Jump to content

கொரோனாவுக்கு வைரமுத்து எழுதிய கவிதை


Recommended Posts

 

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே!"

உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

 மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

 கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே
!

#coronavirusindia #CoronaVirusUpdate
— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020

http://www.tamilmirror.lk/cinema/கரனவகக-வரமதத-எழதய-கவத/54-246394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

 

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே!"

உணவை மருந்தாக்கு
 உடம்பை இரும்பாக்கு

 மூச்சுப் பைகளில்
 நம்பிக்கை நிரப்பு
 நோய்த் தடுப்பாற்றல்
 பெருக்குதல் சிறப்பு

 கோவிட் - 19
கொல்லுயிரியை
 எழுந்து எதிர்கொள்
 இந்திய நாடே
!

#coronavirusindia #CoronaVirusUpdate
— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020

http://www.tamilmirror.lk/cinema/கரனவகக-வரமதத-எழதய-கவத/54-246394

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விசமாச்சு 

உடம்பு எலும்பாச்சு

 

மூச்சுப் பைகளில் 

கரிவாயு நிறையுது 

நோய் தடுக்க முடியாமல் 

நொந்துபோய் திரிகின்றோம் 

 

கோவிட்டை  எதிர் கொண்டால் 

எதிர் கொள்பவனை  கொல்லாதோ 

செத்தவனை தொலைத்து விட்டு 

இருப்பவனை கணக்கெடுப்போம் 

 

கொல்லுயிரியை 

கொலை செய்ய 

குடுத்தவன்தான் 

மருந்திடனும்.......!

 

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

😂  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவே மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால் எல்லாருக்கும் அந்தக்கொடுப்பனவு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 6:53 PM, ampanai said:

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

maxresdefault.jpg

ஓர் சுவிற் ஸ்ராலே சுவிற் சாப்பிடுகிறதே.. ( ! )..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:35 PM, suvy said:

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

Suvy, உங்கள் கவிதை நன்றாகத்தனே இருக்கிறது.

கடைசியாக நீங்கள் எழுதியது உங்களது தன்னம்பிக்கையை கேள்விகுள்ளாக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

Suvy, உங்கள் கவிதை நன்றாகத்தனே இருக்கிறது.

கடைசியாக நீங்கள் எழுதியது உங்களது தன்னம்பிக்கையை கேள்விகுள்ளாக்கிறது.

நன்றி....நன்றி  கவி அருணாசலம்......!

திரு வைரமுத்து அவர்கள் கவிப்பேரரசு ஆவார்.எனக்குப் மிகவும் பிடித்த  மரியாதைக்கு உரிய கவிஞர்.....அவர் கவிதையை  உல்டா  பண்ணுவது ஒரு மாதிரி இருந்தது.அதுதான்......!   😁

நன்றி சகோதரி காவலூர் கண்மணி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் (கொ)கலைஞருக்கு ஜால்ரா போட்டு, உன் கல்லாவையாவது நிரப்பு.

நோய்த்தடுப்பாற்றல்

பெருக்குதல் சிறப்பு

இனம் விற்று, பொருள் ஈட்டல் 

அதைவிடச் சிறப்பு.

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

-கவிஞர் பித்தளை முத்து-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:35 PM, suvy said:

உணவு விசமாச்சு 

உடம்பு எலும்பாச்சு

 

மூச்சுப் பைகளில் 

கரிவாயு நிறையுது 

நோய் தடுக்க முடியாமல் 

நொந்துபோய் திரிகின்றோம் 

 

கோவிட்டை  எதிர் கொண்டால் 

எதிர் கொள்பவனை  கொல்லாதோ 

செத்தவனை தொலைத்து விட்டு 

இருப்பவனை கணக்கெடுப்போம் 

 

கொல்லுயிரியை 

கொலை செய்ய 

குடுத்தவன்தான் 

மருந்திடனும்.......!

 

அதிகப்பிரசங்கித்தனம்தான்  ஐயா பொறுத்துக்கணும்.....!

😂  😂

வைரமுத்துவை.... விட,
நம்ம,  யாழ். களத்து  சுவி. அருமையாக... கவிதை எழுதியிருக்கிறார்.

சுவியின்... இந்தக் கவிதையை, வைரமுத்துக்கு....  அனுப்பினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் (கொ)கலைஞருக்கு ஜால்ரா போட்டு, உன் கல்லாவையாவது நிரப்பு.

நோய்த்தடுப்பாற்றல்

பெருக்குதல் சிறப்பு

இனம் விற்று, பொருள் ஈட்டல் 

அதைவிடச் சிறப்பு.

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

-கவிஞர் பித்தளை முத்து-

கோசான்..... வைரத்தையும், பித்தளையையும்  ஒன்றாக   கலக்கி விட்டீங்க . 😎
அப்பிடிஏ .... ஷாக்... ஆகி, போய் விட்டேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வைரமுத்துவை.... விட,
நம்ம,  யாழ். களத்து  சுவி. அருமையாக... கவிதை எழுதியிருக்கிறார்.

சுவியின்... இந்தக் கவிதையை, வைரமுத்துக்கு....  அனுப்பினால் நல்லது.

அப்படியே பித்தளை முத்தின் பிதற்றலையும் அனுப்பி விடுங்கள். உறைக்கிறதா பார்ப்போம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

திரு வைரமுத்து அவர்கள் கவிப்பேரரசு ஆவார்.எனக்குப் மிகவும் பிடித்த  மரியாதைக்கு உரிய கவிஞர்.....அவர் கவிதையை  உல்டா  பண்ணுவது ஒரு மாதிரி இருந்தது.அதுதான்......!   😁

கண்ணதாசன் கவியரசு என்றால் கவிப்பேரரசு என்று இவர் அவரை விட மேலே போய் நிற்பார்.

உல்டா என்பதை பலர் செய்கிறார்கள்.  தனது பாடல் வரிகளை இந்த இலக்கியத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று கண்ணதாசன் சொல்லுவார். கவிப்பேரரசு சொல்லமாட்டார்.

கவிப்பேரரசு வின் உல்டாவுக்கு ஒரு உதாரணம்

ஆலங்குடி சோமு எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்,

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...” என்றிருக்கும்.

கவிப்பேரரசு ரஜனிகாந்திற்கு இப்படி எழுதியிருப்பார்,

“ஒருவன் ஒருவன் முதலாளி

மற்றவர் எல்லாம் தொழிலாளி..”

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

13 hours ago, goshan_che said:

உணவை மருந்தாக்கு,

முடியவில்லையா? குறைந்தபட்சம் ஒரு பாடகியையாவது விருந்தாக்கு.

 

13 hours ago, goshan_che said:

இதோ முள்ளிவாய்கால் நேரம்

கண்ணையும், காதையும், வாயையையும் மூடி நான் அணிந்திருந்த முகக்கவசம்.

இதை அணிந்து கொண்டு,

கோவிட்19 கொல்லுயுரியை

எழுந்து எதிர்கொள் இந்திய நாடே.

 

Goshan-Che  பாராட்டுகள். கவிதை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

கண்ணதாசன் கவியரசு என்றால் கவிப்பேரரசு என்று இவர் அவரை விட மேலே போய் நிற்பார்.

உல்டா என்பதை பலர் செய்கிறார்கள்.  தனது பாடல் வரிகளை இந்த இலக்கியத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று கண்ணதாசன் சொல்லுவார். கவிப்பேரரசு சொல்லமாட்டார்.

கவிப்பேரரசு வின் உல்டாவுக்கு ஒரு உதாரணம்

ஆலங்குடி சோமு எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்,

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...” என்றிருக்கும்.

கவிப்பேரரசு ரஜனிகாந்திற்கு இப்படி எழுதியிருப்பார்,

“ஒருவன் ஒருவன் முதலாளி

மற்றவர் எல்லாம் தொழிலாளி..”

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

 

Goshan-Che  பாராட்டுகள். கவிதை அருமை

நன்றி. உங்கள் தூரிகையின் பரம ரசிகன் நான்.

பிகு: இவர்கள் இருவரையும் விட, பாரதி, பாரதிதாசனுக்கு பின் தமிழின் முதன்மை கவி என்றால் அது பட்டுக்கோட்டைதான் என்பது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

 

பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்

அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று

பாரதிதாசனின் கவிதையை கவிப்பேரரசு உல்டா பண்ணியிருந்தால் எப்படி எழுதியிருப்பார்?

 

இப்போதான் உங்கள் பதிவில் இருந்த கேள்வியை கண்டேன்.

பதில் கீழே, சரியா?

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...
 

கடலை, வானம் என திருப்பி போட்டு முதல் பாடலிலே வேலையை ஆரம்பித்துவிட்டார்😂

இதெல்லாம் inspiration தெரியுமா? கொப்பி அல்ல😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இதெல்லாம் inspiration தெரியுமா? கொப்பி அல்ல😂

Suvyஇன் காதிலும் போட்டு வையுங்கள் Goshan-ch

10 hours ago, ஆதிவாசி said:

ஆதி இந்தப்பக்கம்   கவி....கள் கவனம் கண்டியோ

ஆதிவாசிக்குத்தான் ‘கவிகள்’ உடனான பழக்கங்கள் அதிகம்🤪

Link to comment
Share on other sites

On 3/5/2020 at 7:26 PM, சுவைப்பிரியன் said:

உணவே மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால் எல்லாருக்கும் அந்தக்கொடுப்பனவு இல்லை.

பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதை. சோதனைமேல் சோதனை போதுமப்பா.:100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.