Jump to content

YES வங்கி பிரச்சினை: இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி


Recommended Posts

கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது.

பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 ஆக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து, 73 ரூபாய் 78 காசுகளாக இருந்தது.

https://www.polimernews.com/dnews/102822/YES-வங்கி-பிரச்சினை:-இந்தியபங்குச்-சந்தைகளில்வர்த்தகம்-கடும்-வீழ்ச்சி

Link to comment
Share on other sites

எல்லை மீறி கடன் வழங்கிய 'யெஸ்' வங்கி

புதுடில்லி: சொத்துக்களின் எல்லையை மீறி 'யெஸ்' வங்கி கடன் வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

கடன் சுமையால் 'யெஸ்' வங்கி தத்தளித்தது இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2017 முதல் யெஸ் வங்கியின் சிக்கல்களை மத்திய அரசு கண்காணித்து வந்தது. 2018 முதல் வங்கி கணக்குகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. 2019ல் இந்த வங்கிக்கு ஒருகோடி அபராதம் விதித்தது. யெஸ் வங்கியின் சில சேர்மன்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

சொத்துக்களின் எல்லையை மீறி வங்கியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் கட்டமைப்பு சீரமைக்கப்படும். மறு சீரமைப்புக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக இன்று காலையில் அமைச்சர் நிர்மலா நிருபர்களிடம் பேசியதாவது:

வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது. அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர், என்னிடம் உறுதி அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணக்கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2495761

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.