Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசின் ஆதரவுடனும் வெளிச்சக்திகளின் ஆதரவுடனும் வடக்கு, கிழக்கில் இம்முறை பல கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குத் துரோகம் இழைத்தவர்களும், தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வென்றெடுக்கக்கூடியதான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்.

இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம்.

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலெக்சன் வந்துட்டா சின்ராசுவ கையிலையே புடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

கஜாவிற்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்று வரிக்கு வரி நிரூபிக்கிறீர்களே ஜயா ....
அந்த சர்வதேசம் யாரென்று கொஞ்சம் புட்டு புட்டு வைப்பீர்களோ ...சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதித்தவுடனே சர்வதேசம் தமிழர் பக்கம் வந்துவிட்டதோ ....? எங்களையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு  🤬🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

C767091-E-5-E88-439-B-A50-B-3-B787-E8-F9

Link to comment
Share on other sites

எதிர்க்கட்சியாக இருந்தே ஒன்றையும் பெறவில்லை. இனி பேரம் பேசும் சக்தியாக வந்து பெட்டியை வாங்க தான் சரி.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

ஏன் கிடைக்கும் மில்லியன்கள் பில்லியன்களாக மாற்ற ஆசையோ?
சாகப்போற வயசில ஏனய்யா உங்களுக்கு இந்த ஆசை எல்லாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தவேணும் என்பதில உங்கள் அனைவரின் சுயநலமே தெரிகிறது. மற்ற புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கி பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகக்கட்சியாக இருந்து

மைத்திரியையும்

கோத்தாவையும் ஐனாதிபதியாக்கியதைத்தவிர இந்த 11 வருடங்களில்  என்னத்தை  கிழித்தீர்கள்  எனச்சொல்லுங்கள் முதலில்???

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

 

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

இல்லைச்சகோ

நானும் ஒரு காரணமாகத்தான்  கேட்டேன்

ஏனெனில் மக்களுக்கு  அந்தத்தெரிவு ஏற்கனவே  உண்டு

ஆனால் இவர்களிடம்  மக்கள்  பொறுப்பைக்கொடுப்பது 

உரிமையையும் விட்டுக்கொடுக்காது சலுகைகளையும்  பெறும்படி  தான்

ஆனால் என்ன  நடக்குது  என்றால் உரிமையை  விட்டுக்கொடுத்தபடி  சலுகைகளை  அவர்கள் தமக்கு  மட்டும்  பெற்றுக்கொள்கிறார்கள்.

இது  தொடர்ந்தால்......???

அது  தான் எனது  பயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

Link to comment
Share on other sites

6 hours ago, Sasi_varnam said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

தமிழன் உரிமைகளை வித்ததுக்கு சன்மானமா சொறிலங்கா அரசு சம்பந்தனுக்கு கொழும்புல கிடைச்ச சொகுசு வீடு போதல்ல.  
குகதாசன் கனடால சுருட்டி சம்பந்தனுக்கு கொடுத்த கோடிகளும் அவருக்கு போதல்ல.  
மனுஷன் தமிழினத்தை இன்னும் அழிச்சே தீருவன் என்டு ஒற்றை காலில நிக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.