Jump to content

சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

S.Mayooran.jpg

சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ். மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  வவுனியா விளக்குவைத்த குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கூறுகையில், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகவும் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக ஆசனங்களைப் பெறும்.

இதுவரை காலமும் எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை எங்களது பிரதிநிதிகள் ஊடாக ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறோம். எனினும் நாங்கள் இந்த நாட்டின் அரசாங்கம் அல்ல. எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களின் ஊடாக எங்களது மக்களை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தியிருக்கிறோம். அந்த நம்பிக்கையில் நாங்கள் மீண்டும் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறோம்.

இந்தவேளை, உங்களுடைய வாக்குகளை சூறையாடுவதற்காகாவும் எங்களுடைய இருப்பை இல்லாது ஒழிப்பதற்காகவும் சிலர் வாக்குகளை கேட்பதற்காக இங்கே வருவார்கள். அவ்வாறானவர்கள் சிங்கள தேசிய கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். அல்லது அவர்களின் அருவருடிகளாக இருக்கலாம். அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துத்தருவதாகக் கூறிக்கொண்டுதான் வருவார்கள்.

உங்களுடைய வாக்குகளை சுவீகரிப்பதற்காக வசீகரத்துடன் வருவார்கள். ஆனால் எதனையும் செய்து தரப்போவதில்லை. இந்த நிலையில்தான் ஒன்றை நாங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தவகையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பலத்தால் வளர்ந்திருக்கிறது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரது விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறம்தள்ளி விடக்கூடாது. யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் சகோதர படுகொலைகளை செய்துதான் தனி இயக்கமாக உருவாகினார்கள் என அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று சுமந்திரன் இருக்கின்ற கட்சியும் சகோதர கட்சிகளைப் புறம்தள்ளி ஐந்து கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை மூன்று கட்சிகள்தான் இருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஒன்று மட்டும்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்ற கட்சியாகும். இந்நிலையில் இடையில் வந்த சிலரது கருத்துக்கள் காரணமாகவும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் காரணமாகவும் மற்றவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள். இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்து விடக்கூடாது.

தான் சொல்வது சரி, தான் நினைப்பது சரி, தான் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவது சரி என சுமந்திரன் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் அவர் கதைப்பது சரியா பிழையா என உணர்ந்துகொள்ள வேண்டும்.

யாழ். மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் இருந்து அவர் தான் கதைத்தது சரியா, பிழையா என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் எமது பிரச்சனைகளைக் கதைப்பதற்கு கொழும்பில் இருந்து எவரையும் இறக்குமதி செயயப்பட வேண்டிய தேவை எமக்கில்லை.

தற்போது சுரேன் ராகவன் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தைக் கோருவதாக அறிகின்றேன். ஏற்கனவே சுமந்திரனது கருத்துக்களாலும் விக்னேஸ்வரனது கருத்துக்களாலும் நான்றாகவே பட்டுத்தெளிந்திருக்கிறோம்.

அவர்களது கருத்துக்களால் எமது பிரச்சினைகள் எவ்வளவு தூரம் சீரழிந்து போயுள்ளது என்பதையும் உணர்ந்துள்ளோம். அந்த வகையில் யாழ்.மாவட்ட மக்களும் தமக்கான நாடாளுமன்ற உறுப்பினரைச் சரியாகத் தெரிவுசெய்வார்கள். ஆகவே வன்னி தேர்தல் தொகுதியிலும் மக்களோடு மக்களாக நண்பனாக செயற்படக்கூடிய செல்வம் அடைக்கலநாதனும். வினோநோகதாரலிங்கமும் களத்தில் இருக்கிறார்கள் அவர்களையும் ஆதரிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/சுமந்திரனின்-விசனத்தனமா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அப்போ சுமந்திரனை புறந்தள்ளி விடுங்கள்

Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அப்ப நீங்க ஏன் அவரை இன்னும் விட்டு வைச்சிருக்கீக?

உங்க விஷமத்தனம் அதை வென்றதா இருக்குதல்லோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.