Jump to content

பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்


Recommended Posts

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. சிகிச்சைக்கான பிரத்யேக மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகளுக்கான சிகிச்சையே உலகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா சட்டப்பேரவையிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். அங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சுமன் ஹரிபிரியா, "பசுவின் சாணத்தை எரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகைக்குக் கொரோனா வைரஸை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இது தீர்வாக அமையும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"மதச்சடங்குகளில் பசுவின் சாணமும் கோமியமும் பயன்படுத்தப்படுவதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்களும் அடங்கியிருக்கின்றன. குஜராத்தில் செயல்படும் சில ஆயுர்வேத மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் பசுக்களும் தங்க வைக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குப் பசுவின் சாணம், கோமியத்தால் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த் (Panchamrit) மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தின் மூலம் புற்றுநோய் குணமாக்கப்படுகிறது என்று அறிந்தேன். அதனால்தான் முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் பசுவை கடவுளாக வழிபட்டுள்ளனர்" என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

மேலும் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தின் பயன்கள் குறித்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியின் மூலமாக தான் இதை அறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் த்ரிவேந்திர சிங், "பசுக்கள் ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் வெளியேற்றும். அதனால் பசுக்களுக்கு மசாஜ் செய்தால் சுவாசப் பிரச்னைகள் குணமாகும். காசநோய் பிரச்னை இருப்பவர்கள் பசுக்கள் இருக்கும் பகுதியில் வாழ்ந்தால் நோய் முற்றிலும் குணமாகிவிடும்" என்று அதிர வைத்தார்.

அவ்வப்போது பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகப் பரிந்துரைக்கின்றனர் பா.ஜ.க அரசியல் பிரமுகர்கள். உண்மையிலேயே இந்த இரண்டிலும் மருந்துவக் குணங்கள் இருக்கின்றனவா? கொரோனா வைரஸ் நோய்க்கு இவை தீர்வாக அமையுமா என்று பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்.

"கொரோனா வைரஸின் செயல்திறன் பற்றியே இன்னும் சரியான புரிந்துணர்வு ஏற்படவில்லை. அந்த வைரஸின் டி.என்.ஏ வையே சில தினங்களுக்கு முன்புதான் வெளியிட்டிருக்கின்றனர். டி.என்.ஏ குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட பின், இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் உலகில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பதற்றமான சூழல் நிலவும்போது மக்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கக்கூடாது.

பசுவின் சாணத்தை எரிப்பதால் வெளிவரும் புகை, நோயைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் வெறும் அனுமானம்தான். இத்தகைய நோய்களை ஆன்மிகத்தின் வழியாக அணுகாமல், அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

பசுவை ஒரு மதத்தின் குறியீடாக வைத்துக்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம் போன்று ஏதாவது நிகழும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்குதான் நிலவுகிறது. பசுவின் சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில்தான் பஞ்சகவ்யம் போன்ற மருந்துகளைத் தயாரிக்கின்றனர். அவற்றில் காணப்படும் பாக்டீரியா மண்ணுக்கு நல்லது செய்வை என்பதால் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு இது ஓகே. ஆனால், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இவை மருந்தாகப் பயன்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த நேரத்தில் மாற்று மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவ நிபுணர்கள், முதலில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய் பரவாமல் தடுக்கும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு வைரஸ்களின் தாக்கத்தைப் போக்குவதற்குப் பயன்பட்ட மூலிகைகளை வைத்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து பார்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் 1960-ம் ஆண்டு முதல் வேறு வேறு வகையாக இந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் இதற்கும் பயன்படுமா என்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரங்கள் இல்லாத தகவல்களையெல்லாம் பரப்பக்கூடாது" என்றார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் `சூத்ரா' என்ற பெயரில் பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்குச் சம்பளம் வழங்கவே நிதியில்லாத நிலையில், பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ள பல கோடியை ஒதுக்கியுள்ளதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/health/healthy/can-cow-dung-cure-corona-virus

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.