Jump to content

ரேடார் என்றால் என்ன.! எவ்வாறு செயல்படுகிறது.. பயன்கள் என்ன.?


Recommended Posts

மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar.

1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும்.

ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்ட திசையில் காற்றில் பரப்புகிறது. டிரான்ஸ்மிட்டர் மூலம் வெளியே செல்லும் சிக்னலானது ஒரு பொருள் மீது மோதி, திரும்பும் போது ரிசிவரானது அதனை பெற்று கொள்கிறது. ஒரு சில ரேடார் கருவிகளில் டிரான்ஸ்மிட்டர் ஆண்டனாவே ரிசிவர் ஆண்டனாவாகவும் செயல்படுகிறது.

டிரான்ஸ்மிட்டரிலிருந்து வெளிவரும் தொடர்ச்சியான ரேடியோ அலைகள், தன்னுடைய பாதையில் குறுக்கிடும் பொருள் மீது பட்டு, ரேடார் கருவியை நோக்கி வந்த வேகத்திலேயே திரும்பி செல்கிறது. இந்த மின்காந்த கதிர்வீச்சு அலைகளை பெற்று கொள்கிறது ரிசிவர். இதன் மூலம் குறிப்பிட்ட பொருளின் இருப்பிடம் மற்றும் வேகம் பற்றிய துல்லிய தகவல்களை தருகின்றன ரேடார் கருவிகள்.

ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகம் வரை ஒளி (Light) பயணிக்கும். இதே வேகத்தில் தான் ரேடாரில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளும் பயணிக்கிறது. இந்த வேகத்தில் செல்லும் மின்காந்த அலைகளின் பாதையில் ஏதேனும் குறுக்கிடும் போது, அந்த அலைகள் பொருள் மீது பட்டு மீண்டும் ரேடாரில் உள்ள ரிசிவருக்கு செல்கிறது.

டிரான்ஸ்மிட்டரிலிருந்து புறப்பட்டு பொருள் மீது மோத எடுத்து கொண்ட நேரம் மற்றும் பொருள் மீது மோதி ரிசிவருக்கு மின்காந்த அலைகள் வந்த சேர்ந்த நேரம் இரண்டையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக 4 வினாடிகளில் இந்த செயல் நடைபெறுகிறது என்று வைத்து கொள்வோம்.

ரேடார் அலைகளில் தட்டுப்பட்ட குறிப்பிட்ட பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை துல்லியமாக அறிய d=speed x time என்ற சமன்பாடு பயன்படுகிறது. இதில் speed அதாவது ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்பதை அறிவோம். இதனுடன் 4 வினாடிகளை பெருக்கினால் கிடைக்கும் முடிவு இரு தொலைவுகளின் முடிவு . அதாவது Radar to object மற்றும் object to Radar ஆகிய இரண்டின் பயண நேர முடிவு. எனவே கிடைத்த முடிவை இரண்டால் வகுப்பதால் வரும் விடையே ரேடார் பார்வையில் சிக்கிய பொருளின் தொலைவாகும்.

இரண்டாம் உலக போருக்கு முன்னும், பின்னும் பல நாடுகளால் ரேடார் கருவிகள் ரகசியமாக உருவாக்கப்பட்டன. ராணுவத் தேவைகளுக்காகவே ரேடார் கருவிகள் உருவாக்கப்பட்டன என்றாலும், அடுத்தடுத்து பல முன்னேற்றங்களால் பல துறைகளிலும் ரேடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வான் பாதுகாப்பு, ஏவுகணையை தடுத்து நிறுத்தி தாக்கியழிக்கும் அமைப்புகள், விண்வெளி கண்காணிப்பு, வானிலை கண்காணிப்பு என பல துறைகளிலும் ரேடார்களின் பணி முக்கியமாக உள்ளது. ஒரே நேரத்தில் பல பொருட்களை அடையாளம் காட்டும் வகையிலும், பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பொருளை துல்லியமாக காட்டும் வகையிலும் ராணுவ பயன்பாட்டிற்காக அதிநவீன ரேடார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரேடார் சிக்னல்கள் குறிப்பாக பெரும்பாலான உலோகங்கள், கடல் நீர் மற்றும் ஈரமான தரை போன்ற கணிசமான மின் கடத்துத்திறன் கொண்ட பொருட்களால் நன்கு பிரதிபலிக்கப்படுகின்றன. சில ரேடர்களை வடிவமைக்கும்போது, நீராவி, மழைத்துளிகள் அல்லது வளிமண்டல வாயுக்கள் குறிப்பாக ஆக்ஸிஜன் ஆகியவற்றால் உறிஞ்சப்படும் அல்லது சிதறடிக்கப்படும் சில radio frequency-கள் தவிர்க்கப்படுகின்றன.

ரேடார் ரிசிவரில் பெறப்படும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக இருந்தால் Electronic Amplifiers மூலம் அதனை பலப்படுத்தி கொள்ள முடியும். போர்க்காலங்களில் எதிரி நாட்டின் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை முன்கூட்டியே கணிக்க உருவாக்கப்பட்ட ரேடார் தொழிநுட்பம், இன்று பல துறைகளிலும்  பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/102420/ரேடார்-என்றால்-என்ன.!எவ்வாறு-செயல்படுகிறது..பயன்கள்-என்ன.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.