும் கொண்டுசெல்லாமல் சென்றேன்.

பின்னர் இந்த ஆவணத்தை தயாரித்தவர்கள் தாமே கொடுக்கத் தைரியம் இல்லாமல், துணிச்சல் இல்லாமல் என்னிடம் திணித்தார்கள். எனவே நான் கொடுத்தேன்.

இப்பொழுது யாருக்கு தைரியம் இல்லை, துணிச்சல் இல்லை என்பது தெளிவு. இவர்களுக்குத்தான் துணிச்சல் இல்லை. எல்லோரும் ஒளித்து விளையாடினார்கள். கொடுத்த அன்று இரவே இங்கிருந்து கொழும்பு வரை போய் 21 பேரிடமும் கையெழுத்து வாங்கியவன் நான். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் எங்களுடைய உறுப்பினர்கள் சிலருக்கு பயம். இதற்கு முன்பு விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு கருத்து வந்தபோது ஒரு மாகாண சபை உறுப்பினர் தான் தான் இணைப்பாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு உறுப்பினர்களோடு ஒருகூட்டம் வைத்துக்கொண்டு விக்னேஸ்வரனிடம் இப்படி பிரச்சனை இருப்பதாகவும் தான் முதலமைச்சருக்காக கதைத்ததாக கூறிய பொழுது அனந்தி சசிதரன் உம்மை இணைப்பாளராக யார் நியமித்தார் என்றுகேள்வி எழுப்பியதுடன் அவர் பின்வாங்கிவிட்டார்.

நாங்கள் பகிரங்கமாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். எனக்கு நல்லாகத் தெரியும். இந்த பிரேரனை என்னிடம் வரவேண்டும். நான் சபைக்கு சமார்ப்பிக்க வேண்டும். சபையில் நம்பிக்கை வாக்கு எடுக்க வேண்டும். இத்தனையும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த மரபை மீறி அதனை கையளித்தேன் .

என்னிடம் துணிச்சல் இருந்தது. ஆனால் தயாரித்த உறுப்பினர்களுக்கு அந்தத் துணிச்சல் இல்லை. அந்த துணிச்சல் இருந்திருந்தால் அவர்களே கையளித்திருப்பார்கள். என்னைப் பலிக்கடா ஆக்கியிருக்க மாட்டார்கள்.

இவ்வாறான நிகழ்வுகள், இவ்வாறான பேச்சுக்கள் இன்னும் பலவற்றை சொல்ல வேண்டி நிர்பந்திக்கும்.

வீரசிங்க மண்டப கூட்டம் முடிந்து நான் வெளியே வந்தபோது இந்த விடயம் பற்றி என்னிடம் கேட்டபொழுது நான் சொன்னேன் எந்த ஒரு இறக்குமதிக்கு இடம் கொடுக்க முடியாது.இவ்வாறு இறக்குமதி என்றால் அதன் அர்த்தம். இங்கு இருக்கிற நாங்கள் ஒன்றும் தெரியாத பேயன்கள், மடையன்கள், அறிவாற்றல் இல்லாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என்று நினைப்பார்கள்.

அதற்கு நண்பர், சுமந்திரனும் இறக்குமதிதான் என்று சொன்னார். நான் சொன்னேன் சுமந்திரன் இறக்குமதி இல்லை. அவரது பிறப்பு சான்றிதழ் குடத்தனைதான் என்றும் சுமந்திரன் 2010 பாராளுமன்றம் வர முன்னர்10 வருடங்களாக கட்சிக்கு உழைத்தவர், கட்சிக்காக வாதாடியவர், கட்சிக்குள் ஊடாடியவர். இந்த கருத்து அவருக்குப் பொருந்தாது.

எமது கட்சிக்கும் எங்களுக்குடைய அரசியலுக்கும் இந்த மண்ணிலே இருக்கக் கூடியவர்களுக்குத்தான் உரித்து உண்டு. அந்த உரித்தை தவறாகப் புரிந்துகொள்ளகூடாது, எங்களைப் புரிந்து கொண்டவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள், இந்த மண்ணை நேசித்து அனுபவத்தவர்கள், இந்த மண்ணிலே துன்பங்கள், துயரங்கள், இராணுவ அடக்குமுறையை அனுபவத்தவர்கள், அனுபவசாலிகள் ஆர்வமுள்ளவர்கள், அறிவுள்ளவர்கள் பலர் எமது மண்ணிலே இருக்கின்றார்கள்.

அவர்களுக்கான வாய்ப்பு இந்த மண்ணிலே வழங்கப்பட வேண்டும். இதில் நான் தெளிவாக உள்ளேன். அவர்களுக்கு மிக பலமாக நிற்பேன்.

தனியாக சுமந்திரனைத் சிலர்தாக்குகின்றார்கள் அது தவறு. சுமந்திரன் செய்யகூடியவற்றை செய்திருக்கிறார். அரசியலமைப்புவரைபை உருவாக்குவது தொடக்கம் அதை முன்னெடுப்பது தொடக்கம். இந்த அரசியலை மிகப்பொறுப்போடு எங்களுடைய தலைவர்கள் செய்துள்ளார்கள்.

ஆகவே அது தொடர வேண்டும் என்பதும் இன்னொரு எதிர்வரும் தேர்தலில் அவர்களுடைய தொடர் நடவடிக்கையாக அது அமைய வேண்டும் என்பதும் எங்களுடைய மக்களின் அரசியல் தேவை என்றார்.

https://www.pagetamil.com/109381/

Link to comment
Share on other sites

”நாங்கள் ஒரு இவிடுதலைக்கான, இனத்தினுடையதன்னாட்சிக்கான, ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள் மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்“

தங்களின் இக்கருத்திற்கு அமைவாகவா இவ்வளவு காலமும் அவர்கள் நடந்துகொண்டார்கள்? தன்னாட்சி, சமஷ்டி, 13+, 13, ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு என்று இன்று ஒற்றையாட்சியினுள் பொருளாதார அபிவிருத்திதான் தமிழர்க்கு தேவையானதேயன்றி அதிகாரப்பகிர்வு அல்ல என்று அவர்கள் (அரசாங்கம்) கூறுமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.