Jump to content

கச்சத்தீவு திருவிழா: இராமேஸ்வரத்தில் இருந்து முதல்கட்டமாக 38 பக்தர்கள் வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ship.jpg

கச்சத்தீவு திருவிழா: இராமேஸ்வரத்தில் இருந்து முதல்கட்டமாக 38 பக்தர்கள் வருகை

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு முதல்கட்டமாக 38 பக்தர்கள் படகில் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை எமிழிபால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி வைக்கிறார். கூட்டு திருப்பலியை தமிழக பங்குத்தந்தையர்கள்,  யாழ்ப்பாணம் ஆயர், சிங்கள ஆயர்கள் நடத்துகின்றனர்.

தமிழ் மற்றும் சிங்களத்தில் நடைபெறும் கூட்டு திருப்பலியில் இலங்கை, தமிழக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் நாளை காலை 5 மணிக்கு திருப்பலிக்குப் பிறகு 10 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

கச்சத்தீவுக்குச் செல்வோருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய 4 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அதாவது கச்சத்தீவுக்கு சென்று திரும்புவோரை எதிர்வரும் 7 ஆம் திகதி,  இராமேஸ்வரத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த இந்த மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கச்சத்தீவு-திருவிழா-இரா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.