Jump to content

பொருட்களைத் தேடுகிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

D646-E39-B-C172-4-E9-F-ADED-BD5459-B12-D
வீட்டுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை  பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று  வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு  வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும்.

இன்றும் அப்படித்தான். பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் வாகனத் தரிப்பிடம் நிறைந்திருந்தது. தரிப்பிடம் கிடைத்து அதில் எனது வாகனத்தை நிறுத்துவதற்கே 20 நிமிடங்கள் போயிற்று.

பல்பொருள் அங்காடிக்குள் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். பொருட்கள் குறைந்திருந்தன. மா,சீனி என்பவை அடுக்கி வைக்கப் பட்டிருந்த தட்டுக்கள் நிர்வாணமாக இருந்தன. கை கழுவும் சவர்க்காரங்கள் இருந்த இடம் தெரியாமல்  காணாமல் கரைந்து போயிருந்தன.

பல்பொருள் அங்காடியில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை செய்கிறார். அவர் நிறையக் களைத்துப் போயிருந்தார். அவரது முகத்தைப் பார்த்ததும்ஆசாமிக்கு கொரோனா வந்திருக்குமோ?” என்றொரு அச்சம் எனக்கு வந்தது. கைகளை பாதுகாப்பாக  பொக்கெற்றுக்குள் மறைத்துக் கொண்டேன்.

அவரிடம் கேட்டேன்,” என்ன எல்லாம் வெறுமையாக இருக்கு?”

“அண்ணை, இப்ப ஐஞ்சு நிமிசத்துக்கு முதல்தான் இரண்டு பலற்றை (palette) மாவும் சீனியும் அடுக்கினனாங்கள். சனங்கள் விழுந்தடிச்சு உடனேயே அள்ளிட்டுதுகள். மாவையும் சீனியையும் விடுங்கோ  சாப்பாட்டுச் சாமான்கள். ரொயிலற் ரிசுவையும்  ஆளாளுக்கு ஐஞ்சு பத்து பக்கெற் எண்டு அள்ளுதுகள். இப்ப இருப்பு  முடிஞ்சுது. இனி திங்கள் கிழமைதான். எதுக்கு ரொயிலற் ரிசுவை இப்பிடி வாங்கிறாங்களோ தெரியாது. ரொயிலற் ரிசு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தரும் எண்டு எங்கையாவது இன்டர்நெட்டிலை போட்டிருக்கிறாங்களோ?”

“இஞ்சை மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இதுதான் நிலமை. Australia விலை ரொயிலற் ரிசு வாங்கிறதிலை பிரச்சினை வந்து பொலீஸ் வந்து எலெக்ரிக் சொக் குடுத்துத்தான் நிலமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தவை எண்டு செய்தி வந்திருக்குது

“இந்த மாதம் செய்ய வேண்டிய முழு வேலைகளையும் இந்த ஒரு கிழமையிலை செய்திட்டன். இப்பிடியே போனால் எனக்கு கொரோனா வந்திட்டுது என்று சொல்லத்தான் இருக்கு

அவரிடம் இருந்து விடைபெற்று ஒப்புக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். இன்ன இன்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற துண்டுச் சீட்டு கையில் இருந்தது. காசு கொஞ்சமாக செலவானதில் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தது என்னவோ உண்மை

ஏன் எழுதினதெல்லாம் வாங்கவில்லை என்று வீட்டிலே கேள்வி வந்தால்,  பதில் “கொரோனா”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்குச் சட்டம் இருந்த காலம் தான் ஞாபகம் வருகுது;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவுப் பொருட்களை  முற்கூட்டியே.... வாங்குவதை ஏற்றுக் கொண்டாலும்,
ரொய்லற்  பேப்பரை... தொகையாக ஏன் வாங்குகின்றார்கள் என்று புரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் வண்டிலில் இருப்பவர்  பேப்பர் மட்டும்தான் எடுத்து கொண்டு போகிறார்.வேறு சாமான்கள் வாங்கியதாய் தெரியவில்லை......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அவரிடம் இருந்து விடைபெற்று ஒப்புக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். இன்ன இன்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற துண்டுச் சீட்டு கையில் இருந்தது. காசு கொஞ்சமாக செலவானதில் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தது என்னவோ உண்மை

இந்த நிலை எங்கும் தான்.நான் கூடுதலாக கொஸ்கோவில்த் தான் தேவைக்கேற்ப வாங்குவது.
அங்கு போனால் கார் நிற்பாட்ட இடமில்லை.சரி என்று ஒரு மாதிரி நிற்பாட்டிவிட்டு போனால் வண்டில் இல்லை.உள்ளே போனால் சாமானுகள் மிகக் குறைவே.
எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது.மகளுக்கு கோல் பண்ணி நிலைமையை சொன்னேன்.அப்பா வாங்கிறவங்கள் வாங்கட்டும் நீங்கள் வாங்கப் போன சாமான்களை மாத்திரம் வாங்கிக் கொண்டு வாங்கோ என்றாள்.
சரி என்று வீடு வந்து மகளும் கணவரும் வேலையால் வந்த பின் நிலைமை இப்படி இருக்கு.குழந்தையுடன் இருக்கிறனீங்கள் கட்டாயம் ஏதாவது வாங்கி வைத்திருக்க வேண்டும்.
சாப்பாடு இல்லை எனும்போது தான் கூட பசி எடுக்கும்.நீங்கள் வேணுமென்றால் பட்டினி கிடவுங்கோ என்னால முடியாதப்பா என்று ஒரு எச்சரிக்கைத் தொனியில் சொல்லியிருக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

உணவுப் பொருட்களை  முற்கூட்டியே.... வாங்குவதை ஏற்றுக் கொண்டாலும்,
ரொய்லற்  பேப்பரை... தொகையாக ஏன் வாங்குகின்றார்கள் என்று புரியவில்லை.  

இஞ்சை பாருங்கோ நாயடி பேயடி நடக்குது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

 

 

பெரிய ரெக்னிக்கோடை மிசின் இருந்தாலும்....
கையாலை கழுவுற மாதிரி வராது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பெரிய ரெக்னிக்கோடை மிசின் இருந்தாலும்....
கையாலை கழுவுற மாதிரி வராது.😎

 

கையால் எப்படி கழுவுவது.... என்று தெரியாதவர்கள், 
இந்தக் காணொளியை பார்த்து...  பயன் அடையவும்.

ஆப்பிரிக்காவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் என்பதால்...
இந்த முறையில்... ஆசன வாயிலை சுத்தம் செய்யவும். :grin:

Link to comment
Share on other sites

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை
வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!
Link to comment
Share on other sites

On ‎3‎/‎7‎/‎2020 at 6:37 AM, Kavi arunasalam said:

வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை  பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று  வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு  வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும்.

ஒரு கடையில் சென்று பல அங்காடி பொருட்களை வேண்டுவதை விட. பல கடைகள் ஏறி ஒரு பொருளை வாங்குவதும் தனி சுகம் 🙂 

செயலிகள்  கூட அதற்கு உதவும் !

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

ஒரு கடையில் சென்று பல அங்காடி பொருட்களை வேண்டுவதை விட. பல கடைகள் ஏறி ஒரு பொருளை வாங்குவதும் தனி சுகம் 🙂 

செயலிகள்  கூட அதற்கு உதவும் !

உங்களுக்கு ஒரு காதலி/காதலன் இருக்கும் பொழுது அது சுகமாகவும்.... திருமணமான பின்னர் சில சமயங்களில் ஒரு சுமையாகவும் கூட இருக்கும் 🙂 🙂 

 

காதலும் கடந்து போகும்... கலியாணமும் கடந்து போகும் 🤣

ஆனால், கடைகள் இருக்கவே இருக்கும் !!!

3 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!

முதலில் வணக்கம். அமெரிக்காவில் பிறந்து தாய் மொழியில் எழுதுகிறீர்களே, உங்களுக்கும் உங்களை வளர்த்த பெற்றோர்களுக்கும் நன்றிகள். எங்களுக்கும் பெருமையாக உள்ளது. உங்களுடன் தமிழில் உரையாடுவது / குதர்க்கப்படுவது என்பது 🙂 

அடுத்து, உங்கள் நாட்டில், அமெரிக்காவில் பொருட்கள்  மலிவு தான். ஆனால், ஒரு சிக்கல்.

எல்லாவற்றிலும் பெரிய அளவில் விற்று விடுவார்கள். அதில் பாதியை எறியவேண்டி அல்லவா வந்துவிடும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைக்கு சுப்ப மார்க்கெட் போனேன் ...பாஸ்தா,நூடில்ஸ் ,அரிசி ,ரின்னின் அடைத்து வரும் சாமான்கள்  அதை விட  டொயிலட் பேப்பர் செக்சன் எல்லாம் வெறி சோடிக் கிடக்குது ....ஏன் இப்படி பொருட்களை வாங்குகிறீர்கள் என கேட்க இத்தாலியில் வந்து ஒரு பிரதேசத்தையே தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள் ...அதே மாதிரி இங்கு வந்தால் என்று முன்னெச்சரிக்கையாய் வாங்குகிறார்கள்களாம்....இதுக்கே இப்படி என்றால் மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால்????

வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் 😙

ஏன் டொயிலட் பேப்பருக்கு அடிபடுறாங்களோ தெரியவில்லை ...பேப்பர் முடிந்தால் கழுவலாம் தானே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

வேறு எந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவானவை!

 வலிமை மிக்க அமெரிக்காவிலை கொலை கொள்ளையளும் புளுத்த மலிவுதானே...😎

Link to comment
Share on other sites

நான் கூகிள் மொழிபெயர்ப்பையும், ஆங்கிலத்திலிருந்து தமிழையும், நேர்மாறாகவும் பயன்படுத்துகிறேன்

 

நான் மற்ற போட்களையும் பயன்படுத்துகிறேன்.
Link to comment
Share on other sites

வலிமை மிக்க அமெரிக்காவிலை கொலை கொள்ளையளும் புளுத்த மலிவுதானே... Yes, True,

American population is 350 million, about 35 million dirt poor (White and Black). Capitalism thrive here, 88 Million foreign born Americans thriving in this country, 78% hotels are owned by Indian Americans, 63% Doctors are Indian Americans, IT and Engineering are about 70% Indian Americans, 91% low wages jobs are done by Latino Americans, 93% sports players are African Americans, 82% prison population is African Americans, Elite 14% industrialist are Asian Americans (Japanese, Chinese, Korean, Taiwanese, etc..) No other nation on this earth has such a diverse population with 260 million middle class people with $ US 110,000 per year income.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sean said:

கடவுளுக்கு நன்றி நான் அமெரிக்காவில் பிறந்தேன், வலிமைமிக்க அமெரிக்காவில் பொருட்களுக்கு பஞ்சமில்லை

தம்பி நானும் அமெரிக்கா தான்.

கன இடங்களுக்கு போக வேண்டாம் ஒருக்கா கொஸ்கோ வரை போட்டு வாங்கோ.

வழமையான கொஸ்கோ வா?எப்படி நிலைமை என்று பார்த்து பின்னர் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sean said:

American population is 350 million, about 35 million dirt poor (White and Black). Capitalism thrive here, 88 Million foreign born Americans thriving in this country, 78% hotels are owned by Indian Americans, 63% Doctors are Indian Americans, IT and Engineering are about 70% Indian Americans, 91% low wages jobs are done by Latino Americans, 93% sports players are African Americans, 82% prison population is African Americans, Elite 14% industrialist are Asian Americans (Japanese, Chinese, Korean, Taiwanese, etc..) No other nation on this earth has such a diverse population with 260 million middle class people with $ US 110,000 per year income.

இது எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் இன்றைக்கு சுப்ப மார்க்கெட் போனேன் ...பாஸ்தா,நூடில்ஸ் ,அரிசி ,ரின்னின் அடைத்து வரும் சாமான்கள்  அதை விட  டொயிலட் பேப்பர் செக்சன் எல்லாம் வெறி சோடிக் கிடக்குது ....ஏன் இப்படி பொருட்களை வாங்குகிறீர்கள் என கேட்க இத்தாலியில் வந்து ஒரு பிரதேசத்தையே தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள் ...அதே மாதிரி இங்கு வந்தால் என்று முன்னெச்சரிக்கையாய் வாங்குகிறார்கள்களாம்....இதுக்கே இப்படி என்றால் மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால்????

வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் 😙

ஏன் டொயிலட் பேப்பருக்கு அடிபடுறாங்களோ தெரியவில்லை ...பேப்பர் முடிந்தால் கழுவலாம் தானே 🤔

சனம்  ஒன்லைன் ஒன்று இருப்பதையே மறந்து கொள்ளுப்படுது அதே costco ஒன்லைனில் உள்ளது நேற்று மட்டும் மாற்றி உள்ளார்கள் டொய்லெட்  பேப்பர் ஆளுக்கு இரண்டு பண்டில்  என்று .மூன்றாவது உலகப்போர் வந்தால் ஓடவேண்டிய  தேவை இருக்காது முதலில் உயிர்  இருந்தால்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேயாவிற்கு....  "ரொய்லற் பேப்பர்" சீனாவில் இருந்து மட்டும்தானாம் இறக்குமதியாகின்றது.
சீன  இறக்குமதி தடைப்பட்டால்... என்ன செய்வது என்றுதான்....
சனம் அடிபட்டு.... ரொய்லற் பேப்பரை வாங்கியுள்ளார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேயாவிற்கு....  "ரொய்லற் பேப்பர்" சீனாவில் இருந்து மட்டும்தானாம் இறக்குமதியாகின்றது.
சீன  இறக்குமதி தடைப்பட்டால்... என்ன செய்வது என்றுதான்....
சனம் அடிபட்டு.... ரொய்லற் பேப்பரை வாங்கியுள்ளார்கள்.  

உண்மைதான் சிறித்தம்பி!  இஞ்சை ஜேர்மனியிலை கன சாமான்கள் தட்டுப்பாடாய் வந்துட்டுது. அது நிவர்த்தியாக இன்னும் 3,4 மாதங்கள் ஆகுமாம். இப்ப தெரியுதெல்லோ எல்லாம் எங்கையிருந்து வருதெண்டு??????? :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.