Jump to content

தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி

original.jpg

இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும்.

கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில கொலைகள் தற்கொலைகளாய் ஆக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
எங்களூரில் 70 – 80 களில் பால்டாயில்தான் தற்கொலைக்கான ஆயுதமாய் நம்பப்பட்டது அதற்கடுத்து அரளிச்செடிக்கும் அதில் இடமுண்டு.
“ஆசை வச்சேன் உன்மேல் மச்சான் அரளி வச்சேன் கொல்லையில” என்று பிரபலமான பாடலும் உண்டு.

அதற்கடுத்த காலங்களில் தற்கொலைகள் விவசாயிகள் பக்கம் திரும்பியது. உலகப் பொருளாதரத்தின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகளே. தன் பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பெரிதும் துயருற்றார்கள். ஒரு பக்கம் தண்ணீர்ப் பிரச்சனை இன்னொரு பக்கம் உரங்களால் நிலங்கள் பாழ்பட்டு விவாசயம் பொய்த்துப்போனது. அதையும் மீறி கடன்பட்டு விதைத்து பதரானவர்கள் ஏராளம். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டதும் இங்கு நிகழ்ந்தது.

அடுத்த கட்டமாய் தற்கொலைகளுக்கான பெரும் காரணி கடன் சுமை. மீட்டர் வட்டி, கரண்ட், ராக்கெட் வட்டியென கந்து வட்டி கும்பலின் அராஜகப் போக்கால் தற்கொலைக்கு குடும்பம் குடும்பமாக பலியான சம்பவங்களும் இங்கு நடந்தேறியது.

இப்படித் தொடர்ச்சியாய் தற்கொலைகள் இங்கு நடந்தகொண்டேயிருக்கிறது. இப்போது மன உலைச்சலால் தற்கொலை என்பது பெருகிக்கொண்டிருக்கிறது. வேலை பளு காரணமாய் சில தற்கொலைகள் நடந்தாலும் அதையும்தாண்டி உறவுசிக்கலால் நடைபெறும் தற்கொலைகளே இப்போது அதிகம், காரணம் தங்களை யாரோ ஒருவரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு அதிலிலிருந்து மீள முடியாமல் மரணிக்கும் போக்குதான் இன்றைய சூழலில் அதிகம் நடைபெறுகிறது.

எல்லோருக்கும் இப்போதைய தேவை காதுகள். தன் மகிழ்வை, துயரை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்பதே.

நம்மிடம் மரபு சார்ந்து அந்த நடைமுறை இருந்துள்ளது. கோயில் என்பதே அத்தகைய நடைமுறையில் ஒன்று. கடவுள் காதுல போட்டுட்டேன், கடவுள் மேல் பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன் என சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஏன் நந்தியின் காதுகளில் சொல்வதை நாம் பார்த்திருக்கலாம். சொல்லமுடியாத துயர்களை இதுபோல் இறக்கிவைத்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள செய்துவிடுவார்கள். அவர்களுக்கு அதுவே பெரிய விடுதலை உணர்ச்சிகளைக் கொடுத்துவிடும். காதுகள் என்பது எப்போதும் தேவையாய் இருந்திருக்கிறது… இருக்கிறது. காதுகள் நம்பகத்தன்மையுடையதாய் இருக்கிறதா? என்பதை இங்கே நாம் கவனித்தாகவேண்டும். ஒருவரிடம் எதன் பொருட்டோ ஒரு நம்பிக்கையில் பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நெருக்கமாகி எல்லாவற்றையும் சொல்லிவிடுவது, சொல்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை வரும்போது அந்த நேரம் வரும் யாரோ ஒருவர் தன் காதை கொடுக்க மறுபடியும் ஒன்றிலிருந்து தொடங்குவது என ஒரு தொடர்கதையாகிறது. இதற்கு முன் காதை கொடுத்தவர் புறக்கணிக்கப்படும் போது அவர் முன்னவர் சொன்னதை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதை வாடிக்கையாக்குகின்றார். இப்படத்தான் இங்கு பல உறவுகளில் விரிசல் உண்டாகுகின்றன.

இங்கு காதுகள் பல நேரங்கள் வாய்களாக மாறிவிடுவதே இத்தற்கொலைகள் நடக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. தன் பலவீனங்களை மற்றவரிடம் பகிரும்போது அதை அவர்கள் அவர்களின் பலமாக எடுத்துக்கொண்டு அத்துமீறல்களைத் தொடர அதன் வழியாகவும் தற்கொலைகள் நடக்கின்றன.

istockphoto-1051053088-170667a-300x300.j

அதீத அன்பு என்பதே இங்கு பெரும் மனஉளச்சலை தருகின்றது. தான் யாரிடம் வேண்டுமானாலும் அன்பாய் இருக்கலாம் பேசலாம், பழகலாம் ஆனால் தன்னை சார்ந்த ஒருத்தர் தன்னைத்தவிர யாரிடமும் அன்பு செலுத்தவோ பழகவோ பேசக்கூடதென்பது இங்கு எழுத்தப்படாத விதியாய் இருக்கிறது. அதுதான் இங்கு பிரச்சனைக்கு வித்திடுகிறது. இதில் ஆண், பெண் வித்தியாசமில்லை. தனக்கென்று வருகையில் அது அதீத அன்பாகவும் தன்னைச் சார்ந்தவருக்கு வருகையில் அது சந்தேகமாகவும் உருமாறுகையில்தான் அது பல விவாதங்களை உண்டாக்கி மனஉளச்சலுக்கு ஆட்படுத்துகிறது.

எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்றே இங்கு அன்பு வைத்து சூதாட்டத்தை நடத்துகிறது. இதில் ஏற்படும் வெற்றி தோல்விகளே இம்மாதிரியான தவறான முடிவுகளை நோக்கி தள்ளுகிறது. அதன் பொருட்டே இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது.

அன்பு என்ற ஒன்று எல்லோராலும் கைவிடப்பட்ட இவ்வுலகில் இத்தகைய தற்கொலைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
 

https://uyirmmai.com/செய்திகள்/சமூகம்/தற்கொலைகள்-கற்பிப்பது-என/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

எல்லோருக்கும் இப்போதைய தேவை காதுகள். தன் மகிழ்வை, துயரை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்பதே.

அன்பு என்ற ஒன்று எல்லோராலும் கைவிடப்பட்ட இவ்வுலகில் இத்தகைய தற்கொலைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவோம்

நல்லதொரு கட்டுரை.... கிருபன். :)
அந்த வகையில்... யாழ்.களமும், எமக்கு ஒரு வடிகால் என்பதில்.. சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எல்லோருக்கும் இப்போதைய தேவை காதுகள். தன் மகிழ்வை, துயரை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்பதே.

மன்மதலீலை திரைப்பட காட்சிகள்  நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

On 3/6/2020 at 2:10 PM, கிருபன் said:

அடுத்த கட்டமாய் தற்கொலைகளுக்கான பெரும் காரணி கடன் சுமை. மீட்டர் வட்டி, கரண்ட், ராக்கெட் வட்டியென கந்து வட்டி கும்பலின் அராஜகப் போக்கால் தற்கொலைக்கு குடும்பம் குடும்பமாக பலியான சம்பவங்களும் இங்கு நடந்தேறியது.

இப்படித் தொடர்ச்சியாய் தற்கொலைகள் இங்கு நடந்தகொண்டேயிருக்கிறது. இப்போது மன உலைச்சலால் தற்கொலை என்பது பெருகிக்கொண்டிருக்கிறது. வேலை பளு காரணமாய் சில தற்கொலைகள் நடந்தாலும் அதையும்தாண்டி உறவுசிக்கலால் நடைபெறும் தற்கொலைகளே இப்போது அதிகம், காரணம் தங்களை யாரோ ஒருவரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு அதிலிலிருந்து மீள முடியாமல் மரணிக்கும் போக்குதான் இன்றைய சூழலில் அதிகம் நடைபெறுகிறது.

 

நாம் வாழும் இன்றைய சூழல் மற்றையவர்களுக்காக, அதாவது நாமும் விடுமுறை சென்றோம்; நாமும் பென்ஸ் ஓடுகின்றோம்; நாமும் ஐ போன் 10+ வைத்துள்ளோம் எமது வீட்டிலும் தடாகம் உள்ளது ... 

இது போன்ற நிலைமைகளால் பணத்தை நிர்வகிக்கமுடியாத தெரியாத விரும்பாத ஒரு நிலை.

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள கட்டுரை கிருபன்.....!  👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2020 at 06:10, கிருபன் said:

எல்லோருக்கும் இப்போதைய தேவை காதுகள். தன் மகிழ்வை, துயரை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்பதே

உண்மைதான். இன்றறைய அசாதாரன சூழ்நிலையில், உளரீதியான உடல்ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்குவோர் அதிகரிக்க கூடும் என்றும். ஏற்கனவே சிக்கலில் இருப்போரின் மனநிலை மேலும் பாதிக்கப்படும் எனவும் கூறுகிறார்கள்.. இந்நிலையில் நம்பிக்கையானவர்களுடன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதால் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்படும்.. 

On 7/3/2020 at 06:10, கிருபன் said:

காதுகள் நம்பகத்தன்மையுடையதாய் இருக்கிறதா? என்பதை இங்கே நாம் கவனித்தாகவேண்டும்

ஆனால் காதுகள் நம்பிக்கை உரியனவா?  

 

இந்த கட்டுரையை இணைத்தமைக்கு நன்றிகள் கிருபன் அண்ணா!!

On 8/3/2020 at 06:32, ampanai said:

 

நாம் வாழும் இன்றைய சூழல் மற்றையவர்களுக்காக, அதாவது நாமும் விடுமுறை சென்றோம்; நாமும் பென்ஸ் ஓடுகின்றோம்; நாமும் ஐ போன் 10+ வைத்துள்ளோம் எமது வீட்டிலும் தடாகம் உள்ளது ... 

இது போன்ற நிலைமைகளால் பணத்தை நிர்வகிக்கமுடியாத தெரியாத விரும்பாத ஒரு நிலை.

  

உண்மைதான்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.