Jump to content

இர‌ண்டு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் தியாக‌த்தால் உயிர் த‌ப்பிய‌ ப‌ல‌ ஆயிர‌ம் உற‌வுக‌ள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

unnamed.jpg

 

1993ம் ஆண்டு ஆர‌ம்ப‌ கால‌த்தில் என‌து அத்தையும் ம‌ற்றும் ப‌ல‌ உற‌வுக‌ள் கிளாலி க‌ட‌லில் ப‌ய‌ணம் செய்த‌ போது , ப‌ட‌கில் ப‌ய‌ண‌ம் செய்த‌ அத்த‌னை பேரையும் சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை க‌ண்ட‌ம் துண்ட‌மாய் வெட்டி சுட்டு ந‌டுக் க‌ட‌லில் வைத்து கொன்று குவித்தார்க‌ள் அதில் ப‌லியாகி போன‌து என‌து அத்தையும்  , 

அதே ஆண்டு வ‌ர‌த‌ன் ம‌ற்றும் ம‌த‌ன் இர‌ண்டு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ள் எம் இன‌த்துக்காக‌ த‌ங்க‌ளின் உயிரை கிளாலி க‌ட‌லில் தியாக‌ம் செய்தார்க‌ள் , கிளாலி க‌ட‌லில் நின்ற‌ சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை க‌ப்ப‌லை மூழ்க‌டித்தார்க‌ள் , அந்த‌ அகோர‌ அடியோடு சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை பொது ம‌க்க‌ள் ப‌ய‌ணிக்கும் ப‌ட‌கை எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை ,  

சிறிது கால‌ம் க‌ழித்து கிளாலி க‌ட‌லால் நானும் ப‌ய‌ணித்து இருக்கிறேன் , இந்த‌ க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ளின் தியாக‌த்தால் தான் இன்று நானும் உயிருட‌ன் இருக்கிறேன் ம‌ற்றும்  இன்னும் ப‌ல‌ர்  , 

இர‌ண்டு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை நினைக்கும் போது ம‌ன‌தில் வ‌ரும் வ‌லி சொல்லில் அட‌ங்காத‌வை , இந்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ளுக்கு எங்க‌ளை விட‌ வ‌லி அதிக‌மாய் இருக்கும் / 

இர‌ண்டு க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளும்  பிற‌ந்த‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் , இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌து கிளாலி க‌ட‌லில் 

பெரும் க‌ண்ணீருட‌ன் வ‌ர‌த‌ன் ம‌த‌னுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலால் வரமுடியாத சிங்கள கொடிய இராணுவம் 
பின்னொரு நாளில் மக்கள் படகு ஏறிக்கொண்டு இருக்கும் மாலை நேரம் 
விமானத்தால் குண்டு வீசி பலரை கொன்றது 
அதில் எனது நண்பர் ஒருவர் இறந்துபோனார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.
இவர்களைப்  போன்றவர்களின்... தியாகங்கள் எல்லாம் வீணாகி போய் விட்டது எனும் போது,
மிகுந்த வேதனையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

கடலால் வரமுடியாத சிங்கள கொடிய இராணுவம் 
பின்னொரு நாளில் மக்கள் படகு ஏறிக்கொண்டு இருக்கும் மாலை நேரம் 
விமானத்தால் குண்டு வீசி பலரை கொன்றது 
அதில் எனது நண்பர் ஒருவர் இறந்துபோனார். 

முற்றிலும் உண்மை அண்ணா , நான் கிளாலி க‌ட‌லால் ப‌ய‌ணித்த‌ போது கூட‌ சிங்க‌ள‌ போர் விமான‌ம் எங்க‌ளின் ப‌ட‌கு இருக்கும் திசையை நோக்கி வ‌ந்த‌து ஆனால் அன்று அவ‌ர்க‌ள் குண்டு போட‌ வில்லை 

5 hours ago, தமிழ் சிறி said:

வீர வணக்கங்கள்.
இவர்களைப்  போன்றவர்களின்... தியாகங்கள் எல்லாம் வீணாகி போய் விட்டது எனும் போது,
மிகுந்த வேதனையாக உள்ளது. 

ஏதோ ஒரு நாள் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு சிறி அண்ணா , 

க‌ரும்புலிக‌ளால் தான் ஈழ‌த்தில் ப‌ல‌ ஆயிர‌ம் உயிர்க‌ள் காப்பாற்ற‌ ப‌ட்ட‌து , தாய‌க‌ பாட‌ல்க‌ளை கேட்டால் இவ‌ர்க‌ளின் முக‌ம் க‌ண் முன்னே வ‌ரும்  த‌மிழ் சிறி அண்ணா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.