Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசின் ஆதரவுடனும் வெளிச்சக்திகளின் ஆதரவுடனும் வடக்கு, கிழக்கில் இம்முறை பல கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குத் துரோகம் இழைத்தவர்களும், தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வென்றெடுக்கக்கூடியதான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்.

இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம்.

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலெக்சன் வந்துட்டா சின்ராசுவ கையிலையே புடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

கஜாவிற்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்று வரிக்கு வரி நிரூபிக்கிறீர்களே ஜயா ....
அந்த சர்வதேசம் யாரென்று கொஞ்சம் புட்டு புட்டு வைப்பீர்களோ ...சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதித்தவுடனே சர்வதேசம் தமிழர் பக்கம் வந்துவிட்டதோ ....? எங்களையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு  🤬🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

C767091-E-5-E88-439-B-A50-B-3-B787-E8-F9

Link to comment
Share on other sites

எதிர்க்கட்சியாக இருந்தே ஒன்றையும் பெறவில்லை. இனி பேரம் பேசும் சக்தியாக வந்து பெட்டியை வாங்க தான் சரி.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

ஏன் கிடைக்கும் மில்லியன்கள் பில்லியன்களாக மாற்ற ஆசையோ?
சாகப்போற வயசில ஏனய்யா உங்களுக்கு இந்த ஆசை எல்லாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தவேணும் என்பதில உங்கள் அனைவரின் சுயநலமே தெரிகிறது. மற்ற புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கி பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகக்கட்சியாக இருந்து

மைத்திரியையும்

கோத்தாவையும் ஐனாதிபதியாக்கியதைத்தவிர இந்த 11 வருடங்களில்  என்னத்தை  கிழித்தீர்கள்  எனச்சொல்லுங்கள் முதலில்???

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன்

r-sampanthan.jpg

 

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-15/

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு இழவும் வேண்டாம்... இப்படி சொல்லி சொல்லியே 40 வருடங்களுக்கும் மேல் புடுங்கின ஆணி எல்லாமே தேவையில்லாதா ஆணிகள் மாத்திரமே

கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ப அரசுடன் இணைந்து ஒன்றிரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வடக்கு கிழக்கை முன்னேற்ற முயன்றாலே கோடி நன்றிகள்.

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

முரளிதரன்

பிள்ளையான்

டக்லசு மாதிரியா???

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மூவரும் மோசமான உதாரணங்கள்.

ஆனாலும் சமஷ்டி பெற்றுத் தருவோம், வடக்கு கிழக்கை இணைத்து தருவோம் என்று தம்மால் முடியாத விடயங்களை சொல்லி சொல்லி காலத்தை கடத்துவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றாவது தாம் சார்ந்த வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்து தம் மக்கள் பொருளாதார சுபூட்சம் பெற உதவுவது பல மடங்கு மேலானதும் சாத்தியமானதுமாகும்.

இல்லைச்சகோ

நானும் ஒரு காரணமாகத்தான்  கேட்டேன்

ஏனெனில் மக்களுக்கு  அந்தத்தெரிவு ஏற்கனவே  உண்டு

ஆனால் இவர்களிடம்  மக்கள்  பொறுப்பைக்கொடுப்பது 

உரிமையையும் விட்டுக்கொடுக்காது சலுகைகளையும்  பெறும்படி  தான்

ஆனால் என்ன  நடக்குது  என்றால் உரிமையை  விட்டுக்கொடுத்தபடி  சலுகைகளை  அவர்கள் தமக்கு  மட்டும்  பெற்றுக்கொள்கிறார்கள்.

இது  தொடர்ந்தால்......???

அது  தான் எனது  பயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

Link to comment
Share on other sites

6 hours ago, Sasi_varnam said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் ...அவர் சரியாதான் எல்லாத்தையும் சொல்லுறார் ...நீங்கள் தான் தவறாக புறிந்துகொள்கிறீர்கள் 
"பேரம் பேசுறது " என்று அவர் சொல்வது அவருடைய தேவை எதோ அதை மட்டும் தான்.
அஞ்சோ , பத்தோ ,  வீடோ , பங்களாவோ , பதவியோ, சலுகையோ ...  

தமிழன் உரிமைகளை வித்ததுக்கு சன்மானமா சொறிலங்கா அரசு சம்பந்தனுக்கு கொழும்புல கிடைச்ச சொகுசு வீடு போதல்ல.  
குகதாசன் கனடால சுருட்டி சம்பந்தனுக்கு கொடுத்த கோடிகளும் அவருக்கு போதல்ல.  
மனுஷன் தமிழினத்தை இன்னும் அழிச்சே தீருவன் என்டு ஒற்றை காலில நிக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.