Jump to content

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!

TNA-logo.jpg 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

1. மாவை.சேனாதிராஜா

2. ஆபிரகாம் சுமந்திரன்

3. ஈஸ்வரபாதம் சரவணபவான்

4. சிவாஞானம் சிறீதரன்

5. சசிகலா ரவிராஜ்

6. மிதுலை செல்வி

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

8. தர்மலிங்கம் சித்தாத்தன்

9. ப.கஜதீபன்

10. சுரேந்திரன்

http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/

டிஸ்கி :

ஆர் வெற்றி பெறுவார்கள்.. ஆருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ரெல் மீ..? 👍

Link to comment
Share on other sites

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

🙄

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

10. சுரேந்திரன்

முன்னாள் ஆளுநர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.!

TNA-logo.jpg 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

1. மாவை.சேனாதிராஜா

2. ஆபிரகாம் சுமந்திரன்

3. ஈஸ்வரபாதம் சரவணபவான்

4. சிவாஞானம் சிறீதரன்

5. சசிகலா ரவிராஜ்

6. மிதுலை செல்வி

7. அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

8. தர்மலிங்கம் சித்தாத்தன்

9. ப.கஜதீபன்

10. சுரேந்திரன்

http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/

டிஸ்கி :

ஆர் வெற்றி பெறுவார்கள்.. ஆருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ரெல் மீ..? 👍

1. ஆரப்பா அது ஆபிரகாம் சுமந்திரன்😂 சும்மின் பெயர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன். ஆனால் அவரை கிறீஸ்தவர் என இனம் காட்டுவதற்காய் ஆபிரகாம் சுமந்திரன் என எழுதிகிறார்கள்😂. இதை ஆங்கிலத்தில் dog whistle racism என்பர். சும்மின் அரசியல் மீது எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், ஆனால் அவரை கிறீஸ்தவர் என்பதற்காக தாக்குவது சரியில்லை. சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை. 

2. பட்டியலில் 4 அல்ல 5 பேர் முன்னாள் பாஉக்கள்.

3. புதுமுக வேட்பாளரில் ரவிராஜ் மனைவி களம் இறங்குகிறார். தென்மராட்சியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

4. கஜதீபன் முன்னாள் யாழ் பல்கலை மாணவர் மன்றம்?

எனது கணிப்பு

1. மாவை, சும், சிறிதரன், சித்தர் வெல்லுவார்கள்.

2. சசிகலா, சரவணபவன் தொத்து பறியில் வெல்லலாம், தோற்கலாம்.

4. டக்லஸ்சுக்கு ஒரு ஆசனம் கரண்டி. இன்னொன்றும் கிடைக்கலாம்.

3. கூட்டமைப்பை நோக்கி பெரும் அலை அடித்தால் மட்டுமே 8 ஆசனங்கள் சாத்தியம்.

எனது இப்போதைய கணிப்பின் படி யாழில் வெல்பவர்கள். விருப்பு வாக்கு அடிப்படையில்.

1. விக்னேஸ்வரன் (தேர்தலில் நின்றால்)

2. சுமந்திரன்

3. டக்லஸ்

4. சிறிதரன்

5. மாவை

6. சித்தார்தன்

7. சரா/சசிகலா

8. சசிகலா/அல்லது சுரேஸ் 

9. ஈபிடிபி/அல்லது சுரேஸ்

கூட்டமைப்பு 5 கூடினால் 7

ஈபிடிபி 1 கூடினால் 2

விக்கி அணி 1 கூடினால் 2

கஜே கஜேஸ் - பூச்சியம்

 

1 hour ago, ampanai said:

🙄

முன்னாள் ஆளுநர் ?

நான் நினக்கவில்லை அவர் என்று

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

நான் நினக்கவில்லை அவர் என்று

 

10 minutes ago, goshan_che said:

1. ஆரப்பா அது ஆபிரகாம் சுமந்திரன்😂 சும்மின் பெயர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன். ஆனால் அவரை கிறீஸ்தவர் என இனம் காட்டுவதற்காய் ஆபிரகாம் சுமந்திரன் என எழுதிகிறார்கள்😂. இதை ஆங்கிலத்தில் dog whistle racism என்பர். சும்மின் அரசியல் மீது எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், ஆனால் அவரை கிறீஸ்தவர் என்பதற்காக தாக்குவது சரியில்லை. சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

 

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

ஏன் தேவையற்றது?

கிறீஸ்தவ-இந்து முறுகல் ஏற்படுவதும் அதை இட்டு வாதப் பிரதிவாதங்கள் எழுவதும் வேறு.

ஆனால் ஒரு சகதமிழனை, கிறீஸ்தவன் என்று குறிகாட்டி ஓரம் கட்டுவது மாவீரகளின் நினவுக்கு செய்யும் வஞ்சனையே.

நாம் எல்லோரும் தமிழர்கள், நமக்குள் அரசியல் செய்யும் உரிமை எல்லாருக்கும் உள்ளது என்ற உயரிய நம்பிக்கையில்தானே சீலனும், விக்டரும் போராடினார்கள்? வீரச்சாவடைந்தார்கள்? இந்த விழுமியங்களை தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் கைக்கொள்ளும், கிறீஸ்தவர்களை ஒதுக்காது என அவர்கள் நம்பித்தானே கண்மூடினார்கள்?

இப்படி இருக்கையில் - சுமந்திரனை கிறீஸ்தவன் என பெட்டிகட்டுவது, அந்த மாவீரர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் அன்றி வேறென்ன?

சுமந்திரனை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள், கைகூலி, கால்தூசி, பின்கதவு, முன் யன்னல், துரோகி, என்ன வேணுமானாலும் ஆனால் கிறீஸ்தவன் என பெட்டி கட்டாதீர்கள்.

பிகு: சுரேன் ராகவன் பற்றிய தகவலுக்கு நன்றி. அரசியலில் நிரந்த நண்பரும், பகைவரும் இல்லை, நிர்ந்தர நலன்கள் மட்டுமே 😂.

ஆனால் இவருக்கும் கணிசமான மக்கள் செல்வாக்கு உண்டு.

 

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

ஏன் தேவையற்றது?

கிறீஸ்தவ-இந்து முறுகல் ஏற்படுவதும் அதை இட்டு வாதப் பிரதிவாதங்கள் எழுவதும் வேறு.

ஆனால் ஒரு சகதமிழனை, கிறீஸ்தவன் என்று குறிகாட்டி ஓரம் கட்டுவது மாவீரகளின் நினவுக்கு செய்யும் வஞ்சனையே.

நாம் எல்லோரும் தமிழர்கள், நமக்குள் அரசியல் செய்யும் உரிமை எல்லாருக்கும் உள்ளது என்ற உயரிய நம்பிக்கையில்தானே சீலனும், விக்டரும் போராடினார்கள்? வீரச்சாவடைந்தார்கள்? இந்த விழுமியங்களை தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் கைக்கொள்ளும், கிறீஸ்தவர்களை ஒதுக்காது என அவர்கள் நம்பித்தானே கண்மூடினார்கள்?

இப்படி இருக்கையில் - சுமந்திரனை கிறீஸ்தவன் என பெட்டிகட்டுவது, அந்த மாவீரர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் அன்றி வேறென்ன?

சுமந்திரனை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள், கைகூலி, கால்தூசி, பின்கதவு, முன் யன்னல், துரோகி, என்ன வேணுமானாலும் ஆனால் கிறீஸ்தவன் என பெட்டி கட்டாதீர்கள்

நிச்சயம் தேவையற்றது: சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை


#1: http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/ என்ற இணையத்தளம் இதை வெளியிட்டது. அதில் செய்தியாளர்  பூங்குன்றன் தெரிந்தோ இல்லை தெரியாமலே இல்லை வேறு கார்மோ இருக்கலாம்.

#2: தமிழ் தேசியம் என்பதும் மாவீரர்கள் என்பதும் இந்த செய்திக்கும் செய்யாளர்க்கும் அப்பாற்பட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

நிச்சயம் தேவையற்றது: சொல்போனால் இப்படி செய்வது தமிழ் தேசியத்துக்கும், கிறீஸ்தவ மாவீரகளுகளின் நினைவுக்கும் செய்யும் அவமரியாதை


#1: http://www.vanakkamlondon.com/tna-05-03-2020/ என்ற இணையத்தளம் இதை வெளியிட்டது. அதில் செய்தியாளர்  பூங்குன்றன் தெரிந்தோ இல்லை தெரியாமலே இல்லை வேறு கார்மோ இருக்கலாம்.

#2: தமிழ் தேசியம் என்பதும் மாவீரர்கள் என்பதும் இந்த செய்திக்கும் செய்யாளர்க்கும் அப்பாற்பட்டது.

 

நிச்சயமாக இல்லை. எமது அரசியல் எந்த வடிவில் உரு மாறினாலும், பல்லாயிரம் மனிதர்கள் தம் உயிரை கொடையாக தந்து கட்டி எழுப்பிய சில சித்தாந்தங்களை விட்டு கொடுக்காமல் நகர வேண்டும்.

அப்படி பட்ட சித்தாந்தங்களில் ஒன்று தனிநாட்டு கோரிக்கை. இன்னொன்று இந்து-கிறீஸ்தவ மதச்சாபின்மை.

சித்தாந்தம் ஒன்றை கைவிடும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சித்தாந்தம் ரெண்டை கைவிட வேண்டிய அவசியம் இல்லை.

தமது சின்ன சின்ன அரசியல் ஆதாயத்துக்கா, மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் அரசியல் நிச்சயமாக, தமிழர் எல்லாரும் ஒரே இனம் என்ற நம்பிக்கையோடு கண்மூடியவர்களின் ஆன்மாவை அவமதிக்கும் செயலே.

இங்கே அலசப்படுவது இலங்கையின் தமிழ் தேசிய அரசியல். இதில் சம்பந்தபடாமல், வேறு எதில் தமிழ் தேசியமும், மாவீரர்களும் சம்பந்தபடும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த சீவிகே சிவஞானத்துக்கு இந்த முறையும் பல்ப்பா?😂

Link to comment
Share on other sites

8 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை. எமது அரசியல் எந்த வடிவில் உரு மாறினாலும், பல்லாயிரம் மனிதர்கள் தம் உயிரை கொடையாக தந்து கட்டி எழுப்பிய சில சித்தாந்தங்களை விட்டு கொடுக்காமல் நகர வேண்டும்.

அப்படி பட்ட சித்தாந்தங்களில் ஒன்று தனிநாட்டு கோரிக்கை. இன்னொன்று இந்து-கிறீஸ்தவ மதச்சாபின்மை.

சித்தாந்தம் ஒன்றை கைவிடும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சித்தாந்தம் ரெண்டை கைவிட வேண்டிய அவசியம் இல்லை.

தமது சின்ன சின்ன அரசியல் ஆதாயத்துக்கா, மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் அரசியல் நிச்சயமாக, தமிழர் எல்லாரும் ஒரே இனம் என்ற நம்பிக்கையோடு கண்மூடியவர்களின் ஆன்மாவை அவமதிக்கும் செயலே.

இங்கே அலசப்படுவது இலங்கையின் தமிழ் தேசிய அரசியல். இதில் சம்பந்தபடாமல், வேறு எதில் தமிழ் தேசியமும், மாவீரர்களும் சம்பந்தபடும்?

இவ்வாறு தமிழ் தேசியத்தையும், மதச்சார்பற்று முன்னெடுக்கப்பட்ட ஈழ விடுதலையையும் இணைப்பது மூலம் அந்த பத்திரிகைக்கு தேவையற்ற அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.

சுமந்திரன் அவர்களின் பெயரை வேண்டுமென்றோ இல்லை தெரியாமலோ அந்த பத்திரிக்கை பிரசுரித்திருக்கலாம். அது தவறு என்றும், இவ்வாறான பத்திரிகைகளை மக்களுக்கு  அடையாளம் காட்டுவதே சரியான விடயம்.

ஆனால், எடுத்ததற்கெல்லாம் தேசியம், மாவீரர்கள் என்பது தேவையற்றது. அந்த சொற்களுக்கு ஒரு இடம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

 

எல்லாம் சரியாகத்தெரிகின்றது ஆனால், இறுதி வசனம் தேவையற்ற ஒன்று.

ஏன் தேவையற்றது ? தற்போதுள்ள சூழலை காரணமாக கூறுகிறீர்களா அல்லது அப்படிக் கூறக் கூடாது என்கிறீர்களா அல்லது அப்படி ஒரு விடயமே இல்லை என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. இதனால் அந்த பத்திரிகைக்கு ஒரு அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவர்களின் சுயரூபம் தோலுரிக்கப்படவே செய்யும்.

இங்கேமட்டுமல்ல, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனை தாக்க இப்போ பலரும் பரவலாக கையில் எடுப்பது அவரின் மதத்தையே.

இதுவரை எம் ஏ சுமந்திரன் என எழுதியவர்கள் எல்லாம் கடந்த இரண்டரை வருடங்களா ஆபிரகாம் சுமந்திரன் என எழுதுவதன் உள்நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி.

செல்வநாயகத்தை ஏன் எல்லாரும் தந்தை செல்வா அல்லது எஸ் ஜேவி செல்வநாயகம் என எழுதுகிறார்கள்? 
சாமுவேல் ஜேம்ஸ் வேலுபிள்ளை செல்வநாயகம் என்று எழுதுவதில்லை?

சுமந்திரனை எப்படியாவது விழுத்தி விடவேண்டும் அதற்க்காக, தமிழர் மத்தியில் கிறீஸ்தவ-இந்து பாகுபாடு என்ற நஞ்சை விதைத்தாலும் பரவாயில்லை என்ற மனோநிலையே இது.

இந்த அணுகுமுறைக்கும் RSS BJP இந்தியாவில் கடைப்பிடிக்கும் அரசியலுக்கும் வேறுபாடில்லை.

பிஜேபி அரசியல் காந்தியின் மதச்சார்பின்மையை அவமதிக்கிறது. 

இவர்களின் அரசியல் பிரபாவின் மதச்சார்பின்மையை அவமதிக்கிறது.

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

ஏன் தேவையற்றது ? தற்போதுள்ள சூழலை காரணமாக கூறுகிறீர்களா அல்லது அப்படிக் கூறக் கூடாது என்கிறீர்களா அல்லது அப்படி ஒரு விடயமே இல்லை என்கிறீர்களா ?

இங்கே விவாதிக்கப்பட எடுத்துக்கொண்ட விடயம் சுமந்திரனின் பெயரில் அவரின் ஒரு பெயர் விடப்பட்டதாக ஒரு உண்மை சொல்லப்படுகின்றது. பின்னர், கடைசி வசனம் தேசியத்தையும் 'கிறிஸ்தவ மாவீரர்கள்' எனவும் கூறியதை தேவையில்லாத விடயம் என்றேன்.

குறிப்பாக மாவீரர்களை மதத்தால் பிரிப்பது தவறான விடயம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இங்கே விவாதிக்கப்பட எடுத்துக்கொண்ட விடயம் சுமந்திரனின் பெயரில் அவரின் ஒரு பெயர் விடப்பட்டதாக ஒரு உண்மை சொல்லப்படுகின்றது. பின்னர், கடைசி வசனம் தேசியத்தையும் 'கிறிஸ்தவ மாவீரர்கள்' எனவும் கூறியதை தேவையில்லாத விடயம் என்றேன்.

குறிப்பாக மாவீரர்களை மதத்தால் பிரிப்பது தவறான விடயம்.  

 

நன்றி.  தமிழ்த் தேசியத்தை விரும்புபவர்கள் ஒருபோதும் மதத்தால் பிரித்து  மாவீரரை அவமதிக்கப் போவதில்லை. அது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

சைவத் தமிழ்த் தேசியத்தை மட்டும் விரும்புபவர்கள் நிச்சயமாக மதத்தை முன்னிறுத்தி மாவீரரை இழிவு படுத்துவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

இங்கே விவாதிக்கப்பட எடுத்துக்கொண்ட விடயம் சுமந்திரனின் பெயரில் அவரின் ஒரு பெயர் விடப்பட்டதாக ஒரு உண்மை சொல்லப்படுகின்றது. பின்னர், கடைசி வசனம் தேசியத்தையும் 'கிறிஸ்தவ மாவீரர்கள்' எனவும் கூறியதை தேவையில்லாத விடயம் என்றேன்.

குறிப்பாக மாவீரர்களை மதத்தால் பிரிப்பது தவறான விடயம்.  

 

மாவீர்களுக்கான மரியாதை தனியே படத்தை வைத்து வணங்கி போவதில் மட்டும் இல்லை.

அவர்கள் எந்த நம்பிக்கையில் கண்மூடினார்களோ அந்த நம்பிக்கையை தக்க வைக்க முயல்வதே அவர்களுக்கான அதிகூடிய கெளரவம். 

ஒவ்வொரு முறை சாதியத்தை தமிழ் தேசியம் கையில் எடுக்கும் போதும் - அது தமிழ்செல்வனின் (அவரை போல பலருக்கு) நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை. 

ஒவ்வொரு முறை பிரதேசவாதத்தை தமிழ்தேசியம் கையில் எடுக்கும் போது அது கெளசல்யனின் நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை.

ஒவ்வொரு முறை தமிழ்தேசியம் மதவாதத்தை கையில் எடுக்கும் போது அது விக்டரின் நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதை.

மத, சாதி, பிரதேச ஏற்றத்தாழ்வற்ற தனிநாடு என்ற உயரிய இலட்சியதுக்காகவே அவர்கள் போராடினார்கள்.

தனிநாடு என்ற இலட்சியம்தான் எட்டாக்கனியாகி விட்டது, குறைந்தபட்சம் நம்மால் ஒரு மத, சாதி, பிரதேச ஏற்றத்தாழ்வற்ற சமூகமாகவாவது வாழ முடியாதா?

இல்லை என்றால் அது அவர்களின் நினைவுக்கு, நம்பிக்கைக்கு செய்யும் அவமரியாதையே.

பிகு: தென்னிலங்கை மக்களோ, டக்லசோ, கருணாவோ, சங்கரியோ கூட “ஆபிரகாம்” அரசியல் செய்வதில்லை. தமிழ் தேசிய அரசியல் செய்வதாக சொல்பவர்களும் அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் மட்டுமே இந்த அற்ப வேலை செய்கிறன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.